Apr 20, 2012

காய்கறிகளின் பங்கு அளப்பெரியது






காய்கறிகளின் பங்கு அளப்பெரியது

சைவ உணவை உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்பார்கள் . சத்தான மரக்கறி வகைகள் எமக்கு மிகுந்த பயனை தருகின்றன .
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.
எமது உடம்பில் உள்ள நச்சு தன்மையை அகற்றி உடலை சுத்தம் செய்கின்றன .
அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.


சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக

யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.

ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து

Apr 19, 2012


   
கணணி செய்தி
பேஸ்புக்கி​ற்கான Short cut Keyக்கள்
[ வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012, 12:25.13 பி.ப GMT ]
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.

இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது.


கணணி செய்தி
பேஸ்புக்கி​ற்கான Short cut Keyக்கள்
[ வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012, 12:25.13 பி.ப GMT ]
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது.
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத்தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன்படுத்த வேண்டும்.
குரோமிற்கான Short cut Keyக்கள்
Alt+m: New Message
Alt+0: Help Center
Alt+1: Home Page
Alt+2: Profile Page
Alt+3: Manage Friend List
Alt+4: Message List
Alt+5: Notification Page
Alt+6: Account Setting
Alt+7: Privacy Setting
Alt+8: Facebook Fan Page
Alt+9: Facebook Terms
Alt+?: Search Box
Firefoxல் பயன்படுத்தும் போது உதாரணமாக,
Shift+Alt+m: New Message என உபயோகிக்க வேண்டும்.
Add caption
"அட்சய திருதியை + புகைப்படம்" அட்சயத் திருதியை இரண்டு நாட்களாக மாற்றிவிட்டதாக வந்த செய்தியை படித்து சிரித்தாலும், இது காலப்போக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வந்த "சித்திரை தமிழ் புத்தாண்டை" அரசியல் ஆதாயத்துக்காக "தை" முதல் நாள் மாற்றியது போல, வியாபார உள் நோக்கோடு நம் வியாபாரிகளாய் மாற்றிக்கொண்டது என்பதை வரும் தலைமுறைகள் மறந்து தங்கள் சேமிப்பை கரைக்க போகிறார்கள் என்ற வேதனையும் நெருடுகிறது. யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை? என ஒரு சந்தேகமும் கூடவே வருகிறது? "அட்சயத் திருதியை" என்று இந்துமதம் சொல்வது என்ன? என்பதை புரிந்து கொள்ள எடுத்த முயற்சியே இந்த பதிவு. பூரியசஸ் மன்னரின்

Apr 18, 2012

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

furuits













மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள் உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன? 1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும். 2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும் 3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும். 4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்

உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு

மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது ஐ.பி.எம் நிறுவனம். இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது. ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும்

செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர்

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர் இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர் செயல்படுகிறது. மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. மனித மூளை செயல்படுவதைத் துல்லியமாக விளக்க முடியாது. கம்ப்யூட்டர் செயல்படுவதை விளக்க முடியும்.மூளையில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் பயன்படுத்த முடியாது.பல தகவல் அடி மனதில் பதிவாகி இருக்கும்.அவற்றை எளிதில் மீட்டுக் கொண்டு வர முடியாது. கம்ப்யூட்டர் நினைவகத்தில் பதிவாகியுள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் மீட்டுக் கொண்டு வரமுடியும்.அது முழுமையானதாகவும் இருக்கும்.இந்த வகையில் மனித மூளையை விடக் கம்ப்யூட்டரே சிறந்தது என்று கூறலாம். மனித மூளை தன் நினைவில் உள்ள ஒன்றை சற்று மாறுபட்டாலும் கூட இனங் கண்டு கொள்ளும். கம்ப்யூட்டரினால் அது முடியாது.மூளை செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல் முழுவதும் மூளையிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வெளியிலிருந்து நாம் கம்ப்யூட்டருக்குக் கொடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரில் பிழை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டு விட்டாலும் அவை வெளியிடும் தகவல்கள் முடிவுகள் அர்த்தமில்லாதவையாக இருக்கும். ஆனால் மனித மூளையில் சிறு சிறு தவறுகளினால் பெரும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. கம்ப்யூட்டர் தானாகச் சிந்தித்து ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றதாக இருக்கின்றது.ஆனால் மனிதனின் அன்றாட செயற்பாட்டில் சூழ்நிலை பணியின் தன்மை முதலியவற்றிற்கேற்ப சிந்தித்து செயற்படுதல் முக்கியமாகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பல இலட்சம் கட்டளைகளை ஒரு வினாடியில் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டரின் செயல் வேகமோ பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் நினைவக வசதியோ உதவியாக இருப்பதில்லை. மனித மூளையைப் போன்று சிந்தித்துச் செயலாற்றும் நுண்ணறிவு கம்ப்யூட்டருக்குத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிற இந்த மனித நுண்ணறிவினை நாம் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனின் மூலம் உயிரற்ற கருவியாகிய கம்ப்யூட்டரை மனிதனைப் போன்று சிந்தித்துச் செயற்படுத்துவதற்கேற்ப நுண்ணறிவு வாய்ந்த கருவியாக வடிவமைக்க முடியும். இவ்வகையான கணிப்பொறிகள் மனிதனின் ஜம்புலன்களின் செயல்திறான பார்த்தல் கேட்டல் தொடு உணர்ச்சி பேசுதல் முதலிய அனைத்தையும் பெற்று விளங்கும். இயந்திர மனிதர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவினைக் கொடுத்து மனிதர்களைப் போலவே படங்களையும் செய்திகளையும் காட்சிகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொள்ளவும் செய்யலாம். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த கணணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையான கணணிகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது கற்பனைக்கெட்டாத பல கடினமான பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராச்சிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

பி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்

பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா! பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும். இந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப் பட்டும் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங்கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள். அப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப் படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும். உங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக்கும். அப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது. இதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது. இந்த தளத்தின் சேவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கு நன்கொடையை நீங்கள் அனுப்பலாம். ஆனால், சேவைகள் முற்றிலும் இலவசமே.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...