Aug 20, 2012

மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகளின் வீடியோப் பதிவு இணைக்கப்பட்டுள்ளது!

ஹேர் டை' உபயோகித்தால், "கேன்சர்' வருமா?


கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?
-

இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?

சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?

முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?

"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?
- .

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?

தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன.

Aug 19, 2012

சீன மாணவி உலக அழகியாக தேர்வு!


சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி 2012ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இறுதிச்சுற்றில் இடம் பிடித்த இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.  இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார்.


கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.

கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இயற்கை மருத்துவம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும்

முகப்பரு, தழும்பு மாற…

உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது.
இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம்.

முதலிடத்தை நோக்கி அசின்?

. மிகச்சாதாரண தோற்றம் கொண்டவர் அசின். அவரால் பாலிவுட் கடலில் நீந்தமுடியுமா என்று வட இந்திய மீடியாக்களால் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது நிலமையே தலைகீழ்! பாலிவுட்டின் இரண்டாவது பெரிய நாயகி என்று அதே மீடியாக்கள் அவரை புகழ்கின்றன. அசின் கடந்த ஆண்டு  நடித்த ‘போல்பச்சன்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த ‘கஜினி’, ரெடி’,‘ஹவுஸ்புல்-2’ படங்களும்  100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு அதிரடியாக உயர்ந்து விட்டார் அசின்!


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

Aug 18, 2012

மூளையின் செயல்பாட்டை சொக்லேட் மேம்படுத்தக்கூடியது

மூளையின் செயல்பாட்டை சொக்லேட் மேம்படுத்தக்கூடியது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சொக்லேட்டில் “கோகோ” என்ற வேதிப்பொருள் உள்ளது.
இத்தகைய சக்லேட்டை தினந்தோறும் உட்கொண்டால், மூளையின் செயல்பாடு மேம்படுவதுடன், வயதான நோயாளிகளுக்கு ஏற்படும் பைத்தியம், ஞாபக மறதி போன்ற நோய்களை தடுத்து விடும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.



Aug 17, 2012

கடுமையான பதிவுகளால் ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் 'பேஸ் புக்" கணக்கு





தி.மு.க. தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்" கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி" என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை ஆரம்பித்தார்.

ஆரம்பித்த நாள் அன்றே சுமார், 2,700 பேர் அந்தப் பக்கத்தில் இணைந்தனர். மறு நாளான நேற்று மாலை வரை, சுமார் 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் 'பேஸ் புக்" பக்கத்தில் 'டெசோ" மாநாட்டுத் தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும் சோசியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். டிவிட்டரில் தனது கணக்கைத் துவக்கவுள்ளார்
பாஜக தலைவர் அத்வானி இப்போதெல்லாம் தனது பேஸ்புக் அக்கெளண்டில் தான் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கம் மிக மிகப் பிரபலமானதாகும். அங்கு அவருக்கு 8 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.
இந் நிலையில் டிராமா, சினிமா, டிவி என அந்தந்த கால டெக்னாலஜிக்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இயக்கம் திமுக. ஆனால், இன்டர்நெட்டில் திமுக அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.
இப்போது தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேஸ்புக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந் நிலையில் கருணாநிதியும் சமூக வலைத்தள உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ள கருணாநிதி இனி அதிலும் தனது கருத்துகளை வெளியிடவுள்ளார்.
கருணாநிதி டிவிட்டர் பக்கம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...