Oct 30, 2012

சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது



சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது
நியூயார்க், அக். 30-
அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கான கட்டுமான பொருள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் என்டீவர் விண்கலம் மூலம் அனுப்பி வந்தனர். ஆனால் அந்த விண்கலம் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றது.
எனவே, தனியார் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவற்றை சமீபத்தில் அனுப்பி வைத்தனர். ஆளில்லாமல் இயங்கும் அந்த விண்கலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளிக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திட்டமிட்டபடி 18 நாட்கள் கழித்து நேற்று அமெரிக்காவின் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதை நீர்மூழ்கி வீரர்கள் குழு பத்திரமாக மீட்டது.

அப்பிளின் சரிவு ஆரம்பம்?


 
By Kavinthan Shanmugarajah
2012-10-30 14:12:57

 
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
 
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
 
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
 
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி

கரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி நகர்கிறது



காரின் மீது விழுந்து கிடக்கும் மரம்
அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்!

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்! 

News Serviceஅமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது! அமெரிக்காவை தாக்கி வரும் சான்டி புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.
  
சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது. வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை. இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை. அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்! சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன! சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Oct 29, 2012

தீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எச்சரிக்கை


sandy_canada_001சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில், சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர்

சூறாவளி தாக்கலாமென்ற எச்சரிக்கையை அடுத்து வடக்கு கரையோர மக்கள் இரவிரவாக வெளியேற்றம்; கொட்டும் மழையில் பெரும் அவலம்


jaffna_floodரொஷான் நாகலிங்கம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சூறாவளி தாக்களாமென்ற அபாய அறிவிப்பையடுத்து வடபகுதி கரையோர மக்கள் இரவிரவாக அவசர அவசரமாக கொட்டும் மழையில் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்தனர்.
வங்காளவிரிகுடாவில் இலங்கையின் வடக்கே நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி வடக்கு,கிழக்கு கரையோரத்தால் கடக்கலாமென்று வானிலை அவதான நிலையம் நேற்றிரவு அவசர அவசரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

வலி நீக்க வழிகள் வந்தாச்சு!


ன்றைய நவீன  மருத்துவத்தில் எப்பேர்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக வலிகளைப் போக்குவதில் பிரபலமாகி வருகிற
நவீன சிகிச்சைகள் பிரமிக்க வைக்கின்றன. மருந்துகளும் மாத்திரைகளும் ஒரு பக்கமிருக்க, வலிகளைப் போக்க வந்திருக்கிற லேட்டஸ்ட் கருவிகள் பல வருடங்களாக வலிகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு வரப்பிரசாதமாக அமையும். வலிகளைப் போக்க அறிமுகமாகி யிருக்கும் லேட்டஸ்ட்கருவிகள் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நாள்பட்ட வலிகளுக்கு, உதாரணத்துக்கு புற்றுநோய் வலிகளுக்கு, மருந்து தடவிய ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ஒட்டிக்கொள்வதன் மூலம்

வீடுகளில் முடங்கினர் மக்கள் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை கட்டிப்போட்ட சாண்டி புயல்


நியுயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்குவதற்கு சாண்டி புயல் வந்து கொண்டிருப்பதால், அப்பகுதியில் உள்ள மாகாணங்களில் பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் சுழற்றி அடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை பதம் பார்த்தது. இப்பகுதியில் புயல் காரணமாக 65 பேர் இறந்தனர். இந்நிலையில், அந்த புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சாண்டி புயல், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்

தமிழ் -கருத்துக்களம்-
சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும்
*******************************
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன்.தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப
்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம்.இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சூறாவளி அச்சுறுத்தல்...விசேட செய்தி...


Written By Admin on Monday, October 29, 2012



சூறாவளி அச்சுறுத்தல்; அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...

மீளக்குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் பெரும் அவதி..

முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து இன்றிரவு 80 km / h வேகத்தில் மினி சூறாவளி தாக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதனால் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு

உலகின் அதிக நட்புறவான நாடாக மலேசியா 10-வது இடத்தில் தேர்வு


பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29-உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளின் பட்டியலில் மலேசியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அண்மையில் Forbes நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சிறந்த வாழ்க்கைத் தரம், திருப்திகரமான சமூக, சுலபமான பொதுபோக்குவரத்து, மற்றும் தங்கள் நாடுகளை விட நல்லதொரு வீட்டு வசதி போன்றவையே மலேசியாவை சிறந்த நட்புறவான நாடாக திகழச்செய்துள்ளதாக Forbes தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது டுவீட்டர் அகப்பக்கத்தில் உலக மக்களை வரவேற்கிறோம் என கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரி இல்லாத காரணத்தாலும், மிகவும் அரிதான குற்றச்செயல்கள், மாசுபடாத சுற்றுச்சூழல் மற்றும், வருடம் முழுவதும் நீடிக்கும் கோடைக்காலம் போன்றவற்றால் Cayman தீவுகள் உலகிலேயே அதிக நட்புறவான நாடுகளாக முன்னணி வகிக்கின்றன.
Forbes நடத்திய இந்த ஆய்வில், உலகிலே அதிக நட்பான நாடாக கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நியுசிலாந்து ஐந்தாவது இடத்தையும்,  ஸ்பைன், இங்கிலாந்து, பெர்முடா, தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னர் மலேசியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...