Dec 23, 2012

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி! – வீடியோ

Posted on

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’  Death Valley National Park Inyo County, California 
அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசி த்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர்.  ஏன் தெரியுமா? 
இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில்

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்

Posted on  

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான வகையில் இருக்கும் இடங்களைப் பார்ப்பதில் அதிக முக்கியத்துவத்தை தான் கொடுத்துவருகின்றனர்.
மேலும் சுற்றுலாத்தலங்கள் என்று சொன்னதும், அனைவரின் மன தில் முதலில் வந்து நிற்பது கோயி ல்கள் தான். ஆகவே அத்தகைய கோயில்களில் மிகவும் அபூர்மா மாகவும், ஆச்சரியமூட்டும் வகையி லும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப் போமா!!!
மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)

பாங்காக்கில் அமைந் துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர்சிலையா னது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலை க்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
.
ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda)
புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக் கிய மானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேட கோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த் தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும் பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்ப தோடு, இரவி லும், பகலிலும் நன்கு மின் னும்.
.
தக்த்சாங் மடம் (Taktshang Monastry)
பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின்மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற் கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.
.
தங்க கோயில் (Golden Temple)
இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் “ஹர்மந்திர்” ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார் வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத் தில் அமைந்துள்ளது.
.
பிரம்பனன் (Prambanan)
இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ் பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு விற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷி யாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங் கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக் கூடியவை.
.
வாட் ராங் குன் (Wat Rong Khun)
தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.
.
போரோபுதூர் (Borobudur)
இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோ புதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.
.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple)
உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்க நாதர் கோவில்தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப்புராணங்களி ன் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.

தான் வேட்டையாடியது கருவுற்ற மான் என்று தெரிந்ததும் தனது உயிரையே விட்ட‍ பெண்சிங்கம்!

Posted on

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு
த‌னது அகோரப் பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நெடு நேரப் போராட்டத்தி ற்குபிறகு ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறி து நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்ட அந்த பெண் சிங்கம், இதனால் கடும் அதிர்ச்சிக் குள்ளாகியது. உடனே தாயின் வயிற்றிலி ருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்த னம் மேற் கொண்டது. இறுதியில் அந்த பெண் சிங்கத்தின்  நீண்ட நேர முயற்சி பலனளிக் காது அந்த‌ மான் குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்திற்கு பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக் கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண் சிங்கம் இறந்து கிடந்தது…
மனிதர்களிடம் தொலைந்து போன கருணை மிருகங்களிடம் உண்டு என்பதற்கு இச்சிங்கம் ஓர் உதாரணம்
விதை2விருட்சம் பார்வையில் . . .
மனிதர்களிடம் இருக்க‍ வேண்டிய கருணை மிருகங்களிடம் உண்டு என்பதை மேலுள்ள‍ செய்தி உங்க ளுக்கு உணர்த்துகிறது.
மேற்காணும் செய்தியை முகநூலில் படித்த‍ நான், அந்த பெண்சிங் கத்தை நினைத்து நெகிழ்ந்தேன்.  மிருகங்க ளை வேட்டையாடி தனது வயிற்றுப் பசியினை தணித்துக்கொள்ளும் ஒரு பெண் சிங்கம் , இருந்தும், அய்ய‍ கோ!  தனது பசிக்காக, குட்டி ஈனும் ஒரு தாய் மானை வேட்டையாடி கொன்றுவிட்டோமோ என்ற குற்ற‍ உணர்ச்சி யிலும், அம்மானின் வயிற்றில் இரு ந்த குட்டியையும் காப்பாற்ற‍ முடிய வில்லையே என்ற சோகத்திலும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அந்த பெண் சிங்கம் உண்மையில் மனிதனாக பிறந்தி ருக்க‍ வேண்டும்.
மிருகங்களிடம் இருக்க‍ வேண்டிய கொடூரத் தன்மை மனிதர்களிடம் இருக்கிறது என்பதை கீழுள்ள‍ செய் தி உங்களுக்கு உணர்த்தும்
க‌டந்த சில ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் என்நினைவுக்கு வந்தது (செய்திதாள் மற்றும் தொலை க்காட்சிகளிலும் செய்திகளாகவே வந்த அதிர்ச்சி செய்தி தான் அது
ஒரு க‌லவரத்தில் கலவரக்காரர்களின் கையில் சிக்குண்ட ஓர் கர் பிணி பெண்ணை அந்த கல‌வரக்காரர்களில் கொடூர புத்தி கொண்ட ஒருவன் அவளையும்  கொன்று, அவளது வயிற்றை கிழித்து, அந்த சிசுவையும் எடுத்து, தனது கத்தியால் அதன் தலையை சீவிக்கொன் றான் என்பதே!

Dec 22, 2012

தெஹிவளை ஸ்ரீஆஞ்சநேயர் ஆலய திருவிழா 30இல் ஆரம்பம்



கொழும்பு, தெஹிவளை அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 9 தினங்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

அவுஸ்ரேலியா மீது வீழ்ந்த விண் கற்கள் =பற்றி எரியும் கட்டிடங்கள்

இன்று மதியம் 1-06 மணியளவில் அவுஸ்ரேளியவைல்
மக்கள் கடை அங்காடி மீது செயல் இழந்து வீழ்ந்த விண் கற்களினால் பற்றி
எரியும் கட்டிடங்கள்
முளுமையனா சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை வின் கற்கள் விழுந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதகா தெரிவிக்க பட்டுள்ள போதும்
இவை தொடர்பான தெளிவான தகவல்கள் தெரியவரவில்லை

Dec 18, 2012

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக தகவல்



‘‘மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperடிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் கவுன்ட் டவுன் பரபரப்பாக உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ‘அச்சச்சோ என்னவெல்லாம் ஆகுமோ’ என்ற பதற்றத்தில் பிரத்யேக பிரார்த்தனை, பாவமன்னிப்பு ஜெப கூட்டம் ஒரு பக்கம்.. ‘வுடு மாமு. டோன்ட் ஒர்ரி’ என்று டேக் இட் ஈஸியாக உற்சாகம், கொண்டாட்டம், ஸ்பெஷல் பார்ட்டி.. என அமர்க்களமாய் ஒரு பக்கம் என கலவை

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!

சந்திரனில் இரு விண்கலங்களை மோதி வெடிக்கச் செய்த நாசா விஞ்ஞானிகள்!
[Tuesday, 2012-12-18
News Service அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது. இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின. கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது.
  
மேலும் 487 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிலவை ஆய்வு செய்த இந்த விண்வெளி ஓடங்கள், 1,14,000 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது. சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றி

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

மாயன் கலண்டர். இரகுநாதையர் பஞ்சாங்கம், உலக அழிவு

யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் இருந்து ஒரு வாக்கிய பஞ்சாங்கம் ஆண்டு தோறும் வெளிவருகிறது. பழைய யாழ்ப்பாண மன்னர்களின் ஆஸ்த்தான சோதிடர்களின் பரம்பரையினர் அதை வெளிவிடுகின்றனர். தற்போது உள்ள ரகுநாதையரின் தகப்பனின் சகோதரரான ரகுநாதையர் உயிருடன் இருக்கும் போது அறுபது ஆண்டுகளுக்கு உரிய பஞ்சாங்கத்தை கணித்து வைத்துவிட்டார்.

இந்துக்களின் 60 ஆண்டுச் சுற்று
ரகுநாதையர் குடும்பத்தினர் என்னை இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் அவர்களது குடும்பம் வாழவேண்டும் என்பது எனது விருப்பம். இந்திய அமைதிப்படையின் குண்டு வீச்சிலோ அல்லது இலங்கைப்படையின் எறிகணையிலோ ரகுநாதையர் குடும்பம் முற்றாக அழிந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்களின்

Dec 17, 2012

நீங்கள் சோற்றிலே புதைக்கும் பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்.

நீங்கள் சோற்றிலே புதைக்கும் பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்..

News Service பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.
காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத்தணிக்கும்.சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

  
மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...