Jan 1, 2013

2013 பு‌த்தாண்டு ராசி பலன்கள் (12 ராசிகளுக்கும்)

செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்த யோக நன்னாளில் சூரி ய உதயத்தை அடிப் படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34 க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரக மான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டு மென்ற எண்ணம் வரும். 2013 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌ வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

மேஷம் ராசி !

இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிஸ் சாதன ங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலை யுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடை க்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடை க்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும் பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர் கள். உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலே யே காரியங்களை சாதிப்பீர்க ள். பழைய சொந்தம் பந்தஙகள் தேடி வருவார்கள்.
வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்க ளுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட் டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும்.
12.10.2013 முதல் டிசம்பர் முடிய கேதுபகவான் அசுவனி நட்சத்திர த்தில் செல்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்கள் இக்காலக் கட்டத் தில் விபத்துகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.
3.2.2013 முதல் 11.10.2013 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வ தால் பரணி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் மன உளைச்ச ல், ஆரோக்ய குறைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
1.1.2013 முதல் 2.2.2013 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
10.4.2013 முதல் 26.5.2013 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனமடைவதால் வீடு, மனை வாங்குவது, மற்றும் பண விஷயத் தில் உஷாராக இருக்க வேண்டும்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக் கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.
மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரும், புதிருமாக பேசி க் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த் தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்களை சுற்றியி ருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழு பறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட் டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண் டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறா னவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

Dec 29, 2012

பாம்பு வேட்டையாடும் மனிதர்களின் பாம்பை பிடிக்கும் காணொளி

பாம்பு வேட்டையாடும் மனிதர்களின் பாம்பை பிடிக்கும் காணொளி 


Astrologer MuruguBalamurugan: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...

Astrologer MuruguBalamurugan: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...: புனர்பூசம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்      இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்ச...

சர்க்கரை நோய் பாதுகாப்பு முறைகள்! பயனுள்ள தகவல்கள்


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக்

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு



தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அதஉங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே

நீங்க பைக் பரத்தா? -- உபயோகமான தகவல்கள்,


''சும்மா இல்லைடி, என்கூட வந்து    ஒருநாளைக்கு 200 கி.மீ பைக்ல சுத்திப்பாரு... அப்பத் தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு!'' - மார்க்கெட்டிங், பிசினஸ், பீட்சா சப்ளை என வண்டியோடு வாழ்க்கை நடத்தும் அத்தனை ஆண்மகன்களும் இப்படியான புலம்பல்களுக்கு நிச்சயம் ஆளாகி இருப்பார்கள். தினந்தோறும் அதிக நேரம் பைக் ஓட்டுபவர்களுக்கான உடல் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அவர்களுக்கான எளிய வகைப் பயிற்சிகளைப் பற்றியும் சொல்கிறார்கள் ஃபிசியோதெரபிஸ்ட் கவிதா மற்றும் பயிற்சியாளர் ஆண்டிச்சாமி இருவரும்.
''முதலில் நாம் பயன்படுத்தும் பைக்கில் சஸ்பென்ஷன் போன்ற விஷயங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஷாக் அப்சார்பர், ஹேண்டில் பார் மற்றும் கியர் அமைப்பு போன்றவை  முறையாக இருக்க வேண்டும். உட்காரும் இருக்கைப் பகுதி சமதளத்தில் இருக்க வேண்டும். உயரமாகவோ பள்ளமாகவோ இருக்கக்கூடாது. அப்படி

கண்மணிகளுக்கு கண் பரிசோதனை அவசியம்.



நீங்கள் பொறுப்பான பெற்றோரா? உங்கள் பிள்ளைகளை முழுமையான அக்கறையோடு கவனித்து வருகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

உங்கள் பாசத்திலும், பராமரிப்பிலும் எந்தக் குறையும் இல்லை என்றாலும் கூட உங்கள் ஆசை மகனோ (அ) அருமை மகளோ, கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம். காரணம், சிறு வயதிலும் கவனிக்கப்படாத பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமாக இருப்பதோடு, இந்தியாவில் பல சிறுவர் - சிறுமியர் இதனால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு புள்ளிவிவர கணக்குப்படி தலைநகர் டெல்லியில் மட்டும் 2.5 லட்சம் சிறுவர் - சிறுமியர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். மற்றொரு புள்ளி விவரம்
ஒரு நல்ல கண் மருத்துவரிடம் கண்  பரிசோதனைக்கு சென்றால் கீழ்கண்ட பரிசோதனைகள் செய்வது வழக்கம்

முதலில் தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வை , படிக்கும் திறன்

இரண்டாவது "Eye Pressure" என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான பரிசோதனை குளுகோமா  என்று அழைக்ககப்படும்
இந்த கண் வியாதிக்கு இந்த பரிசோதனை ரொம்ப முக்கியமானது. இந்த வியாதி வருவது தெரியாது. முற்றிய பிறகு தான் தெரிய வரும் அப்போது கண் பார்வை குறைவு ஏற்பட

Dec 27, 2012

தேவையான எளிய மூலிகை மருத்துவம்



தேவையான எளிய மூலிகை மருத்துவம்

இன்று நான் உடல் நலம் சரியில்லாத எனது நெருங்கிய  நண்பரை நலம் விசாரிக்க சென்றேன்.அப்போது அவர் மருத்துவரை அனுகியதாகவும் அவர் சில மாத்திரைகளை கொடுத்ததாகவும்,ஆனால் அதில் 3 நாட்களாகியும் குணமடையவில்லை என்றும் தெரிவித்து கொண்டிருந்த போது அவருடைய 86 வயதாகிய பாட்டிஅவர்கள் காலத்து மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதை குறிப்பெடுத்து உங்களுக்கு சுருக்கமாக அளிக்கின்றேன்.இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள மருத்துவம் ஆகும்.




(முக்கிய  குறிப்பு :- இதுவரை பாட்டியம்மா ஆங்கில மருந்தினை உண்டதில்லையாம் எந்த உடல்நலக்  குறைவு என்றாலும் இயற்கை மருத்துவம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அவர் உடல் சோர்வின்றி நல்ல திடகாத்திரமாகவே உள்ளார்.நண்பரே உடனே அவர்களுக்கு திஷ்டி  சுத்தவும்)

நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்!



 பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் தீமை விளைவிக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன.
 இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டு மல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
 இது குறித்து ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும்,பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...