Jan 13, 2013

கொத்தமல்லி கீரையின் மருத்துவ குணங்கள்..

News Service கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.
  
வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு,

சித்த மருத்துவத்தில் பூக்கும் மரங்களின் அரசு..!


News Service
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால்

துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும் மல்லிகை

News Service சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள்.
  
ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும்

தை பொங்கல் காட்சி



பக்கவாதம் வந்து நடக்க முடியாதவர்களை நடக்கச் செய்யும் புதிய மாத்திரை

பக்கவாதம் வந்து நடக்க முடியாதவர்களை நடக்கச் செய்யும் புதிய மாத்திரை
சனி, 12 ஜனவரி 2013

பக்கவாத நோய் தாக்கி நடக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் நடப்பதற்கு உதவும் மாத்திரையை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கோரியுள்ளனர்.

கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் பிராங்க் லாங்கோ, பரிசோதனை முயற்சியாக கண்டுபிடித்த இந்த மாத்திரையின் பெயர் LM11A-31.

முதலில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தியதில் சோதனை வெற்றிகண்டதாக அவர் கூறியுள்ளார்.

காயமடைந்து 4 மணிநேரம் கழித்து கொடுக்கத் தொடங்கி 42 நாட்களுக்கு தினமும் இரண்டு வேளை மேற்கூறிய மாத்திரைய்க் கொடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனையின் போது வலி குறைந்ததோடு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வு கூறுகிறது.

முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது என்றால் மூளை உடலின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. ஆனால் இந்த மாத்திரைகள் மூளையின் செயல்பாட்டையும் உயிர்ப்பிப்பதாக முதன்முதலில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து மூலம் பக்கவாத நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

ஆலிகோடென்ட்ரோசைட்ஸ் (Oligodendrocytes) என்று அழைக்கப்படும் செல்களின் செயலிழப்பைத் தடுக்கும் புதிய வேதிமமும் இந்த சோதனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ப்75 என்ற புரோட்டீனை செயலாக்கவிடாமல் தடுத்து ஆலிகோடென்ட்ரோசைட்ஸை பாதுகாக்கிறது இந்த மாத்திரை.

முதுகுத் தண்டு காயத்தினால் இந்த சிறப்பு வாய்ந்த செல்கள் இறந்து போவதற்கு ப்75 என்ற புரோட்டீனே காரணம் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த செல்களின் அழிவை தடுத்தால் பக்கவாதத்தினால் இழந்த செயல்களை மீண்டும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆய்வு நியுரோசயன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

Jan 12, 2013

புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்!



  • 2
     
Bitdefender Antivirus 2013
பெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.

ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றான Bitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.
Download Link

விரைவில் கலக்க வருகிறது ‘உபுண்டு’ ஸ்மார்ட் போன்கள்!




  • 0
insidenews
விண்டோஸிலிருந்து வேறுபட்ட அனுபவத்தினை தருகின்ற உபுண்டு தற்போது ஸ்மார்ட் போன்களுக்கும் வரவுள்ளது.
லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இதன் மூலம் கணனிகளுக்கான அப்ளிகேசன்களையும் ஸ்மார்ட் போன்களில் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்படியாக கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களில் அண்ட்ரோய்டிற்கு பதிலாக உபுண்டுவை விரைவில் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இப்புது முயற்சி தொடர்பில் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உபுண்டுவின் ஸ்தாபகரான மார்க் சட்டல்வேர்த் தெரிவித்துள்ளார்.
கணனிகளுக்கு ஒப்பாக ஸ்மார்ட்போன்களை செயற்பட வைத்தலே இதன் முக்கிய நோக்கம் என அதன் மார்க் சட்டல்வேர்த் தெரிவிக்கின்றார்.

Jan 10, 2013

25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kamal_vishwarupam 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!





  • 1
     

கமல்- தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.
கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம்.
இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும்

முட்டையில் இருக்கும் 10 விதமான நன்மைகள்!





  • 0
     
சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.
1. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.
3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்





  • 0
     
வாலிபர் ஒருவரின் கார், அவரது அயலவர்களினால் மரத்தில் காயப்போடப்பட்டது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
போலன்ட் இல் வசித்து வருபவர் 24 வயதாகும் Zbigniew Filo. இவர் கட்டுப்பாடு இன்றி மிக மோசமான முறையில் காரை வேகமாக செலுத்தும் பழக்கம் உள்ளவர். இதனால் அப்பகுதியில் சில விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.
இவரை இவரது அயலவர்கள் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாத Zbigniew Filo, தொடர்ந்தும் மோசமான முறையிலேயே காரை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அயலவர்கள் பாரம் தூக்கி உதவியுடன் Zbigniew Filo இன் காரை மரத்தின் கிளையின் உச்சியில் தொங்கவிட்டு விட்டனர்.
பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பெயரில் அவர்கள் வந்து அயலவர்களிடம் சமரச பேச்சு நடாத்தினார்கள்.
இனிமேல் மோசமாக கார் ஓட்டமாட்டேன் என்று Zbigniew Filo உறுதியளித்த பின்னரே கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை!

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை




  • 3
     

sachin_facebook_1சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார், இதில் தன்னுடைய கருத்துகளை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வந்தார்.
முதன் முதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய சச்சின், எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.
கடந்த 22 ஆண்டுகளாக உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான், உங்களின் ஆதரவில்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...