Mar 10, 2013

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்.

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்.

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற

உலகில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பான 10 நகரங்கள்!



  • 116
     

உலகின் சில பகுதிகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என்று தான் சொல்கின்றனர். ஆனால் அனைத்து நாட்டிலுமே சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. மேலும் பெண் சுதந்திரமானது இருந்தாலும், எந்த ஒரு பெண்ணாலும், இரவில் தனியாக நடக்க முடியாத நிலை இன்றும் நிலவுகிறது.
இருப்பினும் உலகில் பெண்களுக்கு எந்த ஒரு அநியாயமும் நடக்காத வகையில், சரியான பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன. இப்போது பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில், பெண்களுக்கு பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கும் நகரங்கள் என்னவென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
இவற்றில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இருக்கின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட, பெண்களுக்கு பாதுகாப்பை தரும் வகையில் இல்லை என்பது தான்.
சரி, இப்போது உலகில் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நகரங்கள் எவையென்று பார்த்து, வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புனித நகரங்களுக்கு சென்று வாருங்கள்.

கோபன்ஹேகன், டென்மார்க்

கோபன்ஹேகன், டென்மார்க்
Picture 1 of 10
உலகிலேயே டென்மார்க் மிகவும் பாதுகாப்பான நாடு. அதிலும் அந்த நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரமான கோபன்ஹேகனில், பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் செல்லும் அளவில் பாதுகாப்பானது உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர்.

பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

Mar 8, 2013

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது.
உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு

Mar 7, 2013

உங்கள் கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க

உங்கள் கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான்.

கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

கருவளையம் / சுருக்கம்

கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல்,

விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

indexWindows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. கணனி வன்பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படப்போவதாயின் அல்லது ஏற்கனவே சில பழுதுகள் ஏற்பட்டிருந்தாலோ அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது காணப்படுகிறது.
அதனால் அந் நேரத்தில் System செயலிழந்து போவதை காணலாம் அல்லது BSOD  (“Blue Screen Of Death”) எனும் செயற்பாடு நடைபெறும். அதாவது கணினித்திரை முழுவதுமாக நீல நிறத்திலான ஒரு திரை தோன்றி அதில் உங்கள் கணினியில் ஏற்பட்டிருக்கும் பழுது பற்றிய எச்சரிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் அதை தீர்ப்பதற்கான வழி பற்றியும் முன்னர் ஒரு பதிவில் பார்த்திருந்தோம்.

அந்த பதிவில் பிரச்சினை வந்தால் எப்படி தீர்ப்பது என்று பார்த்தோம். இப்படியான பிரச்சினை வரும்போது கணினி Automatic ஆக Shutdown/Restart ஆகும். இதனால் செய்துகொண்டிருக்கும் வேலைகள் தடைப்படும், நேரம் விரயம் ஆகும். ஆகவே இப்படியான பிரச்சினைகளின்போது கணினி  Shutdown/Restart ஆகாமல் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்
இங்கு படிமுறை படிமுறையாக குறிப்பிடப்படிடிருக்கும் செயற்பாட்டை அவதானிப்பதன் முலம் இதனை இலகுவாக அறிந்து கொள்ளலாம்
படிமுறை 1: முதலில் உங்கள் Desktop திரையில் காணப்படும் My Computer எனும் Icon ஐ Right click செய்து அதில் Propertiesஎன்பதை கிளிக் செய்யவும்.
படிமுறை 2: அடுத்து வரும் விண்டோவில் இடது பக்க பட்டியலில் உள்ள System protection எனும் பகுதியை கிளிக் செய்யவும். இவ்வாறு கிளிக் செய்தவுடன் புதிதான ஒரு பக்கம் திரையில் தோன்றும்.
படிமுறை3: அவ்வாறு தோன்றும் புதிய சாளரத்தில் System properties எனும் பக்கம் தோன்றும் அதில் Advanced எனும் பகுதியை கிளிக் செய்யவும்.

படிமுறை4: அவ்வாறு தோன்றும் திரையில் கீழ் பகுதியில் Startup and Recovery section  எனும் பகுதி காணப்படும் அதில்Settings button ஐ கிளிக் செய்யவும்
படிமுறை 5: அவ்வாறு தோன்றும் திரையில் System failure எனும் தலைப்பிட்டதன் கீழ் இரண்டு பிரிவுகள் காணப்படும்
  • Write an event to the System log
  • Automatically Restart
எனும் இரண்டு தரவுகள் காட்டப்பட்டிருக்கும் இரண்டின் முன்பும் சரி அடையாளம் இடக்கூடிய பெட்டி காணப்படும். அதில் இரண்டாவதாக காட்டப்பட்டிருக்கும் Automatically Restart எனும் தரவின் முன்னால் உள்ள சரி அடையாளத்தை எடுத்து விடவும்.
பின் OK எனும் Button ஐ கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் வேலை இனி ஒரு போதும் அடிக்கடி  Restart மற்றும் Shutdown  பிரச்சினைகள் வந்து உங்களை எரிச்சலுக்குள்ளாக்காது.

இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்


நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroupமூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு
connect_two_computers_in_windows_7கோப்புக்களை இலகுவாக பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி வேகத்துடனும், இடையுர்கள் இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற வேண்டுமாயின்Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது.

எப்படி கணணிகளுக்கு ஹோம் நெட்வொர்க் (Home Network) அமைப்பது முதலில் பார்ப்போம்.
இந்த செய்முறைக்கு தேவையானவை
  • Crossover கேபிள் (நீங்கள் விரும்பினால் Straight கேபிள் கூட பயன்படுத்தலாம்)
  • இரு கணணியும் நெட்வொர்க் கார்டு (Network Card) சப்போர்ட் செய்வதாக இருத்தல் வேண்டும். அதோடு சேர்த்து Ethernet டிரைவர் (Driver) நிறுவி

அகத்திக்கீரை:

kaththi

அகத்திக்கீரை:

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும்

அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News


அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News
[Wednesday, 2013-03-06
News Service கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஆப்ரிக்க காட்டு யானைகளின் எண்ணிக்கையில் 62 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக, வனவிலங்குகளின் பாதுகாப்புக்கான அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இந்த போக்கு இப்படியே தொடருமானால், ஆப்ரிக்க காட்டு யானை இனமே அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லாமல் அழிந்துபோகும் என்று அந்த அறிக்கையில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரித்த 60 வனவியல் விஞ்ஞானிகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தைச் சேந்த முனைவர் பியோனா மெய்சிலிஸ், யானைகளின் இந்த வீழ்ச்சியின் அளவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார். சுமார்

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?


முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?
[Tuesday, 2013-03-05
News Service மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே. இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
  
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால்

அன்னாசிப்பழம் இருக்க தொப்பையைப் பற்றிய கவலை எதற்கு? இதோ ஆரோக்கியமான தகவல்கள்!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...