Apr 13, 2013

ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்

இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்.இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர்.
இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம் வசூலிக்கும் லயன்ஏர் விமான சேவை நிறுவனம் 2012-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

பூமியை நோக்கி வரும் காந்தப் புயல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஏப்ரல், 2013


சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது.
இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம்.
ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இவை நொதர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும்.
அதிக சக்தியேற்றம் பெற்ற துணிக்கைகள் புவியை மோதுவதால் ஏற்படுவதே காந்தப் புயல் எனப்படும் இயற்கை நிகழ்வாகும்.

Apr 12, 2013

நேரடி ஒளிபரப்பு.

நேரடி ஒளிபரப்பு....
நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பறம் மற்றும் தேர்த்திருவிழா போன்றவற்றை இலங்கை நேரப்படி ஏப்பிரல் 13ம் திகதி மாலை 9 மணி முதல் சப்பறத் திருவிழாவையும். மற்றும் ஏப்பிரல் 14ம் திகதி காலை 9 மணி முதல் தேர்த்திருவிழாவையும். இவ் [ www.nainativu.org ] இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெற உள்ளது என்பதனை உங்களுக்கு அறியத்தருகிறோம். காத்திருங்கள்...

Apr 11, 2013

இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி அசத்தும் அமெரிக்க சிறுவன்!

american teenagerஅமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது சிறுவன், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். நியூயார்க்கைச் சேர்ந்த திமோதி டோனருக்கு, சிறுவயது முதலே பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தது.
இதற்காக அவர் பெரிய பயிற்சி நிறுவனங்கள் எதையும் நாடவில்லை. மாறாக, அன்றாடம் தான் தொடர்பு கொள்ளும் நபர்கள் மூலமாகவே தனது மொழிப்பயிற்சியை வளர்த்திருக்கிறார். உள்ளூர் டாக்சி டிரைவர்களுடன் அடிக்கடி பேசுவது, ஓட்டல்களில் சந்திக்கும் நபர்களுடன் தொடர்ந்து பேசிப் பழகுதல் மற்றும் இ-மெயில் மூலம் உலகம் முழுவதிலும் உள்ளவர்களுடன் பழகி, அவர்களின் மொழியைப் பற்றி அறிந்துள்ளார்.
இவ்வாறு இந்தி, அரபு, குரோஷியன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜெர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தோனேசியன், இஷிஹோசா, (தென் ஆப்பிரிக்க ஆட்சி மொழி), இத்தாலி, மாண்டரியன், ஒஜிப்வே (அமெரிக்க உள்ளூர் மொழி), பெர்சியன், பாஷ்டோ, ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வாஹிலி, துருக்கிஷ், வோலோப், யித்திஷ் என 23 மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளான்.
அதன்பின்னர் டோனர் தனது மொழித் திறமையை வீடியோ பதிவுகளாக யுடியூப் மூலம் வெளியிட ஆரம்பித்ததால், அவரது பன்மொழித் திறமை உலகிற்கு தெரியவந்தது. இதனைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள், டோனரின் திறமையை பாராட்டி, ஊக்கம் அளித்துள்ளனர். அவற்றில் ஒரு வீடியோவில் 20 மொழிகளில் தொடர்ந்து பேசியதன் மூலம் டோனர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளான்.

மருத்துவரை நாட உதவும் இணையதளம்



இணையத்தில், நம் உடல் நிலை, அதற்கான மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர் ஒருவரை நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. 

இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் தளங்களில்,www.askthedoctor.com/ என்ற முகவரியில் இயங்கும் ஒரு தளம் வித்தியாசமான முறையில் தகவல்களைத் தந்து நம் சந்தேகங்களையும் தீர்க்கிறது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருத்துவர்களும் இந்த தளம் சென்று, நோய், அதன் தன்மை, அதற்கான மருத்துவம் குறித்துத் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, இந்த தளத்தில் தொடர்பு கொண்டுள்ள மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். 
ஏற்கனவே இது போன்று கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களும் இந்த தளத்தில் கிடைப்பதால், சிரமமின்றி எளிதாகவும், விரைவாகவும் தகவல்களை அறியலாம். புதியதாக அறிய வேண்டும் எனில், இந்த தளத்தின் மூலம், மருத்துவ வல்லுநர் ஒருவரைத்

Apr 10, 2013

உணவுகளை செரிக்கும் பீட்ரூட்!

சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.
இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக்

மருத்துவரின் காதலி கடுக்காய்!

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு

ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.
முள்ளங்கியின் நறுமணம்:
முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது

Apr 8, 2013

பொதுஅறிவு:- *நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் 
தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.


via - சுபா ஆனந்தி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...