Apr 25, 2013


இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.

110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள் 

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.

#என்று தணியும் இந்த 'தீ' விபத்துகளின் தாகம்.
இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.
110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள்

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குகிறோம்.

சித்திர குப்தனுக்கு பதவி ஒருநாள் யமதர்ம ராஜனுக்கு மனகவலை அதிகமாகிக்கொண்டே போனது. தன் மனகவலையை சிவபெருமானிடம் சொன்னார். “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.

“உன் கேள்வியை ஜீவராசிகளை படைக்கும் பிரம்மனிடமே கேள். அவர் இதற்கு தீர்வு சொல்வார்.” என்றார் சிவபெருமான்.
யமதர்மராஜன், பிரம்மனிடம் சென்று தன்னுடைய கவலையை சொன்னார். அதற்கு பிரம்மதேவர், “அட இதுதானா உன் கவலை.? சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.
அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் – துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவிலும் நினைக்காமல், இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து, “இது புண்ணிய ஆத்மா” என்று சித்திர குப்தன், அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால், அடுத்த பிறவி இல்லை, அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.

சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளால் அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து, சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி, அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான-தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான-தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல், எந்த பிறவியும் வளமாகும். வாழ்வே இனிதாகும்.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாள்: 25.04.2013

Apr 24, 2013

வாழ்க்கைக் குறிப்பு

வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு
சிவாஜி கணேசன்
Sivajiganesan.jpg
சிவாஜி கணேசன்
இயற் பெயர்விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்
பிறப்புஅக்டோபர் 1, 1927
இந்தியாவின் கொடி தமிழ்நாடு, சீர்காழி,இந்தியா
இறப்புசூலை 21 2001 (அகவை 73)
சென்னை
துணைவர்கமலா
மகனாக விழுப்புரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

[தொகு]திரைப்பட வாழ்க்கை

'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித்திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான்

டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம் , டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தஞ்சாவூர் துளுக்கம்பட்டியின் தஞ்சாவூர் கான்சர் சென்டரை திறம்பட நிர்வகித்து மிகச்சிறப்பாக புற்றுநோய் சிகிச்சை அளித்து வருகிறார் .
புற்றுநோய் பற்றின கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தொடர் ஒன்றை மூன்றாம்கோணத்துக்கு அளிக்க ஒப்புதல் அளித்திருக்கிறார் . வாசகர்கள் புற்றுநோய் குறித்த தம் சந்தேகங்களை moonramkonam@gmail.com முக்கு

சித்ரா பௌர்ணமி






சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணிய பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப் பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார்.
இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பெளர்ணமி தினத்தில் அவதரித்தார்.
அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதி வந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் கமாதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப்

Apr 23, 2013

ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்



ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். 

இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தால் எந்தவித நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கூகுள் மெயில் தளத்தில் செட் செய்திட, வசதி தரப்பட்டுள்ளது. 

இந்த புதிய வசதி ‘Inactive Account Manager’ என்று அழைக்கப்படுகிறது. 
நம் கூகுள் அக்கவுண்ட் தளத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் வசதியாகும். கூகுள் தளத்துடனான நம் செயல்பாடு தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்களுக்கு இல்லா மல் போனால் மட்டுமே இது செயல் படுத்தப்படும். மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பன்னிரண்டு மாதங்கள் செயல் இல்லாமல் போனால், இந்த வசதியைச் செயல்படுத்துமாறு கூகுள் தளத்திற்கு நாம் செட் செய்து அறிவிக்கலாம். 
மரணம் மட்டுமல்ல, ஒன்றுமே செயல்பட முடியாமல் நாம் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றுச் சென்றாலும், இந்த வசதி செயல்படுத்தப்படும். இன்டர்நெட் இணைப்பே இல்லாத சூழ்நிலை உள்ள நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து கூகுள் தளம் தரும் வசதி எதனையும் பயன்படுத்தாமல் இருந்தாலும் இந்த வசதி செயல்படத் தொடங்கும். 
இதற்கான செட்டிங்ஸ் பக்கத்தில், நீங்கள் விரும்பினால், பத்து பேரின் பெயர்களையும், அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம். செயல்பட இயலாத காலம் கடந்தவுடன், இவ்வாறு பதிந்து வைப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு செய்தி ஒன்று உங்கள் அக்கவுண்ட் குறித்து அனுப்பப்படும். எந்த யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் மூலம், உங்கள் அக்கவுண்ட்டினை அணுகலாம் என்று காட்டப்படும். 
இவ்வாறு நம் வாரிசாக நியமிக்கும் நபர் களுக்கான மின்னஞ்சல் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும். கூகுள் இந்த எண் உள்ள தொலைபேசிக்கு சோதனை செய்திடும் குறியீட்டு எண்ணை அனுப்பும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் சேர்த்துள்ள டேட்டாவினை ஒரு கோப்பாக, இவ்வாறு நியமிப்பவர்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பும் வசதியினையும் கூகுள் தருகிறது. 
பாதுகாப்பிற்காகவும், உங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் போனுக்கும் ஒரு செய்தி அனுப்பப்படும். ஜிமெயில் அல்லாத மற்ற மின் அஞ்சல் முகவரிக்கும் செய்தி அனுப்பப்படும். இந்த செய்தி, நீங்கள் வரையறை செய்திடும் காலம் முடிய, ஒரு மாதம் இருக்கையில் அனுப்பப் படும். இதன் மூலம் நாம்,பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தால், நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடர்ந்து உயிருடன் வைத் திருக்கும் வகையில் லாக் இன் செய்திடுவோம். இல்லையேல், ஒரு மாதம் கழித்து, நாம் நியமனம் செய்தவர்களுக்கு, கூகுள் தகவல் அனுப்பும்.
இந்த வசதி, கூகுள் தரும் பத்துவித சேவைகளில்(கூகுள் வாய்ஸ், மெயில், யு ட்யூப் போன்றவை) தரப்படுகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் இந்த சேவையினை, வெவ்வேறு கால வரையறையுடன் செட் செய்திடலாம்.

Apr 19, 2013

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய 30 வழிகள்

nurseநீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் நம்மால் இயலும்.
உடல் எடை பராமரிப்பு
கட்டுக்கோப்பான உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல், உடலின் ஒட்டு மொத்த நலனையும் பராமரிக்கிறது.
உடற்பயிற்சி
முறையான உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ஜீவத்துவ பரிணாமம் மேம்படுகிறது என்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
டிரான்ஸ் கொழுப்பு தவிர்க்க
டிரான்ஸ் கொழுப்பு உடலின் புரதம் உறிஞ்சும் தன்மையை பாதிப்பதால், இன்சுலின் சுரப்பை நிறுத்தி, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஆகவே டிரான்ஸ் கொழுப்பு அடங்கிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து

லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை! லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை!

  
News Service இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், இரும்பு பெண்மணி என்று பாராட்டப்பட்டவருமான மார்கரெட் தாட்சரின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் மார்கரெட் தாட்சர் (89). தன்னுடைய உறுதியான நடவடிக்கைகள் மூலம் அவர் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டார். அவர் பதவி விலகிய பின்னர் கடந்த 23 ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 8ம் தேதி அவர் இறந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலய கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
  
கல்லறை வளாகத்தில், 700 வீரர்கள் அணிவகுத்து நின்று அவரது உடலுக்கு மரியாதை செய்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், 11 நாட்டு பிரதமர்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர், ஜார்ஜ் ஸ்கல்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லண்டன் பிஷப் ரிச்சர்டு சார்ட்ரஸ் இறுதிச்சடங்குகளை செய்து வைத்தார்.
தாட்சருக்கு மரியாதை செய்யும் விதமாக நேற்று இங்கிலாந்து முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கிவிடப்பட்டிருந்தன. மேலும், உடல் அடக்கம் நடந்தபோது, பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்திவைக்கப்பட்டது. முன்னதாக, தாட்சரின் எதிர்ப்பாளர்கள், அவரது சவப்பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாதையில் திரண்டு எதிர்ப்பு கோஷங்கள் மற்றும் கைகளை தட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூமியைப் போல மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!


News Service பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  
கெப்லர் 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டறிந்தனர். அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒலி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது. அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.

அதிகபட்ச பாதுகாப்புடன் இணையத்தை பயன்படுத்த உதவும் பயர்பாக்ஸ்



http://tamilmedia24.com/images/technology/medium/1366108785tech3.jpg
இணைய உலாவிகள் (பிரவுசர்) வழியே இணையத்தை பயன்படுத்துகையில் நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கணனியில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்பதால் மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் உலாவிகள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன.

இருந்தாலும் நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும். அந்த வகையில், பயர்பாக்ஸ் உலாவி தரும் வழிகளை இங்கு காணலாம்.
பயர்பாக்ஸ் உலாவியில் கூடுதல் பாதுகாப்பு வழிகள் இருந்தாலும் அவை தானாக அமையாமல், நாம் தேடி அமைக்கும் வகையில் உள்ளன. பயர்பாக்ஸ் உலாவியிலும், நாம் தரும் தகவல்கள், மொஸில்லா மற்றும் கூகுள் நிறுவன உலாவிகளுக்குச் செல்லும்

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு வெளியானது



http://tamilmedia24.com/images/technology/medium/1366365320tech3.jpgஅனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக்கூடிய வசதியைத் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.6 Twoflower வெளியாகியுள்ளது.
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களிற்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் Matroska v4 கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் MPRIS2 இடைமுகங்கள் உள்ளடங்கலாக மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...