Apr 28, 2013

பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!



பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!
நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்

ஒற்றுமைக்கு..........காகம்.
அமைதிக்கு..............புற

உழைப்புக்கு............எறு
ம்பு
தன்மானத்திற்கு.....கவரிமான

சுறுசுறுப்புக்கு.........த
ேனீ
தந்திரத்திற்கு..........நரி
பேச்சுக்கு.................கிளி
பாட்டுக்கு...............குயில்
ஆடலுக்கு...............மயில்

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...


பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது

ஹிட்லரிடம் பணிபுரிந்த பெண் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்


ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் 1934 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். இவர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் இவரை கொல்ல பல முறை திட்டம் தீட்டினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரிடம் பணிபுரிந்த மார்கட் வோலக் என்ற பெண்மணி 50 வருடங்களாக வெளி உலகுக்கு சொல்லாமல் வைத்திருந்த தனது அனுபவங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
95 வயதாகும், அந்தப்பெண் தனக்கு 25 வயது இருக்கும் போது ஹிட்லரிடம் இரண்டரை வருடம் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நரியின் குகை (வுல்ப்ஸ் லேர்) என்று பெயரிடப்பட்ட ராணுவ தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த இடம் தற்போது போலந்து நாட்டில் உள்ளது. அங்கு மார்கட் வோலக் ஹிட்லரிடம் பணிபுரிந்தார்.
அந்த அனுபவம் குறித்து மார்கட் கூறியதாவது:-
ஹிட்லர் ஒரு சைவ உணவு பிரியர். நான் அவரிடம் பணிபுரிந்த காலத்தில் அவர் அசைவம் சாப்பிட்டதில்லை. இங்கிலாந்து அரசு தனக்கு விஷம் வைத்து கொன்று விடும் என்று ஹிட்லர் பயந்தார். அதனால் அவர் சாப்பிடும் உணவுகளில் விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 15 பெண் பணியாளர்களை வைத்திருந்தார்.
அந்த உணவை ஹிட்லர் சாப்பிடும் முன் சாப்பிட்டு விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே அவர்களின் வேலை. அதில் நானும் ஒருத்தி. உணவுகளில் விஷம் கலந்திருக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருக்கும். உணவுகள் மிக சுவையாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மரண பயம் காரணமாக நாங்கள் நிம்மதியாக சாப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது இதுதான் நமது கடைசி உணவாக இருக்கும் என்று பயந்து நடுங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 1917-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை புனித நீரா?





காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடும
ையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு

Apr 27, 2013

தொப்பையைக் குறைக்கும் ஸ்கிப்பிங்கின் இரகசியங்கள்!



News Service இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் 10 நிமிஷம் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு. முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக்

உலகையே அசைத்தவரின் மறுபக்கம்


News Serviceவிண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர். விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587இல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவி யால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலிய வற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.
  
படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி

ன்றாடம் உண்ணும் உணவுகளுக்கான அளவுகோல்

News Serviceநாம் உண்ணும் உணவு சரியானதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவுகோல் உள்ளது. அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டு போகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.
   அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக் கொள்வில்லை என்பது பொருள். அதன்

முன்னர் கருதியதை விட 1000 டிகிரி அதிகமாகக் காணப்படும் புவி மைய வெப்பம்!




News Service பூவியின் உள்ளகமான (core) என்று அழைக்கப் படும் அதி ஆழமான பகுதியில் எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை இன்னமும் 1000 டிகிரி அதிகம் அதாவது 6000 டிகிரி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதில் ஆச்சரியாமன இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த உள்ளக வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச் சமனானது என்பதாகும். எக்ஸ் ரே (X-ray) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில் வெப்பமாக்கி அது எவ்வாறு உருகி லாவா ஆகின்றது எனப் பரிசோதிக்கப் பட்டது.
  
ஏனெனில் பூமியின் மையப் பகுதியில் சந்திரனின் விட்டத்துக்குச் சமனான கோளப் பகுதி திண்ம இரும்புப் பந்து போல் உள்ளது. இதனைச் சுற்றி மிக இயங்கு தன்மை மிக்க திரவ இரும்பு மற்றும் நிக்கலின் கலவையினால் காணப்படுகின்றது. 1990 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பரிசோதனைகளின் போது இந்த இரும்பு உருகும் வெப்பநிலை 5000 டிகிரி என முடிவெடுக்கப் பட்டது.
எனினும் சமீபத்தில் ஐரோப்பாவின் சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு கூடத்தில் அதே பரிசோதனை இன்னும் அதிக திறனுடைய X-ray இனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது. இதன் போது இது திருத்தமாக 6000 டிகிரி என்பது ஊர்ஜிதமானது. தற்போது இந்தப் பரிசோதனை முடிவு புவிப் பௌதிகவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், புவியியக்கவியலாளர்கள் ஆகியோருக்கு மிக உபயோகமாகப் பயன்படவுள்ளது என்பதுடன் அவர்களின் கணணி மாதிரிகளிலும் இது திருத்திப் பதிவிடப்படவுள்ளது.

இன்று பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்! பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது,அதை பார்க்க முடியும். இன்று, 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில்,சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும். தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு, ஏப்.4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.வரும், 28ம் தேதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும். வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும். சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் தேதி, நடைபெற உள்ளது. சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...