May 1, 2013

சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள்

The Best New Samsung Android Phones

வணக்கம் நண்பர்களே..! மொபைல் உலகில் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்ததில், விலையில், தரத்தில் சிறப்பு பெற்றவை. சாம்சங் நிறுவனத்தின் போன்களின் பெயர்கள், அந்த போன்களின் படங்கள், அவற்றில் உள்ள மிக முக்கியமான உள்ளடக்க உறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

Samsung Galaxy Mega 6.3 Android mobile Phone


  • 6.5 inch hd touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.7 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8MP Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Mega 5.6 Android mobile Phone


Samsung Galaxy Mega 5.6 android mobile
  • 5.8 inch HD touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.4 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Fame S6810 Android mobile Phone

கூகிள் ட்ரான்லிட்ரேசனைப் பயன்படுத்தி தமிழில் எழுத

How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும். 

தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம். 

how to type tamil in gamil
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டஃடைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூளையில் பற்சக்கரம் போன்ற படத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ் ஐகான் எனப்படும்.

  • அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும். 
  • இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும். 
  • அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும். 
இனி நீங்கள் உங்களுடைய Gmail-ன் முகப்புப் பக்கத்தில் மேல் வலது மூலையில் செட்டிங்ஸ் ஐகானிற்கு பக்கத்தில் இவ்வாறு கூகிள் லாங்குவேஜ் இன்புட் டூல் -ஐ காணலாம். 

அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

Apr 30, 2013

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்!

!


May 1, 2013

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும் 127வது சர்வதேச மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும்

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்



Posted: 30 Apr 2013
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும்

டச்சு அரசராக அலெக்சாண்டர் பொறுப்பேற்பு

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து நாட்டின் மன்னராக, வில்லெம் அலெக்சாண்டர் நேற்று முடி சூட்டிக்கொண்டார். நெதர்லாந்து நாட்டின் அரசியாக பீட்ரிக்ஸ், 33 ஆண்டுகளாக அரியணையில் இருந்தார். தற்போது 75 வயதாகும், பீட்ரிக்ஸ், உடல் நிலையை காரணம் காட்டி, தனது மகனுக்கு முடி சூட்டுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, 46 வயதான வில்லெம் அலெக்சாண்டர், ஆம்ஸ்டர்டாம் நகரில், அரசராக நேற்று முடி சூட்டப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில், அரசி பீட்ரிக்ஸ் கையெழுத்திட்டார். நெதர்லாந்தில், 1890ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தான், மன்னர் பொறுப்பேற்கிறார்.






















உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!!! - 10 herbal remedies high bp - Boldsky Tamil








அல்கேன் 7வது சுற்றில், விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி



அல்கேன் நினைவு செஸ் தொடரின் ஏழாவது சுற்றில், “உலக சாம்பியன்’ இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் அல்கேன் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், அர்மேனியாவின் லெவான் ஆரோனியன், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், பிரான்சின் லாரன்ட் பிரசினட் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பிரான்சின் லாரன்ட் பிரசினட்டை சந்தித்தார். இந்த சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.

இஸ்ரேலின் போரிஸ், சீனாவின் லிரன் டிங்கை வீழ்த்தினார். ஏழு சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (4 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். இஸ்ரேலின் போரிஸ் (4.5), பிரான்சின் மேக்ஸ்மீ (4), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (4) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மீதமுள்ள இரண்டு சுற்று போட்டிகளிலும் ஆனந்த் வெற்றி பெறும் பட்சத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

Apr 29, 2013

கொலை வெறியுடன் துரத்தும் கொலஸ்ட்ரோல் - ஒரு பார்வை!


News Service
இப்போதெல்லாம் 'காலில் ஆணி குத்திடுச்சு' என மருத்துவரிடம் போனால்கூட, 'ஷுகரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க' என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!' என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.
  
கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்!

Written By ratnam raja on Monday, April 29, 2013 | 7:49 AM


இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான ‘சீனாவில் இன்ப உலா ‘ என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு

தினமும் சாப்பிடலாம் உலர்ந்த திராட்சை




உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்...

உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.

கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்


கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்!
கின்னஸ் சாதனை படைத்த, ஒருவர், மலையிலிருந்து, இன்னொரு மலைக்கு, கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது, திடீரென மரணம் அடைந்தார். இதை பார்த்து, செய்வதறியாது நின்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மிலான் பாலியைச் சேர்ந்தவர் சைலேந்திரநாத், 45. போலீஸ் டிரைவராக பணிபுரியும் இவர்,சாகசம் செய்வதில் வல்லவர். டார்ஜிலிங்கில் ரயிலை, தனிநபராக தலைமுடியால் இழுத்து உலக சாதனை புத்தகமான, "கின்னஸ்´சில் இடம் பிடித்தவர். தன் சாகச பயணத்தின் அடுத்த கட்டமாக, டார்ஜிலிங் மாவட்டத்தில், டீஸ்ரா ஆற்றில், இரு மலைகளை கம்பியில் தலைமுடியில் தொங்கியபடி கடக்கும் சாகச பயணத்தில், நேற்று பிற்பகல் ஈடுபட்டார். 

ஒரு மலையிலிருந்து, மற்றொரு மலைக்கு கம்பியில் தொங்கியபடி அவர் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர், சாகசம் செய்வதாக நினைத்த, பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர்.

ஆனால், அந்தரத்திலேயே அவர் உயர் பிரிந்தது. பின்னர், தான் அங்கிருந்தவர்களுக்கு உண்மை தெரிந்தது.மீட்புக்குழுவினர், வந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்,சிலிகுரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...