Jul 7, 2013

Canada train blast: Lac-Megantic death toll set to rise

Related Stories

Police have said they expect more people to be found dead after a runaway train carrying light crude oil exploded in the Canadian town of Lac-Megantic.
The blast sent a fireball and black smoke into the air, killing one and forcing the evacuation of 1,000 people.
Dozens of buildings were destroyed in the town, about 250km (155 miles) east of Montreal.
They include a bar full of customers. Police are trying to account for dozens of missing people.
The train's cars reportedly uncoupled from a parked engine and derailed early on Saturday.
Rail company officials said the train had been immobilised in a neighbouring village before a scheduled crew change, but for an unknown reason had then started rolling downhill into Lac-Megantic.
Eyewitnesses said that by the time the driverless train reached the town it was travelling at considerable speed.
'Like a movie' The search for more bodies is expected to continue at dawn.
Local media have reported up to 100 people missing.
map of lac-megantic and rail route
"We have already confirmed one death and we expect there will be others," said police spokesman Guy Lapointe.
"We also expect that the number of people reported missing will be greater than the final death toll."
He said some people had been reported missing several times by different family members.
Some 120 firefighters have been fighting the blaze, which has continued for more than 24 hours.
Firefighters from across the border in the US are assisting.
Eyewitnesses reported that the town centre - where there are a number of bars - was crowded at the time of the blast, and that "chaos" ensued.
View of Lac-Megantic on 6 June Firefighters fought the blaze for more than 24 hours
Bernard Theberge, who was on the patio of the Musi-Cafe at the time, said he was lucky to escape and feared for those inside the bar.
"It was like a movie," he said, quoted by the Associated Press news agency. "Explosions as if it were scripted - but this was live."
A woman described how close she was to one of the wagons.
"There were some sparks, and the car lifted and came to lie on its side in front of me, but I turned around and ran without stopping," she told the CBC TV.

2 Dead After Boeing 777 Crashes on Landing at San Francisco International Airport


APTOPIX Plane Crash SFO
Noah Berger / AP
A fire truck sprays water on Asiana Flight 214 after it crashed at San Francisco International Airport on Saturday, July 6, 2013, in San Francisco.
A Boeing 777 airliner, operated by Asiana Airlines, crashed on landing at San Francisco International Airport on Saturday. Flight 214 was en route from Seoul, South Korea to the Bay Area. San Francisco fire chief Joanna Hayes-White confirms that two people are dead, 181 people were injured — 49 seriously. Here’s an account of the first six hours of breaking news from the scene. TIME is no longer updating this page regularly, but keep visiting TIME.com for the latest about the event.
8:51 p.m.: The Associated Press now reports that just one person is unaccounted for after the crash. A total of 181 were injured — 49 seriously.
7:38 p.m.: From the White House: Soon after the plane crash in San Francisco, CA, the President was made aware of the incident by Lisa Monaco, Assistant to the President for Homeland Security and Counterterrorism.  The President will continue to be updated as new information becomes available.  The President expressed his gratitude for the first responders and directed his team to stay in constant contact with the federal, state and local partners as they investigate and respond to this event.  His thoughts and prayers go out to the families who lost a loved one and all those affected by the crash. —Zeke Miller
7:20 p.m.: San Francisco fire chief Joanne Hayes-White has confirmed that two people have died in the incident. There were a total of 307 people on the plane — 291 passengers and 16 crew members, Hayes-White said. Approximately 130 people have been transported to area hospitals, and 60 passengers are unaccounted for. Around 2:45 PST, the investigation was turned over to the FBI, who will be coordinating with the NTSB. FBI Special Agent in Charge David Johnson said that there is no indication that terrorism was involved.
7:10 p.m.: The New York Times has a graphic that outlines the plane’s landing path and where the aircraft’s broken pieces came to rest. According to the graph, the plane skid about 2,000 feet before stopping to the left of the runway.

Read more: http://newsfeed.time.com/2013/07/06/boeing-777-crash-lands-at-san-francisco-international-airport/#ixzz2YMjJFI4g

40 ஆண்டுகளாக ஒரே உடையில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்


Published:Sunday, 07 July 2013,
டெக்சாஸ் நகரைச் சேர்ந்த 63 வயதான ஆசிரியர் ஒருவர் கடந்த நாற்பது வருடங்களாக ஒரே உடையுடன் பாடசாலைக்கு சென்றிருக்கிறார். அண்மையில் கல்லூரியின் பழைய படங்களை எடுத்துப் பார்த்தபோது நிர்வாகமே வியப்பில் ஆழ்ந்து விட்டதாம்.

கம்ப்யூட்டர் மவுஸ் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்:கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார். அவருக்கு வயது 88.அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் ரேடியோ பழுது பார்க்கும் தொழிலாளியின் மகனாக 1925ம் ஆண்டு பிறந்தவர் டக்ளஸ் எங்கல்பர்ட். இரண்டாம் உலக போர் நடந்த கால கட்டங்களில் அமெரிக்க கடற்படையின் ரேடார் டெக்னீஷியனாக பணியாற்றிய டக்ளஸ், கடந்த 1957ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த கால கட்டத்தில் ஒரு அறையையே அடைத்து கொள்ளும் அளவிலான கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

கடந்த 1963ம் ஆண்டு கம்ப்யூட்டரை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், சக இன்ஜினியர் பில்லுடன் சேர்ந்து மவுசை கண்டுபிடித்தார் டக்ளஸ். மரத்தில் செய்யப்பட்டு 2 உலோக வீல்கள், 3 பட்டன்களுடன் கூடிய மவுஸ் உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் மாநாட்டில் மவுசை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை விளக்கினார். ஆனால், 1970ம் ஆண்டுதான் இதற்கு அவரால் காப்புரிமை பெற முடிந்தது. 1980களில் சிறிய மானிட்டருடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் மவுசின் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியது.

கலிபோர்னியாவில் உள்ள ஆதர்டன் நகரில் மனைவி கரன் லியாரி மற்றும் 4 பிள்ளைகளோடு வசித்த டக்ளஸ், மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Jul 6, 2013


கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும்.

ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.

இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும் Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்





உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.
பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.
இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.



சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க... Posted by: Maha Published: Wednesday, July 3, 2013, 13:16 [IST] Ads by Google Data Recovery Expensive? Don't Pay For Data Recovery. Backup Your Data Today! Unlimited Space... www.livedrive.com/Backup-Recovery SysAid Help Desk Software All You Need in One IT Software. Get Your Free 30 Day Trial Today! SysAid.com உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 2/21 தொண்டை புண்ணை சரிசெய்ய... எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும். Show Thumbnail

மெக்ஸிக்கோ போப்போகடேபெடில் எரிமலை சீற்றம்:அமெரிக்க விமான சேவைகளுக்கு பாதிப்பு


மெக்ஸிக்கோவில் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ள புகழ் பெற்ற எரிமலையான போப்போகடெபெடில் எரிமலை கடந்த இரு நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப் படுகின்றது.
17 886 அடி உயரமான இந்த எரிமலை தற்போது புகை மண்டலத்தையும் லாவா இனையும் கக்கி வருகின்றது.

இப்பகுதியில் 7 மைல் சுற்றளவுக்கு மெக்ஸிக்கோ அதிகாரிகள் பாதுகாப்பு வளையமாகப் பிரகடனம் செய்துள்ளனர். இங்கு நில அதிர்வும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் மெக்ஸிக்கோ சிட்டி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் அமெரிக்காவின் 6 பிரதான விமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக 40 இற்கும் அதிகமான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. இதற்குக் காரணமாக அப்பகுதியில் எரிமலைச் சீற்றத்தால் வெளியாகியுள்ள கடும் புகையும், தூசி துணிக்கைகளும் விமானங்கள் பயணிக்கும் பாதையில் குறுக்கிட்டால் அது சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஆகும்.

ரத்து செய்யப் பட்ட விமானங்களுக்கான சேவை நிறுவனங்களில் டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் என்பவை முக்கியமானவை ஆகும். இதேவேளை மெக்ஸிக்கன் ஏர்லைன்ஸ் ஐச் சேர்ந்த விமானங்கள் எதுவும் ரத்து செய்யப் படவில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடைசியாக இந்த எரிமலை 2000 ஆம் ஆண்டில் பாரிய அளவில் வெடித்துச் சிதறியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

Jul 4, 2013

உங்களுக்கு எத்தனை 'வீடியோ வெப்சைட்கள்' தெரியும்?

வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.



நாங்கள் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளோம். இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.



நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.



1. YouTube



 Alexa Rank -3.

================

2.Netflix

Jul 2, 2013

பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்

  பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்



இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். 

இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது. 
லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும்.

இதயம் காக்க... எளிய வழிகள்! இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!

கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான் 'லப்டப்... லப்டப்!’ நாளன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும்.
 ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம் தொடர்பான பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்கள் இதய நோய் நிபுணர் ஜே.கே.பெரியசாமி, இதய மருத்துவர் காஞ்சனா காசிநாதன் மற்றும் டாக்டர் டி.சதீஷ் காந்தி. இதய நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் எனப் பல தகவல்களும் இந்த இணைப்பில் இடம்பெறுகின்றன. படியுங்கள்; பயன்பெறுங்கள்.
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் இதயத்தில் குறைபாடுகள் தோன்ற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பிறவிக் குறைபாடுகள் மற்றும் வளர்ந்த பிறகு வருகின்ற நோய்கள் என இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
பிறவிக் குறைபாடுகள்
  நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள், மருத்துவர் பரிந்துரைக்காமல் சாப்பிடும் மருந்துகள் போன்றவை பிறவியிலேயே இதயக் கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணங்கள்.
  அழும்போது குழந்தையின் நிறம் நீலமாக மாறுதல், அடிக்கடி சளி பிடிப்பது, அடிக்கடி நோய்வாய்படுவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல் போன்றவை, பிறவி இதய நோய்களின் அறிகுறிகள்.
 இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும். பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால் பெரும்பாலும் இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.
  இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்பட்டால் வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் தானாகவே மூடிக்கொள்ளும்.
எப்படிப்பட்ட குறையாக இருப்பினும் கவலைப்படத்தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் குறைகள் நீக்க முடியும்.
வளர்ந்த பிறகு ஏற்படும் இதய நோய்கள்
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைப் பாதிக்கும் நோய் 'சரவாங்கி’ (Rheumatic Heart Disease).வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.
  தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு, மூச்சுத்திணறல், அடிக்கடி சளி பிடித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  இந்த நோய் ஏற்பட்டால், இதய வால்வுகள் சுருங்கும். வால்வுகள் சரியாக மூட முடியாமல் கசிவு ஏற்படும். இதயத்தின் இடதுபுறம் உள்ள மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே இருக்கும் ஈரிதழ் வால்வு மற்றும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிறைச்சந்திர வால்வு ஆகிய இரண்டும் பாதிப்படையும்.
சிகிச்சை முறை:
 வால்வு சுருக்கத்தை அறுவைசிகிச்சை இல்லாமல் வால்வை விரிவுபடுத்தும் பலூன் மூலமே சரிப்படுத்திவிடலாம். மயக்கமருந்து கொடுக்கத் தேவை இல்லை.
  வலது பக்கக் காலில் உள்ள சிரை மூலமாக ஒரு மெல்லிய (0.25 மிமீ) கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, அதன் வழியாக இதயத்தின் மேல் அறைகளுக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சுவரின் வழியாக, பலூன் ஒன்று அனுப்பப்படும். சுருங்கிய வால்வில் இந்த பலூன் பொருத்தப்படும். பிறகு உடலின் வெளியில் இருந்தபடியே இரண்டு அல்லது மூன்று முறை பலூன் விரிவடையச் செய்யப்படும். சுருங்கிய வால்வும் விரிவாகி, இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  இந்த சிகிச்சையில் நெஞ்சில் தழும்புகள் ஏற்படாது.
  நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம்.
சிகிச்சைக்குப் பிறகு:
  40 வயது வரை தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு ஒருமுறை பென்சிலின் ஊசி மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.
 சுத்தமான தண்ணீர், உணவு, சுகாதாரமான காற்று அவசியம் தேவை.
  தொண்டை வலி வராமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.
 இது தொற்றுநோய் இல்லை என்றாலும், ஒரு முறை சரவாங்கி நோய் வந்தவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
மாரடைப்பு நோய்
உயிர் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு நோய். எல்லா வயதினரையும் எல்லாத் தரப்பினரையும் தாக்கும் நோய் இது. கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மனித உயிர் இழப்புக்குக் காரணமாவது மாரடைப்புதான். ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் உரிய விழிப்பு உணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மாரடைப்பின் பாதிப்பில் இருந்து நிச்சயம் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
காரணங்கள்:
மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன. புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்:
ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
  கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
  மாரடைப்பு நோய்க்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் - முக்கியமாக இடது தோளில் - ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள்  இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
  கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.
  மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.
  அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு. இதை 'ஊமைதாக்குதல்’ என்பார்கள்.
பரிசோதனை முறைகள்
முதலில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.அதன்பிறகே, தேவையான ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்)  
இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய் உள்ள ஒரு சிலருக்கு ஈ.சி.ஜி - இல் மாறுபாடுகள் இல்லாமல்கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.
அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்
அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் இதரக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய 'சி.பி.கே - எம்.பி’ ((cpk-mb - creatine phosphokinase myocardial band)என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும்.
இதேபோல ட்ரோபோனின் 'டி’ பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான குறிப்பிட்ட மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை
இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் கண்டுபிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை
சில நோயாளிகளின் இதயத்தில் உள்ள அடைப்புகள் அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் என்ற எந்திரத்தில் நோயாளியைச் செயற்கையாக நடக்கவைத்து இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை இது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை
ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது.
கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்-ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
கதிர் இயக்கப் பரிசோதனை
(நியூக்ளியர் ஸ்கேன்)
இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும்.  இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.
முதலுதவி
சி.பி.ஆர். முதலுதவி
 தீவிரமான மாரடைப்பு வருவதன் முதல் அறிகுறி, திடீர் மயக்கம்தான்.
 மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.
 மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டையில் மிக அதிக வலி, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
 இந்த அறிகுறி தெரிந்தவுடன், நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.
  நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம்.
 இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்தி 'கார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன்’ (Cardiopulmonary resuscitation - CPR) என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தீவிர இதய சிகிச்சை
  நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.
  மாரடைப்பு உறுதியானால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.  
  மன அமைதிக்கும், ஓய்வுக்கும் தூக்க மருந்து மற்றும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு கரைய சக்திவாய்ந்த 'ஸ்ட்ரெப்டோகைனேஸ்’ (Streptokinase ) உடனடியாகச் செலுத்துவார்கள்.
  மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.
 பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி)
ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு இருந்து, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஆஞ்சியோகிராம் மூலம் உறுதி செய்துகொண்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள்.
  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.
  இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை 0.014 அங்குல தடிமன் உள்ள கம்பியினால் கடந்து, அதன் மேல் ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும். இந்தக் குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும், ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கம்பிவலை பொருத்தப்படும். இதற்கு 'ஸ்டென்ட்’ (stent )என்று பெயர்.
  இதனால் ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
  தழும்புகள் இருக்காது.
  இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம். ஒரு வார காலத்துக்குப் பிறகு வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
அறுவைசிகிச்சை முறைகள்
மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக இருந்தாலோ, இதயத்தின் பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாவிட்டாலோ, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மருந்துகள் மூலமாக, ஆஞ்சியோபிளாஸ்டி மூலமாக குணப்படுத்த முடியாத வேறு சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சையே ஏற்றது.
பைபாஸ் அறுவைசிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
அடைபட்ட ரத்தக் குழாயின் அடைப்பைத் தாண்டி நல்ல பாகத்துடன், இதயத்தில் இருந்து ரத்தத்தை வெளியே எடுத்துப்போகும் மகா தமனிக்கு ஓர் ரத்தக் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த இணைப்பு நாளம் காலில் இருந்தோ அல்லது இடது கையில் உள்ள ரத்தக் குழாயில் எடுக்கப்படும்.
சிகிச்சைக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டியவை
தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைந்தது 48 மணி நேரம் நோயாளி வைக்கப்படுவார். பிறகு வார்டில் பத்துப் பன்னிரன்டு நாட்கள்வைத்துக் கண்காணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
 
பழைய நிலைக்குத் திரும்ப நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
  குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே உண்ண வேண்டும்.
  நிறைய ஓய்வெடுக்க வேண்டும்.
  மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
செயற்கை இதயம்
இந்தியாவிலேயே, சென்னையில் மட்டும்தான் செயற்கை இதய வசதி உண்டு.  
'எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கம்தான் எக்மோ. உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரல் பணியைச் செய்வது என்று அர்த்தம்.  ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். சில மணி நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, 'எக்மோ’ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற முடியும்.  இந்த கருவியைப் பயன்படுத்தும்போது மூளை செயல்படும்.  மற்றவர்களுடன் பேசலாம்.  கருவி பொருத்தியிருக்கும் நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.  சிகிச்சை பலன் அளிக்காதபோது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.  ஹார்ட்-லங் கருவி மூலம் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஒருவருக்கு ரத்த ஓட்டம் அளிக்க முடியாது. 'எக்மோ’ கருவியை மாற்று இதயம் கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.
பேஸ்மேக்கர்
நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும்.  இதனால் உடல் முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில் நோயாளிக்குச் செயற்கை இதயத் துடிப்பு அளிக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும். தற்போது நவீன வசதிகளுடன்கூடிய பேஸ்மேக்கர் கருவிகள் வந்துவிட்டன.
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாததே மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான முக்கியமான காரணங்கள். அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
  கட்டுப்பாடு இல்லாமல் உண்ணும் உணவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தாகவும் 25 சதவிகிதம் புரதமாகவும், 25 சதவிகிதம் மாவுச் சத்தாகவும் இருக்கும். கொழுப்புச் சத்தை 50 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மாவுச் சத்தை 50 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ளலாம்.
  கொழுப்பை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்க்கலாம்.
  சைவ உணவுப் பழக்கம்தான் இதயத்துக்கு மிகவும் நல்லது.
 பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பு இல்லாத பழ வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதயம் காக்கும் உணவுகள்
கடைப்பிடிக்கவேண்டியவை:
  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.
  நோ ஃபாஸ்டிங்... நோ ஃபீஸ்டிங்! (பட்டினியும் கூடாது. விருந்தும் வேண்டாம்!)
  காய்கறி சாலட் அவசியம் சாப்பிட வேண்டும்.
  வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்.
  ஆரோக்கியமான சுத்தமான புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
  அதிகக் காரம், புளிப்பு, இனிப்பு, கொழுப்பைக் குறையுங்கள்.
  அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
  நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
 பேக்கிங் சோடா, அஜினோமோட்டொ, சில சாஸ் வகைகளில் நைட்ரோசைமன் என்ற வேதிப்பொருள் அதிகம் இருக்கும். இவற்றைத் தவிர்க்கவும்.
 வறுத்த, பொரித்த உணவுகளை வெறுத்து ஒதுக்கிவிடுங்கள்.  
 சமையலில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப திரும்பப் பயன்படுத்தக் கூடாது
 செயற்கை இனிப்புகள் மற்றும் செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
  பாடி மாஸ் இண்டெக்ஸ் மூலம் உடல் எடை ஆரோக்கியமானதா என்று கணக்கிடலாம்.  பி.எம்.ஐ.புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் ப்ளீஸ்... உஷார்!
  எடை மிகவும் அதிகமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  
  இடுப்பு அளவைக் கணக்கிடுங்கள்.  இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  குறைந்த அளவிலான எடைக் குறைப்புகூட கூடுதலான பலனை அளிக்கும்.  உங்கள் எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.  
  பெரியவர்களுக்கு அதிக அளவு உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும்.  இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
இதமான உடற்பயிற்சிகள்
இதய நோயாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும்.
 
நடைப்பயிற்சி
வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்ற உடற்பயிற்சியே பொதுவாக மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் ஒன்றரை நிமிடத்தை அதிகரிக்கிறது. தினமும் 20 முதல் 30 நிமிடம் நடந்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 கிலோ வரை கூடுதல் எடையைக் குறைக்க முடியும்.
'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே...
 இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும்.
 ரத்த அழுத்தம் சீராகும்.
 மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
 மன அழுத்தம் குறையும்.
 நல்ல உறக்கம் கிடைக்கும்.
 சர்க்கரை நோய் குறைகிறது.
 கெட்ட கொழுப்புச் சத்து குறையும்.
 புற்றுநோய்க்கான சாத்தியங்கள் குறையும்.
 மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கப்படும்.
ஏரோபிக் பயிற்சி
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஏரோபிக் எக்சர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.
  லேசான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாகப் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம்.
  உடற்பயிற்சி செய்யும்போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால், உடனடியாகப் பயிற்சியின் அளவு மற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.
  அடைப்பு இருந்தால் அதன் அளவும் குறையும்.
  உடலில் கொழுப்பின் அளவும் குறையும். நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும்.
  உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
சில சந்தேகங்களும், பதில்களும்
மாரடைப்புக்குப் பிறகு உடனே உடற்பயிற்சி செய்யலாமா?
மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும் கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும் ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.
மாரடைப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டலாமா?
மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்துக்கு மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
விமானத்தில் செல்லலாமா?
மருத்துவர் மற்றும் விமான முகவர்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும். சில விமான நிறுவனங்கள் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, மூன்று மாதங்கள் வரை நோயாளிகளை வரவேற்பதில்லை.
மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் எப்போது ஈடுபடலாம்?
குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லை. சிரமம் இன்றி உடற்பயிற்சி செய்யும் நிலை ஏற்படும் வரை (உதாரணமாக இரண்டு மாடிகளில் ஏறி இறங்குவது) தாம்பத்ய வாழ்வைத் தள்ளிப்போடுவது நல்லது.
மாரடைப்புக்குப் பிறகு எப்போது வேலைக்குத் திரும்பலாம்?
பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஓய்வில் இருப்பது நல்லது. கடினமான வேலை செய்பவர்கள் அலுவலகப் பணி செய்பவர்களைவிட அதிக நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.
யோகா
ஆரோக்கியமான உடலையும் மகிழ்ச்சியான மனதையும் தருவது யோகாதான். ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய யோகாவை முறையாகப் பயின்று பயிற்சி செய்துவந்தால் அற்புதமான நன்மைகளைப் பெறலாம்.
பலன்கள்:
  உடற்பயிற்சி இல்லாதபோது, உடலில் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் போன்ற பல பகுதிகளுக்கும் போதுமான அளவு ரத்தம் பாயாது. ஆனால் யோகா செய்யும்போது அனைத்து உறுப்புகளுக்கும் சீராக ரத்த ஓட்டம் கிடைக்கும்.
  சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது, நுரையீரலின் கொள்ளளவில் ஆறில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். யோகா பயிற்சி செய்யும்போது நுரையீரலின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆக்சிஜன் அதிக அளவில் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கிறது.
  இன்றைய சூழலில் டென்ஷன் எனப்படும் மன அழுத்தம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஒரு முறை கோபப்பட்டால் ஏற்படும் ரசாயன மாற்றங்களால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பல மணி நேரத்துக்குப் பாதிக்கப்படுகிறது. தியானத்தால் மனதை அமைதிப்படுத்த முடியும்.  மனம் மகிழ்ச்சியில் துள்ளும். மனமும் உடலும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  சிரிக்கும்போது கூடுதலாகப் பிராண வாயு உள்ளே இழுக்கப்படுகிறது. கூடுதலாக கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு வெளியேற்றப்படுகிறது. ரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தம் சீராக உடல் எங்கும் பாய்கிறது. சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன. முக்கியமாக இதயம் வலுவடைகிறது.
இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...