Sep 2, 2013

பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்





பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…



மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.


அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.

ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு.
FILE

ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.

பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நன்றி - பசுமை இந்தியா, ஆசிரியர் - டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்.

Sep 1, 2013



சிற்பனை முருகன் கோவில் வேலணைகொடியேற்றம் 01.09.2013

Aug 30, 2013

தெரிந்து கொள்ளுங்கள்.


இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,

ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,

டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,

நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,

எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்


நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

nkpathmanathan
யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.

எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.

தனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.

இவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து கொண்டார்கள்.

பத்மாதன் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். 1968ம் ஆண்டில் சென்னை மியூசிக் அக்கடமியிலும், பின் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் நாதஸ்வரம் வாசித்து பாராட்டுப் பொற்றுள்ளார். 1979இல் இலண்டனில் இருக்கின்ற பிரபலமான இசைக்கூடங்களில் ஒன்றான West Minister Hall இல் இவரது இசைக்கச்சேரி இடம்பெற்றது.

1963ம் ஆண்டு சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தான கும்பாபிடேகத்தில், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பத்மநாதன் அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருக்கின்றார்கள். 1964இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இவருக்கு “நாதஸ்வர கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே 47 வருட காலம் ஆஸ்தான வித்துவானாகவும் பணிபுரிந்த இவருக்கு, 1982ம் ஆண்டு இலங்கையில் கலைஞர்களுக்கான உயரிய விருதான கலாசூரி விருது கிடைத்தது.

தன் இறுதிக்காலம் வரையில் ஒரு நாதஸ்வரக் கலைஞனாகவே வாழ்ந்த கலசூரி பத்மநாதன் அவர்கள், தனது 72 ஆவது வயதில் 2003ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி இறையடி சேர்ந்தார்.நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

nkpathmanathan
யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.

எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.

தனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.

இவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து

இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது.


இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது. சென்னை நகரை தமிழர் நகரமாக மீட்டெடுக்க இன்று நாம் சூளுரைப்போம்.

வரலாற்று ரீதியாக சென்னை நிலப்பரப்பை தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். சோழர்களின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்துள்ளது. பிற்காலத்தில் பல்லவர்கள் , நாயக்கர்கள், ஆங்கிலேயர் , பிரெஞ்ச் இனத்தவர் கட்டுப்பாட்டிலும் சென்னை நகரம் இருந்துள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது சென்னையை ஆந்திராவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் தெலுங்கர்கள். 'மதராஸ் மனதே' என்று முழக்கமிட்டனர். ஆனால் தமிழர்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக சென்னை மீட்கப்பட்டது. ஆனால் தமிழர் வழிபாட்டுத் தலமான திருப்பதியை நாம் இழக்க நேரிட்டது.

இன்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னை வந்துவிட்டாலும் வேற்றின மக்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது சென்னை . தமிழர்கள் வாடகை வீட்டிலும் , வேற்றின மக்கள் சொந்த வீட்டிலும் வாழ்கின்றனர். சென்னையை தமிழர்களின் நகரமாக முழுவதும் மாற்ற முடியாத சூழ்நிலையே இப்போது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...