Sep 12, 2013

இரைப்பையில் என்ன நடக்கிறது.


நாம் சாப்பிட்ட பின்னர் நடைபெறும் உணவு ஜீரணித்தால் என்பது மிகச் சிக்கலான இயற்கை ரசாயன பரிசோதனை போன்றது. இரைப்பைக்குள் நடக்கும் அத்தனை விஷயங்களையும் செயற்கையாக ஒரு சோதனைக் குழாயில் நடத்திப் பார்த்துவிட விஞ்ஞானிகள் நினைத்தார்கள். 

மனித உடலில் உள்ள எல்லாவிதமான ஜீரண அமிலங்களையும் வைத்துக் கொண்டு செயற்கையாக வெற்றிகரமாக சோதனைச் சாலையில் நிகழ்த்த விஞ்ஞானிகளால் முடியவில்லை. அந்த அளவுக்கு சிக்கலான பல நிகழ்வுகளை கொண்டது செரித்தல் என்னும் செயல். 

இரைப்பையில் உள்ள அமைலேஸ்,பெக்டேஸ் போன்ற பல நொதிகள் இந்த செரித்தல் செயலை நிகழ்த்துகின்றன. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் எளிய பொருட்களாக கரைக்கப்பட வேண்டும். உணவுக் கொழுப்பை எளிதாக கரைக்க செரிமான மண்டலத்தில்

வைட்டமின் என்றால் என்ன?

Role of Vitamins in Goodness of Health - Food Habits and Nutrition Guide in Tamil
மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.
வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.
உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும்,

உங்களுக்கு “இதுபோன்ற அறிகுறிகள்” காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்!


சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டா கி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. கால் முழுவதும் மரத்துப்போன து போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி கால் குடைச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார் கள். இருமினாலோ தும்மினாலோகூட இடு ப்பில் கடுமையான வலி ஏற்படும். குனிந்தா ல் நிமிர முடியாது, ஒரே இடத்தில் அதிக நே ரம் உட்கார்ந்தபின் எழும்போது சாய்ந்தபடி நடப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். அது இடுப்பில் உள்ள டிஸ்க் விலகியதன் அறிகுறியாகும்.
தோள்பட்டை வலி:
பொதுவாக வயதானவர்கள் சிலர் கையை பக்கவாட்டில் தூக்க முடியாமல் சிரமப் படு வர். 70% பேர் தோள் பட்டை யிலுள்ள சவ்வு பாதிப்பினா ல் தோள்பட்டையில் வலி, பிடிப்பு என அவதிப்படு வர். தோள்வலி முதலில் கையி ன் முன்புறத்தில் குத்தல் போ ல தொடங்கும். இரவில் தூக்கத்தின் இடையில் கையை அசைத்தால் திடீரென பொறுக்க முடியாத வலி ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளை தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டால் பின்பு தோள் பட்டை மூட்டு முற்றிலும் தேய்ந்து கையை மேலே தூக்கவோ, பக்கவாட்டில் தூக்கவோ, பின்புறம் மடக்கவோ முடியாத நிலை ஏற்படும்

Sep 11, 2013

London-Part Of town

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

 

chidambaram-natarajar-temple
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை காண்போம், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

Datesஅவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

தேங்காயின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

coconuts
தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்…
* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.
* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.
* ‘லாவுரிக் ஆசிட்’ எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்

hidden-system-tools

நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.
இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.
1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.
2. ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து

புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்
 
புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒரு நோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூற முடியும்.
இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்று நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. மஞ்சளும் இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்து விடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையெல்லாம் சோம்பேறிகளுக்கானவை.
மஞ்சளையும் இஞ்சியையும் மருந்து பெட்டியில் வைக்க வேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பச்சைத்தேயிலையில் எபிகலோ கேட்டசின் கலேட் மற்றும் கேட்டசின்ஸ் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில் கூட தவறில்லை.
தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும் போது பயனுள்ள வேதிப்பொருளான கேட்டசின்ஸ் இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.புற்று நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒரு நோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூற முடியும்.
இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்று நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. மஞ்சளும் இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்து விடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையெல்லாம் சோம்பேறிகளுக்கானவை.
மஞ்சளையும் இஞ்சியையும் மருந்து பெட்டியில் வைக்க வேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பச்சைத்தேயிலையில் எபிகலோ கேட்டசின் கலேட் மற்றும் கேட்டசின்ஸ் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில் கூட தவறில்லை.
தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும் போது பயனுள்ள வேதிப்பொருளான கேட்டசின்ஸ் இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...