Feb 24, 2014

சென்னை பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடுக்கிடும் புதிய தகவல்கள்


சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவருடைய மகள் உமாமகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் தங்கி கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற உமாமகேஸ்வரி, அதன்பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை பாலசுப்பிரமணி கடந்த 15-ந் தேதி மகளை காணவில்லை என கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கடந்த 22-ந் தேதி சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் உமாமகேஸ்வரி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த உடை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து போலீசார் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உமாமகேஸ்வரியின் கழுத்து, அடிவயிறு பகுதியில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார்

சில தகவல் துளிகள்




தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. 

வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை.

6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.

தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. 

இது தன் சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்புக், அவர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்ட தாகவும், இவர்களின் நிதி நிலை குறித்த தகவல்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் தெரிவித்தது. 

எவ்வளவு திறமையான சாப்ட்வேர் வல்லுநர் களைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், 100 சதவிதம் பிழை இல்லாத அப்ளிக்கேஷன் களை அமைக்க இயலாது என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா: ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள ராட்சத மாம்பழம் திருட்டு



mangoங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள்.
ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது.
சுமார் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக காணாமல் போனதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். இது பற்றிய தகவல் அறிந்த சுற்றுலா துறை அதிகாரிகள் விரைந்தோடி வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
நள்ளிரவு 2 மணியளவில் ராட்சத கிரேனுடன் அப்பகுதிக்கு வந்த சிலர் அந்த மாங்காய் சிற்பத்தை பீடத்துடன் பெயர்த்து எடுத்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. ’இவ்வளவு பெரிய ராட்சத மாம்பழத்தை திருடி சென்றவர்கள் அதை அவ்வளவு சுலபமாக மறைத்து வைக்க முடியாது. விரைவில் அந்த சமூக விரோதிகள் பிடிபட்டு விடுவார்கள். மாம்பழத்தையும் மீட்டு பழைய இடத்திலேயே நிறுத்தி வைப்போம்’ என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன.


இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க...


பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…

இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

Feb 22, 2014

சிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை

 


சிவனொளி பாத (Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் நல்ல தண்ணி நகரிலிருந்து இரத்தினபுரியில் உள்ள பெல்மதுல்ல ரஜமஹா விகாரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் பௌர்ணமி தினத்தில் மீண்டும் யாத்திரை காலம் ஆரம்பிக்கும். நிரத்தரமாக வெளிச்சம் தரக் கூடிய மின்குமிழ்கள் மலையின் உச்சியில் வெளிச்ச வீடு போல பொருத்தப்பட உள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இவ் வருடம் பெப்ரவரியில் குறிப்பிட்ட ஒருநாளில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் தர்சிக்கச் சென்றிருக்கின்றார்கள்.

Thanks :- goldensrilanka.com
திருமணமாகிய போது கணவர் வேலை புரிந்த இடம் பதுளை மாவட்டம். ரயிலில் செல்லும்போதே ஹட்டனுக்கு அப்பால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நின்ற மலைச் சிகரம் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்தபோதே செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

சேர்ந்து செல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இவ்வளவு தூரம் ஏறமுடியாது என்றார்கள் சிலர். எனது ஆசையும் நிறைவுறாது தொடர்ந்தது. பல வருடங்களின் பின்புதான் ஒரு சித்திரை வருடப் பிறப்பு செல்வதற்கான நேரம் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைக்கு இப் பயணத்தில் எங்கள் சகோதரர் குடும்பத்தாரையும் நாத்தனார் குடும்பத்தாரையும் கூட அழைத்துச் சென்றோம்.

ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை




முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!!!ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.
முருங்கையின் நன்மைகள் :
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!!

Feb 20, 2014

பாவங்களை விளக்கும் தர்ப்பன பூமி

சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கூத்தனூர். அது ஸரஸ்வதி ஆலயத்திற்கு புகழ் பெற்ற தலம். மாணவ மாணவிகள் பரிட்சை நேரங்களில் அங்கு சென்று பேனா, பென்சில் போன்ற வற்றை வைத்து வணங்கி தாம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் அந்த ஆலயத்துடன் சம்மந்தப்பட்டுள்ள திலகை பதி என
அழைக்கப்படும் தர்பண பூமி அதாவது ஸ்ரீ முக்தீஸ்வரர் - சொர்ண வல்லி ஆலயம் பற்றிய பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
இராமபிரான் இராவணனை வென்று தன் நாட்டிற்குத் திரும்பியதும்," தர்பண பூமிக்குச் சென்று அங்கு பித்ரு காரியங்களை செய்து முடிந்ததும் கூத்தனூர் ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கிய பின்னர் தான் அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின". ஆகவே முக்தீஸ்வரர்- சொர்ண வல்லி ஆலயம் செல்பவர்கள் கூத்தனூர் ஆலயத்திற்கும் சென்று வணங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும் என கருதப்பட்டது. அதன் கதையை இனிபடியுங்கள்:

ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய அமைப்பு:

கூத்தனூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலயம். அதன் பக்கத்தில் அரி-சிவா என்ற ஆறு உள்ளது. அந்த ஆலயத்தின் தெற்கு முக நுழை வாயிலில் நர முக வினாயகர் என்ற பெயரில் அதாவது மனித முகத்துடன் கூடிய வினாயகர் எழுந்தருளி உள்ளார். உலகில் எந்த ஆலயத்திலும் மனித உருவுடன் வினாயகர் காட்சி அளிக்கும் நிலையில் சிலை கிடையாது என்பது அ தன் விஷேசம். ஆலயத்தில் கிழக்கு நோக்கி நாகம் பிடித்திருந்த குடையின் கீழ் அமர்ந்தபடி முக்தீஸ்வரர் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்புறச் சன்னதியில் பித்ரு லிங்கங்களும், இராமபிரான் மற்றும் நந்தி சோதன் என்ற மன்னனின் சிலைகளும் உள்ளன. மற்றொருபுறத்தில் மந்தார மரமும்;, அதன் அருகில்; சிவலிங்கம், தஷ்ணா மூர்த்தி போன்ற சிலைகளும் உள்ளன.

ஆலய வினாயகர் - பார்வதி தேவியின் கதை:

வினாயகர் பற்றிய கதை என்ன எனில் ஒரு முறை பர்வதி அந்த இ டத்திற்கு வந்து குளித்துக் கொண்டு இருந்த பொழுது ஆண்கள் எவரும் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணி நுழைவாயிலில் தனக்குக் காவல் இருக்க வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார் மஞ்சளினால் செய்யப்பட்ட ஒரு உருண்டையை பிடித்து; வைத்து விட்டு குளிக்கச் சென்ற பொழுது அந்த மஞ்சள் உருண்டை அவளுடைய பிள்ளையான வினாயகராக உருவெடுத்து காவலில் நின்றது. அதன் பிறகு பல காலம் பொறுத்துத்தான் அங்கு வந்த சிவனாரை உள்ளே விடாமல் தடுத்த பிள்ளையாருடைய தலை போன கதையும், யானை முகம் பெற்ற கதையும் நிகழ்ந்தனவாம்.ஆகவே பார்வதி அந்த தலத்தில் குளிக்க வந்த பொழுது காவலுக்கு நின்ற அங்குள்ள வினாயகர் ஆலயத்தில் உள்ள வினாயகர் மனிதத்

புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்



இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும்.

தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்" (ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக. Com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனை "dot com" boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின.

பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்



அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. 

ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 

பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.


1. ஓர் எளிய தொடக்கம்: 

2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 

Feb 19, 2014

24ஆம் தேதி பூமியை தாக்கும் ராட்சத விண்கல்


 24ஆம் தேதி பூமியை தாக்கும் ராட்சத விண்கல்
லண்ட9 (டி.என்.எஸ்) பூமியை தாக்க ராட்சத விண்கல் ஒன்று பாய்ந்து வந்துக்கொண்டிருப்பதாகவும், அது கால்பந்து மைதானத்தைவிட 3 மடங்கு பெரியதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ன்,பிப்.1
'ரொபோடிக் டெலஸ்கோப்' மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. (டி.என்.எஸ்)

Feb 18, 2014

96 வகை தத்துவங்கள்


தத்துவங்கள் 96

{ஆன்ம தத்துவங்கள் -24 உடலின் வாசல்கள் -9 தாதுக்கள் -7 மண்டலங்கள் -3 குணங்கள் -3 மலங்கள் -3 வியாதிகள் -3 விகாரங்கள் -8 ஆதாரங்கள் -6 வாயுக்கள் -10 நாடிகள் -10 அவத்தைகள் -5 ஐவுடம்புகள் -5}
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்  தத்துவா தீதமேல் நிலையில்  சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்  சிவநிலை தெரிந்திடச் சென்றேம்  ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்  
ஒருங்குறக் கரைந்துபோயினம்என்  றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்  அருட்பெருஞ் சோதிஎன் அரசே. – -(அருட்பெருஞ்சோதி அட்டகம் )
ஆன்ம தத்துவங்கள் 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளைஉடையது. அவை, பூதங்கள் – 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) ஞானேந்திரியங்கள் -5 (மெய், வாய், கண், மூக்கு, செவி) கர்மேந்திரியங்கள் -5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்) தன்மாத்திரைகள் -5 (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) அந்தக்கரணங்கள் -4 ((மனம், அறிவு, நினைவு, முனைப்பு)

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...