Feb 28, 2014




முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­பம் தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­யுள்­ளது.
இதன் பிர­காரம் மேற்­படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலை­முறை கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களில் 900 மில்­லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முத­லீடு செய்­துள்­ளது.

இந்த சேவையை பரீட்­சார்த்­த­மாக 2017 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தவும் அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்குள் வர்த்­தக ரீதி­யாக செயற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தொழில்­நுட்­ப­மா­னது ஒரு செக்­கனில் 800 மெகா பைட் அள­வான திரைப்­பட கோப்பை பதி­வி­றக்கம் செய்­வ­தற்கு பயன்­பாட்­டா­ள­ருக்கு அனுமதிக்கிறது.

இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.

பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்

பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும். நாமும் சிவப்பு நிற விரிப்பின் மீதே அமர வேண்டும். 

ஒரு மரப்பலகை மீது சிவப்பு நிற விரிப்பை விரித்து அதன் மீது ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்து அதன் மத்தியில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்தையும், வலம்புரிச் சங்கையும் வைக்க வேண்டும். 

குங்குமம், அட்சதை, ரோஜா இதழ்கள் ஆகியன கொண்டு அவற்றை அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு, பிறகு குரு வணக்கம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். 

ஜபம் செய்ய தாமரை மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும். புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு ஆகிய மூன்று நாட்களும் செய்து முடித்து விட்டு சனிக்கிழமை வரும் சுக்ர ஹோரையன்று ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றை நமது வியாபார ஸ்தலங்களிலோ, அலுவலகத்திலோ, 

தொழிற்கூடங்களிலோ, அல்லது நமது வீட்டின் பூஜையறையிலோ வைத்து தினமும் தூப தீபம் காட்டியும், மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சாடனமும் செய்து வந்தால் பணம் பல வித வழிகளில் நிச்சயம் வந்து சேரும்.

Feb 27, 2014

இலவசமாக Video tutorial ஐ பெற்றுக் கொள்ள வேண்டுமா?...

இலவசமாக Video tutorial ஐ பெற்றுக் கொள்ள வேண்டுமா?....

மேலும்

கணணி தொடர்பான சந்தேகங்களுக்கான தீர்வு....!!!!

ஒவ்வொரு வாரமும் எமது சேவையில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அனுப்பி நீங்களும் வெற்றியாளராகி உங்களுக்கு தேவையான Video tutorial ஐ பெற்றுக்கொள்ளுங்கள்...

நீங்களும் பங்குபற்ற விரும்பினால் உங்கள் (டயலொக்) தொலைபேசியில் இருந்து

REG (இடைவெளி) SRN

என Type செய்து 77000 க்கு அனுப்புங்கள்.
( ஒரு நாளைக்கு Rs.1.00 மட்டுமே..! )

Video tutorial விபரம் வருமாறு

அனைத்தும் தமிழில்

Photoshop

Autocad

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?


உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை. ...

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும். Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது.

இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது.

இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது. Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்...

download...

http://adf.ly/e8MUj

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்


ராமபிரான் வனவாசம் சென்ற போது தண்டகாரண்யம் காட்டுக்கு அருகில் உள்ள கிருஷ்ணா நதிக்கரைக்கு சென்றார். அந்த நதிக்கரை அருகே கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த பொய்கைக்குக் கலசரஸ் என்று பெயர். அந்த குளக்கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டார்கள். 

அவர்களில் ஒருவர் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷின்னு ஒருவர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார். `இந்தச் சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கிறது கொஞ்சம் கூட சரியல்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா? 

முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால் தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள் என்று வித்வஜிஹ்மரிடம் கூறினார். `சம்சார பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. 

வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைகள் கஷ்டப்படுகிறதை பார்த்து விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்தேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே' என்றார் வித்வஜிஹ்மர். `நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால் தான் தர முடியும்! 

நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்து இருக்கிறார்கள். சுப்ரமணியனும் விநாயகனும் ஐயப்பனும் கூட திருமணம் செய்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள். உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நீங்கள் உருவாகி இருக்க முடியுமா? 

மேலும் என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா போன்றவர்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி. 

அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதுக்கு `மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையாப அவங்க ஏன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தார்கள்? 

அதற்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் வித்வஜிஹ்மர். கவுஸ்திமதி முனிவர் தன்னோட தவ வலிமையப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து வித்லஜிஸ்மரின் கேள்விகளைக் கேட்டார். 

அதற்கு நாராயணன் `நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கிறான். அதேபோல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. 

காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பதுகஷ்டம் என்று அவங்க ஒருநாளும் நினைக்கலையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார். துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களைத் சொன்னார். 

அவர் என்ன பாவம் என்று நினைத்தாராப மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தர வேண்டும் என்று பிரம்மா நினைத்தார். லட்சுமி இதை விரும்பாத காரணத்தால் நான் தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்கள். 

ஜிஹ்மர்கிட்ட வசுமதியைக் திருமணம் செய்யலாம் என்று சொல் என சம்மதம் சொல்லி அனுப்பினார். பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது. கவுஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். 

சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளை கூறினார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள். அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராப் பார்த்து இருக்கிறாள். சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்

சிவராத்திரி விரதமும் பூஜையும், இகபர சுகங்களை.முக்கியமாகக்சிவராத்திரியன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்கடைப்பிடிக்க வேண்டியதாகும். சிவராத்திரி அன்று, விரதம் இருப்போர் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள் வருமாறு:- 

1. சிவாலய தரிசனமும் சிவனுக்கு அபிஷேகப் பொருள்கள் சமர்ப்பித்தலும் மிக முக்கியம். 

2. முடிந்தால் வீட்டில், மாலை வேளையில் சிவபூஜை செய்யலாம். குலதெய்வமாக சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் சிவபூஜை செய்ய வேண்டும். 

3. நிவேதனத்திற்கு பாசிப்பருப்பு பாயசம், வேக வைத்து, வெல்லம், ஏலக்காய் சேர்ந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலியவை விசேஷம். மற்ற நைவேத்தியங்களும் வைத்து வழிபாடு செய்யலாம். 

4. இரவு முழுக்க கண் விழித்து, சிவ ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். டி.வி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 




நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*www.zedge.com

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி

Feb 26, 2014

Nayanthara Hansika Fight in Chennai Airportசென்னை விமானநிலையத்தில் நயன்தாரா, ஹன்சிகா நேருக்கு நேர் மோதல் (வீடியோ இணைப்பு)

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கிருஷ்ணகிரி, பிப்.27-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடைப்பெற்றது.

விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான அஸ்லம்ரஹ்மான் ஷெரீப், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மாதன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வேல்மணி, காங்கிரஸ் நகர பொருளாளர் குருந்தப்பன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 806 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது
நைஜீரியா, பிப்.27-

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "எலிவிஸ், அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு அடைத்து உள்ளார்" என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...