Aug 28, 2012

வேளாங்கண்ணி திருவிழா வரும் 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!


  





வேதாரண்யம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா, வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து, சர்ச் அதிபர் மைக்கேல் அடிகள் கூறியதாவது: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சர்ச் ஆண்டு திருவிழா, ஆக.,29ம் தேதி துவங்கி, செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடக்கிறது. அனைத்து ஊர்களுக்கும் போக்குவரத்து,ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. நாகை வந்து செல்லும் அனைத்து ரயில்களும் வேளாங்கண்ணிக்கு வர, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், இலவச தங்குமிடம்,
குளியலறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க நிர்வாகத்தின் சார்பில், பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டுகளை குறைக்கவும், பாதுகாப்புடன் வந்து செல்லவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நடைபயணமாக வரும் பக்தர்கள் ஆர்ச் வழியாக மாதாகுளம் செல்லும் வழியில் சிறிது தூரம் சென்று, புதிதாக கட்டப்பட்டு வரும் விண்மின் ஆலயத்துக்கு பின்புறமாக சென்று பேராலயத்தை அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...