Sep 10, 2012

நியூயார்க் நகரை சூறாவளி புயல் தாக்கியது: வீடுகள் தரை மட்டம்


 
அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலை ஒட்டிய வட கிழக்கு மாகாணங்களில் சூறாவளி புயல் வீசுகிறது. இப்புயல் நியூயார்க் நகரை நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. அடுத்தடுத்து 2 சூறாவளி புயல்கள் தாக்கின.
 
முதலில் வீசிய புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் தூசிகளும், மணலும் வாரி இறைக்கப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் மற்றொரு புயல் தாக்கியது. இது மிகவும் கடுமையாக இருந்தது. நியூயார்க்கில் அதை சுற்றியுள்ள 10 மைல் சுற்றளவும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இத் தாக்குதலில் வீடுகள் தரை மட்டமாயின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. ரோடு களில் சென்ற கார் உள்ளிட்ட வாகனங்கள் தலை குப்புற கவிழ்ந்தன. மின்சாரமும் டெலிபோன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
 
இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். நியூயார்க் அருகே உள்ள குவின்ஸ் மற்றும் புரூக்ளின் நகரங்களுக்கும் சூறாவளி புயல் எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...