May 22, 2012

பித்தமே மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா இவற்றை சீராக இயக்கும் சக்தி


இத்தகைய சிறப்பு வாய்ந்த செயல்களைச் செம்மைப்படுத்தி உடலை இயங்கவைக்கும்  பித்தமானது உடலில் பல பாகங்களில் இருந்துகொண்டு மேற்கண்ட செயல்களை நிறைவேற்றுகிறது.  இதன் செயல்பாடுகள், இருக்குமிடம் ஆகியவற்றைக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் இயக்கம் மற்றும் தன்மை பற்றி தெளிவாகக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
அவை பாசகம், இரஞ்சகம், சாதகம், பிரகாசம், ஆலோசகம் என்பவையாகும்.
கடந்த இதழ்களில் பாசகம், இரஞ்சகம் என இருவகைப் பித்தத்தின் செயல்பாடுகளை விரிவாக அறிந்தோம்.
இந்த இதழில் சாதகப் பித்தத்தின் இருப்பிடத்தையும், செயல்பாடுகளையும் பற்றி அறிந்துகொள்வோம்.
சாதகப் பித்தம்
சாதகப் பித்தத்தை சாதனைப்பித்தம் என்றே கூறலாம்.  இது இதயத்திலிருந்து மூளை, வரை தொடர்புடையது.
மனம், புத்தி, ஆசை, பற்று, எண்ணம், செயல் இவற்றைச் சீர்படுத்தும் பித்தமாகும்.
பலப்பல சாதனைகளைச் செய்து வாழ்வின் வெற்றியாளனாக மாற்றுவது
இந்த சாதகப் பித்தம்தான்.
எண்ணங்கள், கற்பனைகள், அவற்றை நிறைவேற்றும் தன்மையாவும் சாதகப் பித்தத்திற்கு உண்டு.
பித்தம் பிசகினால் பேசாமல் போய்விடும் சக்தி என அகத்தியர் குறிப்பிடும் பித்தம் இந்த சாதகப் பித்தம் தான்.
இது அறிவு, ஆற்றல், ஆன்மா இவற்றுடன் சம்பந்தப்பட்டது.  எண்ணங்களின் வலிமையே செயல்களின் வெற்றி என்பார்கள்.  மனதை ஒருநிலைப்படுத்தி, எண்ணங்களைவலிமையாக்கி அல்லும் பகலும் அதுபற்றிய சிந்தனையை ஊட்டி அதை நிறைவேற்றும் சக்தி சாதகப் பித்தத்திற்குண்டு.
அபார ஞாபக சக்தி, தெளிந்த சிந்தனை, அசுர தைரியம், மன உறுதி, மன வேகம், யோகம், ஞானம்,  இறைநிலை போன்றவற்றைக் கொடுப்பது சாதகப் பித்தம்தான்.
இந்த சாதகப் பித்தமானது உடல் கூறுகளுக்கு தகுந்தவாறு உடலில் செயல்படுகிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திடுவது சாதகப் பித்தம்தான்.  புதிய புதிய நவீன கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடிக்கத் தூண்டும் சக்தி இதற்குண்டு.
ஒருவரை தலைசிறந்த விஞ்ஞானியாகவும் சிறந்த பொருளாதார நிபுணராகவும், ஆன்மீக சக்தி பெற்ற ஞானியாகவும் திகழச் செய்வது சாதகப் பித்தம்தான்.
தலைசிறந்த எண்ணங்கள், தெளிவான சிந்தனை, அன்பான, கனிவான பேச்சுக்கள், எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்கச் செய்யாத தன்மை, மனதில் உறுதி போன்றவற்றை உருவாக்கும் தன்மை  சாதகப் பித்தத்திற்குண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதகப் பித்தமானது பயம், அதீத கோபம், மன அழுத்தம், மன எரிச்சல், அதிக வேலைப்பளு போன்ற காரணங்களாலும், உடல் அலர்ஜியாலும், மன வேதனைகளாலும் சில நேரங்களில் மனநிலை தட்டுத்தடுமாறி தன் நிலையிலிருந்து மாறி மற்றொரு நிலைக்கு போய்விடுகிறது.  இவ்வாறு நிலைமாறும்போது உடலும் மனமும் தடுமாற்றமடைந்து எந்த ஒரு செயலிலும் விருப்பமில்லாமல் வெறுப்புடன் இருக்கும்  நிலையை உருவாக்கும்.    மேலும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பலவிதமான நோய்களுக்கு இட்டுச் செல்லும்.

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்!!புறச் சூழ்நிலையாலும், அகச் சூழ்நிலையாலும் உண்டாகும் பாதிப்புகளால் சாதகப் பித்தம் அலர்ஜி ஆகி அது மனம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தி, உடலையும் பாதித்துவிடச் செய்கிறது.

பித்தத்தின் இதர பணிகள் பாதிக்கப்பட்டாலும் சாதகப் பித்தம் பாதிப்படையும்.
தியானம், மன அமைதி, சாந்தமான நிலை, இறைவழிபாடு இவற்றைக் கடைப்பிடித்து அளவான உணவு, எளிதில் சீரணமாகும் உணவு, போதிய ஓய்வு, நல்ல தூக்கம் இவைகளை மேற்கொண்டால் சாதகப் பித்தத்தை சீராக செயல்பட வைக்க முடியும்.
சரசுவாசத்தின் மூலம் மனதை ஒரு நிலைப் படுத்தி செயல்படுத்தினாலே சாதகப் பித்தம் சாதனைப் பித்தமாக மாறும்.


* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

வாழையின் மகத்துவம்.

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விடயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்.


50
சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா

நமது உடல் பஞ்சபூதக் கலவையால் ஆனது. நமது உடம்பின் ஆதாரம் எலும்புகளையும் நரம்புகளையும் தசைகளையும் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. நமது உடலை முனிவர்கள் நாரால் பின்னப்பட்ட கட்டில் என்றே சொல்கிறார்கள். நமது உடம்புக்கு அழகு தருவது தசையின் அம்சமே ஆகும்.
உடலை இளமையுடன் நீடிக்கச் செய்வதும் தசையின் பிரதான வேலையாகும். ஒருவரது முகப் பொலிவு, தேஜஸ், வசீகரம் ஆகியவை அவரது தசைகளினால்தான் உருவாகிறது.
வாலிபத்தில் தசை முறுக்கேறுவதையும் வயோதிகத்தில் தசை உருக்குலைந்து போவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில் யாரும் நிரந்தரமல்ல. இக்கலியுகத்தில் யாரும் மார்க்கண்டேயனாக பவனி வர இயலாது. அனைவருக்கும் மூப்பு, பிணி, சாக்காடு ஆகிய மூன்றும் எழுதப்பட்ட நியதி. என்றாலும் நம் உடலைப் பாதுகாத்துக் கொள்வது நம் கையில் உள்ளது. “உடம்பே ஆலயம்’ என்று திருமூலரும் சொல்கிறார். இந்த உடலை நாமல்லவோ சீர்குலைத்து, படுகுழியில் தள்ளி விடுகிறோம்!
இருக்கும் வரை இறை நினைப்பு வேண்டாமா? நிலையில்லா வாழ்க்கையில் நினைவெல்லாம் இறைவன் நினைவாக வேண்டாமா? நாம் உயிர்வாழப் பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாமா? சதையாலான இந்த உடம்பு ஆக்கப்பூர்வமாய் இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டாமா? “ஆஞ்சனேயா! இந்த உடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். அவர் நாமத்தை இடை விடாது தொழுங்கள். ஆஞ்சனேயரின் அருள்பெற்ற உளுந்தினை- அதன் பயனை அனுமனின் ஆசீர்வாதமாக உணருங்கள். உடல், மனம், ஆன்மா மேன்மைக்காக அனுமனின் வரம்பெற்ற உளுந்தினைச் சரணடைவோம்.
குடல் புண்ணை குணப்படுத்தும் உளுந்து…
பச்சரிசி நான்கு பங்கு, உளுந்து ஒரு பங்கு, சோம்பு கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் நான்கு சிட்டிகை எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கஞ்சி செய்து சாப்பிட் டால் குடல்புண் எளிதில் குணமாகும்.
சீதபேதி நிற்க…
மாதுளைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துக் குடித்தால் சீதபேதி உடனே நிற்கும்.
வாய்ப்புண் ஆற...
மாங்கொட்டைப் பருப்பு, ஊறவைத்த உளுந்து இரண் டையும் சம அளவு எடுத்து அரைத்து, காலை- மாலை இருவேளையும் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் ஆறும்.
வெட்டைச் சூடு மறைய…
சிறிதளவு பாதாம் பிசினுடன் உளுந்துப் பொடியையும் சேர்த்து இரவில் ஊறவைக்கவும். இதனைக் காலையில் எடுத்துப் பார்த்தால் கோந்துபோல் உருண்டு திரண்டிருக்கும்.
இதில் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெட்டைச் சூடு மறையும். மேலும் பெண்களைப் பாடாய்ப்படுத்தும் வெள்ளைப் படுதலும் தீரும்.
மூல நோய் குணமாக…
துத்தி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி உளுந்தை ஊற வைத்து, இரண்டையும் விழுதாக அரைத்து காலை- இரவு இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அனைத்தும் குணமாகும்.
மூட்டு வலி குணமாக…
நான்கு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டு, அத்துடன் சிறிது மிளகு, சீரகம், ஆறு பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த் துக் கொதிக்க வைத்து, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முற்றிலும் குணமாகும். கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழுமையான குணம் பெறலாம்.
மூட்டு வீக்கம் குணமாக…
உளுந்து, கஸ்தூரி மஞ்சள், கோதுமை மாவு, ஓமம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதனை வெந்நீரில் குழைத்து, துணியில் தடவி வீக்கம் உள்ள பகுதியில் கட்டுப் போட, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு அலர்ஜி ஆகியவை குணமாகும்.
எலும்பு வலு உண்டாக…
உளுந்து 100 கிராம், எள்ளு 100 கிராம், பச்சரிசி 200 கிராம், மிளகு 20 கிராம், சோம்பு 20 கிராம் எடுத்துக்கொண்டு, அனைத்துப் பொருட்களையும் தனித் தனியே வறுத்து ஒன்றாக்கிக் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, தண்ணீர் விட்டு அடை பதத்திற்குப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
சிறிது வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி, ஏற்கெனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் கலந்து, சிறிது உப்பு சேர்த்து அடைபோல் செய்து சாப்பிடவும். 48 நாட்கள் சாப்பிட எலும்பு வலுவடையும். எலும்பைப் பற்றிய பிணிகள் அனைத்தும் தீரும்.
முதுகெலும்பு பலமடைய…
காய்ந்த நொச்சி இலை, காய்ந்த நுணா  இலை, காய்ந்த வேப்பிலை, காய்ந்த நாயுருவி இலை, கருப்பு உளுந்து, ஓமம், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, அனைத்தையும் உரலில் இட்டு இடித்து துணியில் முடிந்து, கழுத்து முதல் இடுப்பு வரை ஒத்தடம் கொடுத்து வர முதுகுத் தண்டுவட குறைபாடுகள் தீர்ந்து, எலும்பு பலமடையும்.
உடைந்த எலும்புகள் ஒட்ட…
துவரை இலை, ஆவார இலை ஆகியவற்றை வகைக்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 50 கிராம் உளுந்து சேர்த்து, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை துணியில் தடவி கட்டுப் போட்டால், உடைந்த எலும்புகள் கூடும்.
இளைத்த உடல் பருக்க...
கருப்பு உளுந்து, பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட், மிளகு, சுக்கு, ஏலக் காய் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து, இள வறுப்பாய் வறுத்து அரைத்து தூள் செய்துகொள்ளவும். இதனை தினமும் காலையில் சூடான பசும் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
வலிகளை குணமாக்கும் உளுந்து தைலம்
உளுந்தைப் பிரதானமாகக் கொண்டு, சித்த வைத்திய முறைப்படி உளுந்து தைலம் தயாரிக்கப்படுகிறது. இத்தைலம் சித்த மருந்துக் கடைகளில் மிகத் தாராளமாகக் கிடைக்கிறது. உடல் முழுவதும் ஏற்படும் வலி, உடல் உபாதைகளுக்கு இத்தைலத்தை பிடிப்பு தைலமாக- அதாவது மசாஜ் தைலமாக உபயோகிக்கலாம். இத்தைலம் மாஜ தைலம் அல்லது மகாமாஜ தைலம் என்ற பெயரில், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
ஸ்ரீஅனுமன் அருள்பெற்ற உளுந்தினை அனுமனின் அம்சமாகவே காணுங்கள். உடல் வலிமையை மட்டும் அல்லாமல், உடல் வேதனையையும் தீர்க்கும் உளுந்தினால் வடை செய்து, அதனை மாலையாகக் கோர்த்து ஸ்ரீஆஞ்சனேயருக்குச் சாற்றி வழிபடுங் கள். உங்கள் துன்பம் எல்லாம் பறந்து போகும்!
(தொடரும்)
 நரை ஏன்?
வேறு எந்தப் பிராணிக்கும் இல்லாத நரையை நமக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை. மனிதனாகிய நம்மில் உறையும் உத்தமனை அடைய நாம் வந்தோம். அதை மறந்தவர்க்கு ஓர் உணர்ச்சி வரும் பொருட்டே இறைவன் நரையைத் தந்தான். நரைக்கத்  தொடங்கும் போதாவது நம் ஆவி ஈடேறும் நெறியில் செல்ல வேண்டும்.
முகப்பருவா..?
அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள்.  ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும்.  அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.
உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதன் வெளிப்பாடு முகத்தில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வெளிப்படும்.  அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்.
ஆகையால் முகம் மற்றும் சரும பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகிறது.  இதனால்தான் அழகு நிலையங்கள் நோக்கி ஆண்களும், பெண்களும் படையெடுக்கின்றனர்.
சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர்.  இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல.  காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.
முகப்பரு
வளரும் இளம் ஆண், பெண் இருபாலரையும் மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான்.  உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது.  இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.
முகப்பரு உள்ளவர்களுக்கு
முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும்.  பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.  மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.
சோற்றுக்கற்றாழை    – 1 துண்டு
செஞ்சந்தனம்    – 5 கிராம்
வெள்ளரிக்காய்    – 2 துண்டு
சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.
காரட்        – 2 துண்டு
பாதாம் பருப்பு    – 2
தயிர்            – 1/2 கப்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.
ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.  பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.
புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.
மலரும் மருத்துவமும்
மல்லிகை 
மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.
இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும்  கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.  இதை மலர் மருத்துவம் என்கின்றனர்.  தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார்.  அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.  பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.  அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன  என்பதை உணர்ந்தார்.  அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார்.  இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம்.  ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.
இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி  சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.
மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.  அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.
மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.
மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.
தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.  இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
தேங்காய் எண்ணெய்         – 100 மி.லி.
உலர்ந்த மல்லிகைப்பூ        – 5 கிராம்
கறிவேப்பிலை        -10 இலை
எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...