Dec 27, 2012




எதற்கு முன்னோட்டம்? என்று கேட்டுக்கொண்டே என் வலைப்பூவுக்கு *வருகை தரும்* அனைவருக்கும் வணக்கம்! அது வேற ஒண்ணுமில்லீங்க, சில பல வருஷங்கள் கழித்து நமக்குப் பிடித்த சில பொருட்களை பார்த்தா கொஞ்சம் ஓவர் எக்ஸைட் ஆவோம் இல்லையா? என்னது...இல்லையா?? அவ்வ்வ்வ்வ்...அப்ப நாந்தான் ஓவர் ரியாக்ட் பண்ணறேனா? எனிவேஸ்..வந்தது வந்துட்டீங்க, மேற்கொண்டு படிங்க, உங்களுக்கே புரியும்!

எங்க வீட்டில் இருந்து ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்..ச்சீ,வாய் குழறுதே, சைனீஸ் மார்க்கெட் போனதும், அங்கே வாங்கிய பொருட்களும், அதை வைச்சு நான் சமைச்ச ரெசிப்பிகளும் பற்றிய ஒரு முன்னோட்டம் தாங்க இந்தப் பதிவு.

இந்த 99 Ranch Market என்னவரின் அலுவலகம் போகும் வழியிலேதான் இருக்கிறது. வாரம் 5 நாட்கள் அதே டைரக்ஷனில் போவதாலோ என்னவோ, வீகென்ட் ஆனால் அங்கே ஷாப்பிங் என்றால் எதையாவது சொல்லி தட்டிக்

கழிச்சிருவார். கூடவே அங்கே இருக்கும் பிரத்யேகமான வாசனை(!)யும் அந்தக் கடையை அவாய்ட் பண்ண வலு சேர்க்கும் காரணமாகிவிடும். இந்தக் கோடையில் ஒரு முறையாவது போய் பலாப் பழம் வாங்கிவரவேண்டும் என்று பலநாள் திட்டமிட்டு(!) ஒரு நாள் வெற்றிகரமா போயிட்டு வந்துட்டோம். அந்தக் கொலாஜ் தான் முதல் படத்தில் நீங்க பார்ப்பது.
இவையெல்லாம் ரான்ச் மார்க்கட் சென்று வந்ததின் பை-ப்ராடக்ட்ஸ்! :)))) மொதப் படத்தில் பலாப் பழமும், கொட்டையும் & பலாக்கொட்டை பொரியல் (லஞ்ச் பாக்ஸில்), மாம்பழம் (நறுக்குவது எப்படின்னு போனவருஷம் போட்ட பதிவு மறந்து போயிருந்தா இதோ, இங்கதான் இருக்கு. மறுபடியும் பாருங்க), அடுத்த படத்தில், முருங்கை கீரை & முருங்கை கீரை பொரியல், அது ஒண்ணும் பிரமாதமான ரெசிப்பி இல்லே, இங்க இருக்கு, நேரமிருந்தா அதையும் எட்டிப் பாருங்க. கடைசிப்படம் ஆர்கானிக் மஷ்ரூம். அதில செய்த ரெசிப்பியும் விரைவில் வரும்.

~~~~~~
இன்றைய பதிவில், "ஸ்டார் ஆஃப் தி போஸ்ட்"! :)
பழங்களின் அரசன் பலா!

ராஞ்ச் மார்க்கட்டில் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஸேல்-ல இருந்த ஸ்ட்ராபெரியும், மாம்பழமும்! இரண்டையும் எடுத்து ட்ராலில போட்டுகிட்டு உள்ளே என்டர் ஆனோம். உள்ளே போய் முருங்கை கீரையையும் எடுத்தாச்சு. என்னவர் அவர் பங்கிற்கு 2 பாக்கட் மஷ்ரூமை எடுத்துப் போட்டார். அங்கயும் இங்கயும் சுத்தி சுத்தி பாத்தோம், நம்ம தேடி வந்ததை காணோம்! சரி இந்த வருஷம் வரவே இல்லை போலன்னு மனசைத் தேத்திட்டு திரும்பினோம், ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார் பழங்களின் அரசர்! :))

உடனடியாக என்னவரிடம் இருந்து ஐ-ஃபோனைப் புடுங்கி ஆசைதீர படம் பிடித்தபிறகு மெதுவா பக்கத்தால போய்ப் பார்த்தேன். ரெண்டு துண்டு நறுக்கி வைச்சிருந்தாங்க, மத்த பழம்லாம் முழுசு! நறுக்கிய 2 துண்டுமே அழுகிப் போயிருந்தது! பொக்குன்னு போச்சு எனக்கு. அப்புறம் அங்க இங்க தேடி, மார்க்கட்டில் வேலை செய்யும் ஆளை தேடிப் பிடித்து, புதுசா பலாபழம் வெட்டிக் குடுங்க என்று கூட்டிவந்தேன், அதற்குள் அங்கே புதிதாய் வெட்டிய பழத்துண்டுகள் ரெண்டு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது! நான் அங்கிட்டுப் போய் இந்த ஆளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள புதுசா கட் பண்ணி வைச்சிருக்காங்க... கர்ர்ர்ர்ர்ர்! என் பேச்சைக் கேட்டு, கைவேலையை விட்டுட்டு, பலாப்பழம் நறுக்கித்தர வந்த ஆளிடம் கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு, பழத்தை எடுத்து கார்ட்-ல வைச்சுகிட்டு நடையக் கட்டினேன்! :)))

உஸ்....ஸப்பா! ஒரு வழியா அரசரை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். வந்த உடனே எங்க வீட்டு அரசர் மும்முரமாக பழத்தை நானே கட் பண்ணி எடுக்கிறேன் என்று கையில் எண்ணெயெல்லாம் தடவிக்கிட்டு போஸ் குடுத்தார். ஆனா அவர் நினைச்சது போல ஈஸியா வேலை நடக்கலை. இந்தா நீயே பாத்துக்கோ என்று என்னிடம் தள்ளிட்டார்!

மேலே இருந்த தண்டுப் பகுதியை நறுக்கிட்டு...பழத்தைப் பிளந்து..

சுளைகளை எடுத்தாச்சு...மொத்தம் 15 சுளைகள் முழுதா இருந்தது. வேலை நடக்க நடக்க சைடுல வாய்க்குள்ள போனதெல்லாம் கணக்கில்லைங்கோ! ;)
முழுசா தேறிய சுளைகளில் இருந்து கொட்டை, மாசு ( பழத்துக்கும் கொட்டைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய படலம்) எல்லாம் எடுத்து க்ளீன் பண்ணி, சாப்பிடத்தயாராய் பலாச்சுளைகள்!

கோவையில் உக்கடம் பகுதியில் கோடையில் மாம்பழமும் பலாப் பழமும் சக்கைப்போடு போடும்! கேரளாவில் இருந்து வரும் இரண்டு பழங்களும் மலை போலக் குவித்து வைச்சிருப்பாங்க. இது மட்டும் வாங்க என்றே தனியாக ட்ரிப் போய் வருவோம். முழுப்பழம், அரைப் பழம் என்று கிடைக்கும் பலாவை அரிவாள் மனையில் தேங்காயெண்ணெய் தடவி அரிந்து பிரிப்பதுக்கு வீட்டில் எல்லாரும் அலுத்துக்கொண்டாலும் நான் மட்டும் விதிவிலக்கு. ரொம்ப ஆர்வமா இந்த வேலையைச் செய்வேன்.

பலாச்சுளைகள் நிறையஇருந்தால் வெல்லம் சேர்த்து வதக்கி வைப்பது/ பாயசம் செய்வதும் எப்பவாவது நடக்கும். பலாக்கொட்டையை விறகடுப்பில் வேகப்போட்டு சாப்பிட்டா ஜூப்பரா இருக்கும்! பலா சீசனில் கடைகளில்/சந்தையில் கொட்டைகள் மட்டுமே கூட தனியா விற்பாங்க..50, 100 என்று எண்ணிக் குடுப்பாங்க. இங்கே பலாப் பழம் எப்படி இருக்குமோ என்று டவுட்டிலயே வாங்கினோம், ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க..தேன் போல சுவைம்பாங்களே,அப்படி ஒரு இனிப்பு! :P

பலாவுடன் தேன் சேர்த்தும் சாப்பிடுவது நிறையப் பேரின் வழக்கம். என்னவர் பலாப் பழம் தயாரானதுமே தேன் எங்கேன்னுதான் கேட்டார்! வெறும் சுளைகளே தேன் போல இருக்கே, அப்புறம் தேன் எதுக்கு என்று கேட்டேன். "சாப்பிட்டுப்பார் உனக்கே தெரியும்"-னு பதில் கிடைத்தது! :P :)

பழங்களை அப்படியே சாப்பிடறதுதான் என் (ப)வழக்கம். என்னன்னாலும் இப்படி காம்பினேஷன்லாம் அவ்வளவு சீக்கிரம் ட்ரை பண்ணிர மாட்டேன்! அதனால் நான் தேன் தொட்டு சாப்பிடலை. நீங்க எந்தக் கட்சி? ;)

இந்த முறை பழத்தைப் பிரித்து எடுக்கையில் என்னவர் சொன்னார், "என்ன மாதிரி ஒரு பாதுக்காப்பான பெட்டகத்துக்குள்ளே இவ்வளவு இனிப்பான பழத்தை வைத்திருக்கு இந்த இயற்கை..முள்ளு முள்ளா இருக்கும் பழத்தைப் பிரிக்கணும், அதிலும் பிசின் போலே ஒட்டும் பாலுடன் போராடி! சுளைகளை எடுத்தாலும் உடனே சாப்பிட முடியாது..உள்ளே இருக்கும் கொட்டை, அதைச் சுற்றி இருக்கும் மாசு ..இதையெல்லாம் பொறுமையா எடுக்கணும்! அப்புறம்தான் சாப்பிடமுடியும்! மனிதர்களைத் தவிர வேறு யாருமே இந்தப் பழத்தை ருசிக்க முடியாது"என்று! இல்லையே, நம்ம முன்னோர்கள் ருசித்திருக்காங்க என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார். நீங்க நம்புறீங்களா?

எதுவுமே சுலபமாக் கிடைச்சுட்டா அதன் அருமை தெரியாது இல்லையா? அதனாலதான் கஷ்டப்பட்டு சாப்பிடணும் என்று இப்படி ஒரு பழமும் படைக்கப்பட்டிருக்கிறது போலும்! சரிவிடுங்க, ரொம்ப பேசிப்போட்டன், 2 பலாச்சுளை சாப்டுட்டுப் போங்க! :)))

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...