Jan 23, 2013

ஓடுள்ள விலங்குகள் வலியை உணரும் என்பதற்கான தடயங்கள் சிக்கின...

News Service
நண்டு, இரால் போன்ற ஓடுடைய நீர் விலங்குகள் தமது ஓட்டிலேயே வலியை உணருகின்றன என்பதற்கு கூடுதல் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் சாப்பிடும் வகையை ஒத்த ஒரு கரை நண்டு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன என்றும், மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.வலியை உணரும் தருணங்களில் இரால்களுக்கும் நண்டுகளுக்கும் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.
   பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொடுக்கு
அவை வலியை உணரும் என்ற புரிதலுடன் அவற்றைக் கையாளுகிற போக்கு நம்மிடையே இல்லை என்றும் இவ்வகை விலங்குகளை அனாவசிய வலியிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகளும் இல்லை என்று பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல்வுட் சுட்டிக்காட்டுகிறார். தேவைப்படாத சில நண்டுகள் வலையில் மாட்டிக்கொண்டால், அவற்றின் கால்களையோ, கொடுக்கையோ உடைத்து மீண்டும் அவற்றைக் கடலில் எறிவது போன்ற வழக்கங்கள் மீனவர்களிடையே இருந்துவருவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...