Jun 25, 2013

இதயம் காக்க 25 வழிகள்

!





''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை

Jun 22, 2013

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு


அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்த கப்பலில் ஒருவர் மாத்திரமே பயணம் செய்யலாம்.

9 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் 30 ஆழத்தில் பயணிக்கும் விதமாக வடிவமைத்துள்ளார்.

அதில் வயர்லெஸ், ரேடியோ தொடர்பு சாதனங்கள், சுவாசிக்க வசதி போன்றவை உண்டு. இந்த கப்பலை அங்குள்ள ஏரியில் விரைவில் வெள்ளோட்டம் விட திட்டமிட்டுள்ளார்.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 6 மாத இடைவிடாத முயற்சியில் இதை உருவாக்கியதாக ஜஸ்டின் தெரிவிக்கிறார்.

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது


மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.
மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.

300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டதாக கருதப்படும்.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.
அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

Jun 20, 2013

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்


19 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV மற்றும் MP4 கோப்புக்கள், PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW போன்ற புகைப்படக் கோப்புக்கள் உட்பட Word, PowerPoint, Excel, Outlook போன்ற அப்பிளிக்கேஷன்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி – இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்!


21 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.ஆனால் மொபைல் அப்ளிகேஷனில் கமெண்டுடன் கூடிய படத்தைப் பாவனையாளர்கள் பார்க்கமுடியும்.
இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பேஸ்புக் ஹேஸ்டெக் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்.
பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இதனைக் கருத முடியும். இதேபோல் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் செம்சுங்

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்

19 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.
இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.
1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை

ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன்.
எலுமிச்சை
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி மிளகு
உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல்

வெங்காயத்தின் 50 வகையான மருத்துவ குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள்


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
  •  நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
  •  வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
  •  வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள்

பாகற்காய்’ நீரழிவு நோயை கட்டுப்படுத்துமா.

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.
மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தலாம். வெறும் பாகற்காய் மட்டும் நீரிழிவு நோய்க்கு மருந்தல்ல.
மூலம்: தினசரி காலை 2 தேக்கரண்டி அளவு பாகற்காய் இலைகளின் சாற்றை அரை டம்ளர் அளவு மோரில் கலந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகி வர மூல நோய் குணமாகும்.
பித்தம்: பித்தம் அதிகமாக உள்ளவர்களும் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் காலை வெறும் வயிற்றில் 2-3 தேக்கரண்டி அளவு பாகற்காய் சாற்றை தண்ணீரில் கலந்து பருகிவர நல்ல பலன் தெரியும்.
மூட்டுவலி: ரத்தத்தில் அதிகமான யூரிக் அமிலம் உள்ளதால் ஏற்படக்கூடிய ரூமாட்டிஸம்,ஆர்த்ரைடிஸ் மற்றும் கவுட் போன்ற மூட்டுவலி உடையவர்கள் பாகற்காயை உண்டுவர நல்ல பலன் தெரியும். வலி அதிகமாக உள்ள இடங்களில் பாகற்காயை அரைத்து பற்று போல போட்டு வர வலி குறையும். மூட்டுவலி நிவாரணம் கிடைக்கும்.

அதிகாலையில் கண் விழித்தால் மெல்லிய உடல் பெறலாம் (Slim)

அதிகாலையில் கண் விழிப்பவா்கள் மகிழ்ச்சியாகவும், ஆராக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவித்தள்ளது.
ரோகாம்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழும்புவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாகச்  செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக  அனுப்பி வைப்பார்கள் என்று  கூறியுள்ளனா். இரவு ஆந்தைகளைப் போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று  கூறுகின்றது அந்த ஆய்வு முடிவு.
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள் தாமதமாக கண் விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேறகொண்ட ”டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப்”  ஆங்கில நாளிதளில் தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டமல்ல ஆராக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

வெள்ளரிக்காயின் சிறப்பு மற்றும் மருத்துவ குணம்

வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்கா
ய்ச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம்.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...