Apr 18, 2012

உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு

மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது ஐ.பி.எம் நிறுவனம். இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது. ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும்

செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர்

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர் இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர் செயல்படுகிறது. மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. மனித மூளை செயல்படுவதைத் துல்லியமாக விளக்க முடியாது. கம்ப்யூட்டர் செயல்படுவதை விளக்க முடியும்.மூளையில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் பயன்படுத்த முடியாது.பல தகவல் அடி மனதில் பதிவாகி இருக்கும்.அவற்றை எளிதில் மீட்டுக் கொண்டு வர முடியாது. கம்ப்யூட்டர் நினைவகத்தில் பதிவாகியுள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் மீட்டுக் கொண்டு வரமுடியும்.அது முழுமையானதாகவும் இருக்கும்.இந்த வகையில் மனித மூளையை விடக் கம்ப்யூட்டரே சிறந்தது என்று கூறலாம். மனித மூளை தன் நினைவில் உள்ள ஒன்றை சற்று மாறுபட்டாலும் கூட இனங் கண்டு கொள்ளும். கம்ப்யூட்டரினால் அது முடியாது.மூளை செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல் முழுவதும் மூளையிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வெளியிலிருந்து நாம் கம்ப்யூட்டருக்குக் கொடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரில் பிழை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டு விட்டாலும் அவை வெளியிடும் தகவல்கள் முடிவுகள் அர்த்தமில்லாதவையாக இருக்கும். ஆனால் மனித மூளையில் சிறு சிறு தவறுகளினால் பெரும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. கம்ப்யூட்டர் தானாகச் சிந்தித்து ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றதாக இருக்கின்றது.ஆனால் மனிதனின் அன்றாட செயற்பாட்டில் சூழ்நிலை பணியின் தன்மை முதலியவற்றிற்கேற்ப சிந்தித்து செயற்படுதல் முக்கியமாகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பல இலட்சம் கட்டளைகளை ஒரு வினாடியில் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டரின் செயல் வேகமோ பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் நினைவக வசதியோ உதவியாக இருப்பதில்லை. மனித மூளையைப் போன்று சிந்தித்துச் செயலாற்றும் நுண்ணறிவு கம்ப்யூட்டருக்குத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிற இந்த மனித நுண்ணறிவினை நாம் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனின் மூலம் உயிரற்ற கருவியாகிய கம்ப்யூட்டரை மனிதனைப் போன்று சிந்தித்துச் செயற்படுத்துவதற்கேற்ப நுண்ணறிவு வாய்ந்த கருவியாக வடிவமைக்க முடியும். இவ்வகையான கணிப்பொறிகள் மனிதனின் ஜம்புலன்களின் செயல்திறான பார்த்தல் கேட்டல் தொடு உணர்ச்சி பேசுதல் முதலிய அனைத்தையும் பெற்று விளங்கும். இயந்திர மனிதர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவினைக் கொடுத்து மனிதர்களைப் போலவே படங்களையும் செய்திகளையும் காட்சிகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொள்ளவும் செய்யலாம். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த கணணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையான கணணிகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது கற்பனைக்கெட்டாத பல கடினமான பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராச்சிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

பி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்

பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா! பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும். இந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப் பட்டும் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங்கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள். அப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப் படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும். உங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக்கும். அப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது. இதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது. இந்த தளத்தின் சேவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கு நன்கொடையை நீங்கள் அனுப்பலாம். ஆனால், சேவைகள் முற்றிலும் இலவசமே.

கம்ப்யூட்டர் இயக்கம் "டிவி'யில் காண

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம். கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம். 1.எச்.டி.எம்.ஐ. (HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 2. டி.வி.ஐ. (DVI): இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம். 3. வி.ஜி.ஏ. (VGA): இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம். 4. எஸ்-வீடியோ (Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

Apr 17, 2012

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத் திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத் திலேயேஅண்ணாவை மடக் கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமை யையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவை ப் பேட்டியும் கண்டாராம். விமானத்தி லிருந்து இறங்கி வெளியே வந்து கொ ண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டா ராம். சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “டூ யு நோ யுனொ ? சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம். ஐ நோ யுனொ. யு நோ யுனொ. ஐ நோ யு நோ யுனொ பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ! கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத்தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங் கள் என்றா ராம். அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா? I know UNO (United Nations Organization).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO. அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டா ர்களாம். கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம். “because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் : ‘No sentence en

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் ” !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந் து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூ ண்களை தட்டினால் ” சப்த ஸ்வர ங்கலான ” ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற தனித் தனி ராகங்களை அது இசைக்கி ன்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூ ண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கி ன்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி ” போன்ற இசைக் கருவி களின், இசையை தருகின்றது !! அப்படி என் றால் ஒவ்வொ ரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறுவே று ஒலிகளில் இசைக்கும்! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படு வதில்லை, உண் மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டி னால் இசைக் கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லி யமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்த க்காலத்தில் இருந்த இசைக் கலை ஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவி யைகூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்து ள்ளனர்! .இது போன்ற வை உலகில் எந்த இடத்திலும் இல்லை என் பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத் தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவா க்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவ ருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளி ந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய் ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்று ம் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. “In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந் த து !!. ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களி ல் வரும் இசையானது” தன் மைக் கேற்ப இசைந்து கொடுக் கும் அலைக்கற்றயினால் ” சப் தம் உருவாவதாக தெரிவிக்கி ன்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிச யாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினா லே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்திய லை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்! .இசை என்பது காற்றை உள் வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவா ரதைக்கூட உருவாக்கவில் லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த “இசைத்தூண்கள் ” ஆயிர ம் ஆண்டுகளுக்கு மேல் வெறு ம் ஆச்சர்யத்தை மட்டுமே பதி லாய் தந்து கொண்டிருக்கின்ற து! அடுத்த ஜென்மம் என்ற ஒ ன்று இருக்கின்றதா என தெரிய வில்லை ! அப்படியே இருந்தா லும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போ மா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இது போன்ற இடங்களுக்கு சென்று நம் முன் னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழி யில் வந்த நாம் புதிதாக எது வும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக் காப்போம்!

Apr 16, 2012

கோவிலில் செய்ய கூடாதவை

1.கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது த...ிரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. 2.சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 3.பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. 4.ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம். 5.விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம். 6.பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. 7.கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது. 8.விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. 9.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது. 10.சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. 11.சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது. 12. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். 13. எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும். 14. போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.

ஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு

விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின. தற்போது ஜெர்மனி நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து விடுமாம். அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில், இதில் உள்ள கேமரா மனித உருவத்தை படம் எடுத்து, நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். விரைவில் இந்த ரோபோ சந்தைகளில் அறிமுகமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

உதயநிதி படத்தைப் பார்த்த தந்தை ஸ்டாலின்

கொலிவுட்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் படஅதிபரான உதயநிதி நாயகனாக நடித்துள்ள முதல் படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி” ஆகும். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை இயக்குனர் ராஜேஷ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். உதயநிதிக்கு முதல்படம் என்றாலும் அவருடைய எதார்த்தமான நடிப்பு திரையுலகில் அனைவரையும் கவர்ந்து விட்டது. இந்நிலையில் உதயநிதி தந்தை ஸ்டாலின் தனது மகன் நடித்த படத்தை திரையரங்கில் மக்களோடு சேர்ந்து பார்த்து மகிழ்ந்துள்ளார். ஸ்டாலின், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்செல்ல

Apr 15, 2012

உங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் அறிமுகம்

இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது. இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். மென்பொருளின் சிறப்பம்சங்கள்: எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம். இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம். இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...