Jun 22, 2012

இடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்



இடுப்பைக் கழட்டி வச்சுடணும் போல இருக்கு'' `இரண்டு பக்கமும் இடுப்புல தாங்க முடியாத வலியா இருக்கு. உட்காரவும் முடியல, நிக்கவும் முடியல. என்ன பண்றதுன்னே தெரியலே'' ``குறுக்கு வலி கொல்லுது''- இப்படி இடுப்பு வலி தாங்க முடியாமல் பலரின் வேதனை வார்த்தைகளில் ஒரு சில இவை...
 
இடுப்பு வலி தொண்ணூறு சதவீத மக்களை பாதிப்புக்குள்ளாக்கவே செய்கிறது. இதில் ஐம்பது சதவீத மக்களுக்கு ஒரு தடவைக்கு மேல், பல தடவை இடுப்பு வலி, வந்து வந்து போகிறது. ரோட்டில் நடந்து போகும் பத்துப் பேரில், எட்டுப் பேருக்கு இடுப்பு வலி இருக்கத்தான் செய்கிறது.
 
எல்லோரும் நன்றாக நடந்து போகிறார்கள் என்பதால், அவர்களுக்கெல்லாம் இடுப்பு வலி இல்லை என்று அர்த்தமில்லை. சுமார் ஐம்பது மில்லியன் டாலர்

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிகளும்

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிகளும்




இந்நாட்களில் அதிகமாக பேசப்படுவது ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு பற்றியே.

ஆகையால் அதை பற்றிய சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.




ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து லாவா எனும் நெருப்புக் குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலையிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் ஐரோப்பாவின் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது.

வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி



http://jayabarathan.files.wordpress.com/2010/12/giovanni-cassini-1.jpg“காஸ்ஸினி அறிவு ஆர்வத்தில் இச்சை கொண்டவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலை நோக்கிகள் மூலம் உளவும் கூர்மையான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டுபிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”
டேடன் (Taton)
“கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

விக்கல்



யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவர், இன்றளவும் அனைவரும் அதையே தான் நினைக்கிறார்கள்.

நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில்செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.


ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

 ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல்,நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும் போது விக்கல் வரும். அளவுக்கு மீறி அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.


விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.


இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.


காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.


நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்.

விநோத நீலநிற நண்டு: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு (Pictures)







அமெரிக்காவில் அரிதான நீல நிற நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந் நண்டானது ஆய்வுக்காக அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந் நண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் மரபணுக் குறைபாடு மூலம் அந் நண்டு இவ் விநோத நிறத்தை பெற்றதாக அறியப்பட்டது.
மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வின் மூலம், விசேடவகை புரதம்,மற்றும் astaxanthin எனப்படும் சிவப்பு caratenoid மூலக்கூறு என்பவற்றின் சிக்கல் பிணைப்பு மூலம் நண்டு இவ் பிரத்தியோக நிறத்தை பெற்றதாக

ஹலோ அம்மா நான் விமானத்துக்குள்ள இருந்துதான் பேசுறன் –

இனி விமானத்தில் போவோருக்கு எந்த விதக் கவலையும் இல்லை. காரணம் தங்களின் உறவுகளோடு எப்போதும் தொலைபேசித் தொடர்பில் இருக்கலாம். ஆம், முதன் முறையாக இதனை Virgin Atlantic என்ற பிரித்தானிய விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வணிகப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் போன்றோர் மிகவும் பயனடைவார்கள்.
உலகின் முதன் முறையாக A330 என்ற லண்டனிலிருந்து நியூயோர்க் செல்லும் விமானத்தில் இருந்து தொலைபேசியில் பேசலாம், குறுந் தகவல் அனுப்பலாம், ஈ. மெயில் அனுப்பலாம். போன்ற எல்லா விதமான சேவைகளையும் அனுபவிக்க முடியும். இந்த வருட இறுதிக்குள் 20 விமானங்களில் இத்தகைய சேவையைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சேவையைப் பெற்று ஒரு நிமிடத்துக்கு தொலைபேசியில் பேச ஒரு ஸ்டேர்லிங் பவுண்கள் செலவாகின்றது.இதே நேரம் ஒரு குறுந்தகவல் அனுப்ப 20 சதமும் செலவாகின்றது. 

மனிதனை கண்காணித்து நோய்களை கண்டறியும் சிமார்ட் போன்

Jun 21, 2012

பீன்ஸ்:




பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும் !!
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும்இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதா ன் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள்ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!


கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்தி

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும். 

BY : இன்று ஒரு தகவல்
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...