Aug 16, 2012

பழங்கால 10 சென்ட் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம்


அமெரிக்காவில் உள்ள ஏலம் விடும் மையம் சமீபத்தில் 10 சென்ட் (10 காசு) நாணயங்களை ஏலம் விட்டனர். இது 1873-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழங்கால நாணயம் ஆகும். இது ஆச்சரியப்படும் அளவுக்கு தொகையை ஈட்டியது.
இந்த நாணயத்துக்கு ரூ.8 கோடி என விலை நிர்ணயித்து இருந்தனர். ஆனால் அதையும் விஞ்சி ரூ.10 கோடிக்கு(2 மில்லியன் டொலர்) அது ஏலம் எடுக்கப்பட்டது. இந்த நாணயத்தை வாங்கியவர் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை.


இது மீன் என்றால் நீங்கள் நம்புவீர்களா!


மீன் வகைகளில் ஒன்றானதும், sarcastic fringeheads என்ற பெயரைக் கொண்டு காணப்படுகிறது. மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும். இந்த மீனின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் அக்டோபஸைக் காணொளியில் காணலாம்.



குருட்டு எலிகளைப் பார்க்கவைத்த விஞ்ஞானிகள்!
விஞ்ஞானிகளால் குருட்டு எலிகளைத் திரும்பவும் தெளிவாகப் பார்க்கவைக்க முடிந்துள்ளது. இதன்மூலம் பல மில்லியன்கணக்கானோரிற்கு நம்பிக்கையொன்று கிடைத்துள்ளது.

இப்பிராணியின் பார்வை ஒரு குழந்தையின் முகத்தைப் பிரித்துப்பார்க்கவும் ஒரு பூங்காவிலுள்ள காட்சிகளின் விபரங்களைப் பார்க்கவும் நகரும் விம்பத்தினைத் தடந்தொடரக்கூடிய நிலையுடன் இருந்தது.

அடுத்த நேர உணவுக்காக கூலாக காத்திருக்கும் சிங்கங்கள்!


தன்சானியா காட்டுப்பகுதியில் Daniel Dolpire எனும் படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்ட படங்கள் ஆறு சிங்கங்கள் தமது அடுத்த உணவுக்காக காத்திருப்பதை வெளிக்காட்டுகின்றன.

59 வயதான Daniel Dolpire கடந்த 20 வருடங்களாக புகைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது படம் பற்றி சொல்கையில் சிங்கங்கள் பொதுவாக தனிமை விரும்பிகள் உணவுக்காக வேட்டையாடும் போதும் உணவை உண்ணும் போதும் சேர்ந்து உண்பவை.

இவ்வாறு ஒன்றாக ஓய்வெடுக்கும் சிங்கங்கள் தனக்கு புதுவித தோற்றத்தை தந்ததாக கூறினார்.



சூரியனுக்கு அருகில் மர்மக் கல், மட்டக்களப்பில் திடீர் பரபரப்பு!

சூரியனுக்கு அருகில் மர்மக் கல், மட்டக்களப்பில் திடீர் பரபரப்பு!
சூரியனுக்கு அருகில் கல் ஒன்று தெரிகின்றது என மட்டக்களப்பில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இக்கல் பூமியை நோக்கி நகர்கின்றது எனவும் இதனால் பேராபத்து ஏற்படலாம் என்றும் பரவலாக கதைகள் அடிபட்டுக் கொண்டு இருக்கின்றன.
இது உலக ஆரம்பத்தின் அழிவாக இருக்கலாம், சூரிய காந்த புயல் வீச கூடும் என்றெல்லாம் மக்கள் விறுவிறுப்பாக பேசிக் கொண்டிருக்கின்றமையை செவிமடுக்க முடிகின்றது.
சூரியனுக்கு அருகில் தெரிகின்றது என சொல்லப்படுகின்ற கல்லை புகைப்படம் பிடிக்கின்றமையிலும் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருந்தார்கள்.

மடு மாதா ஆவணி திருவிழாவில் 500000 பக்தர்கள் வரை பங்கேற்பு

மடு மாதா ஆவணி திருவிழாவில் 500000 பக்தர்கள் வரை பங்கேற்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார்  மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா நேற்று புதன்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மொத்தமாக 500000 இற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று இருந்தனர். 
மன்னார் மறை மாவட்ட  ஆயர் இராயப்பு ஜோசேப்பு தலைமையில் கூட்டுத் திருப்பலி காலை 6.30 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

கொழும்பின் புறநகர் வீதியில் மட்டைத் தேள் ஏற்படுத்திய விபரீத பரபரப்பு

கொழும்பின் புறநகர் வீதியில் மட்டைத் தேள் ஏற்படுத்திய விபரீத பரபரப்பு
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பாணந்துறையில் பிரதான வீதியில் மட்டைத் தேள் ஒன்றால் பாரிய வாகன விபத்து நேர்ந்து உள்ளது.
பொறியியலாளர் ஒருவர் கப் வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். இவரது சப்பாத்துக்களில் ஒன்றுக்குள் இருந்து ஏதோ ஒன்று சீண்டுவதை உணர்ந்து கொண்டார்.  Accelerator மீது சப்பாத்து இருந்தது. வாகனத்தை செலுத்திக் கொண்டே சப்பாத்தை பார்வையிட்டார்.
தாக்குதல் வதந்தி: பெங்களூரை காலி செய்யும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்!
பெங்களூர்: தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிளம்பிய பீதி காரணமாக,  அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்tதைச்  சேர்ந்ததவர்கள் பெங்களூலிருந்து ஒரே நாளில் வெளியேறி  வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள்  ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது  ஆகஸ்ட் 20-ம்  தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று  மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது.


எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர்  போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமா பரவியது.


இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள்,உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே  நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.


கிடைக்கிற ரயிலில் ஏறி எப்படியாவது சொந்த மாநிலத்துக்கு போய்விட வேண்டும் என்ற  தவிப்பில் அனைவரும் இருந்தனர்.அலை அலையாய் ஆயிரக்கணக்கில் கூட்டம்  கூட்டமாக ரயில் நிலையத்தை நேற்று இரவிலிருந்து முற்றுகையிட்டுக் கொண்டே  இருந்தனர்.கவுகாத்தி செல்லும் ரயிலில் ஒரே நேரத்தில் கூட்டமாக ஏற முயன்றதால்  கடும் நெரிசல் ஏற்பட்டது.பலர் அவசர ஜன்னல் கதவு வழியாக உள்ளே ஏறிச் சென்றது  பரிதாபமாக இருந்தது.இதில் பல பெண்களும் தங்களது கைக்குழந்தையுடன்  இதேப்போன்று ஏறி உள்ளே சென்றது வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.


இதனால் பெங்களூரு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பெங்களூரு ரயில்  நிலையம் வந்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், "வதந்திகளை நம்ப  வேண்டாம் என்றும், உரிய பாதுகாப்பு தரப்படும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவரிடம்   கேட்டுக் கொண்டார்.மேலும் காவல்துறையினரும் ஒலிபெருக்கி மற்றும் சேனல்கள்  மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே  ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் தொடர்பு கொண்டு, வடகிழக்கு  மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.


இதனிடையே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு  அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தைக் கண்முன் நிறுத்தும் 'கியூரியோசிட்டி' அனுப்பிய புகைப்படங்கள்





செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட 'கியூரியோசிட்டி'  விண்கலமானது அக்கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது.
 
சுமார் 8 மாதங்களாக 352 மில்லியன் மைல்களைக் கடந்து இவ்விண்கலமானது கடந்த  5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

ஆரஞ்சுப் பழம்(தமிழ் மருத்துவம்)

imageஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

 
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!
 
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள்
, மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில்
, கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...