Aug 22, 2012

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்


Ridge Gourd - Food Habits and Nutrition Guide in Tamil சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...

 
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

சர்க்கரைநோய்யும் உணவுகளும்....உணவே மருந்து


சர்க்கரைநோய்யும் உணவுகளும்....


சர்க்கரை நோய் இன்று இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இன்று சர்க்கரை நோய் பரவக் காரணம் நமது உணவுப்பழக்கவழக்கம்தான். இதுவே இப்பொழுது 70 வயதைக்கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவுப்பழக்கம் தான் காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் அறிந்த தகவல்களை தொகுத்து அளித்து இருக்கிறேன்.

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு

3டி படங்களுக்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்



3டி படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பமொன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.இதுவரை 3டி படங்கள் ப்ளூரே தொழில்நுட்பத்தில் வந்தன. அதாவது திரையில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். அது ஒரு கண்ணுக்கு ஒரு படம் என்ற வகையில் இருக்கும்.
ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேக்கள் தேவைப்படும்.
ஏனெனில் இந்த திரைகள் 3டி படங்களை பல கோணங்களில் காண்பிக்க வேண்டும். மேலும் அவற்றை எங்கிருந்து பார்த்தாலும் முழுமையான 3டி அனுபவம் கிடைக்க வேண்டும்.

புற்று நோய்​க் கட்டிகளை அகற்றும் தேயிலை


   
 
 
   
  

தேநீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தேயிலைகளில் பல்வேறு தரங்கள் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமே.இவற்றுள் பச்சை நிறத் தேயிலைகள் புற்றுநோய் கட்டிகளை முற்றாக அகற்றும் என்பதுடன், அவற்றைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Strathclyde பல்கலைக்கழக குழு ஒன்றின் முயற்சியினால் புற்றுநோய்களுக்கான இப்புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதுடன், ஆய்வின் போது பச்சை தேயிலை அடங்கிய கலவை ஒன்றினைப் பயன்படுத்தி மனித உடலில் காணப்பட்ட 40 சதவீமான புற்றுநோய்க் கட்டிகளை இல்லாது செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

எலும்புகளை வலுவாக்கும் ஆலிவ் எண்ணெய்



ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

கியூரியாசிட்டி விண்கலத்தின் காற்றுமானி கருவி சேதம்



செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது.இந்த விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் “காலே கிரேடர்” என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது. அங்கிருந்து பாறைகள், மலைகள் உட்பட பல பகுதிகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
விரிவான ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடல், பனிப்பிரதேசத்தில் பறக்கும் விமானம்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை



\கடல், தரை மற்றும் பனிப்பிரதேசத்தில் பறக்கும் விமானத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் லிசா அகோயா என்ற நிறுவனம் அதி நவீன விமானத்தை வடிவமைத்துள்ளது.
இந்த விமானம் தரையில் பறக்கும் போது அதன் 2 இறக்கைகள் விரியும். தண்ணீரில் பறக்கும் போது அது படகு போன்று மாறும்.
அதே நேரத்தில் பனி பிரதேசத்தில் செல்லும் போது அதன் 2 இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து நொறுக்கி சீரமைத்து அதில், பயணிக்க செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது.
இன்னும் 2 ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த விமானங்கள் 70 தடவை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை கண்காட்சி அமெரிக்காவின் வின்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒஸ்காஷ் ஏர்வென்ஞ்சர் நிறுவனத்தில் கடந்த மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சாகசச் சக்கரவர்த்திகள் இவர்கள் தானா?





இயந்திர விலங்குகளைப் பார்த்ததுண்டா?





Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...