Sep 4, 2012

சிவ தரிசனம் (பெங்களூரு) - கல்கி தீபம் இதழில்..


பெங்களூர் சிவன் கோவில் பற்றிய எனது கட்டுரை, எடுத்த படங்களுடன் நான்குடன் ஆகஸ்ட் 20 கல்கி தீபம் இதழில் மூன்று பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது.

உலக அலைபேசி பயன்பாடு இந்தியா - சீனா முன்னிலை


புதுடில்லி: நடப்பாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சர்வதேச அளவில், புதிய அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, நிகர அளவில், 14 கோடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் உள்ளது என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இந்தியா மற்றும் சீனாவில், புதிய அலைபேசி இணைப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை முறையே, 2 கோடி மற்றும் 4 கோடி என்ற அளவில் உள்ளது.

சூரியனில் புதிதாகத் தோன்றவுள்ள அரை மில்லியன் மைல் நீளமுள்ள கதிர்வீச்சு அலைகள்



சூரியனில் தற்போது தோன்றியுள்ள சூரிய சூறாவளி (Solar storm) காரணமாக இன்னும் சில மணிநேரங்களில் அதில் இருந்து வெளிப்படவுள்ள கதிர்வீச்சுக்கள் பூமியைப் பாதித்து சராசரியான கதிர்வீச்சுப் புயலைத் தோற்றுவிக்கவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேலும் விஞ்ஞானிகள் இம்முறை தோன்றவுள்ள சூரிய சூறாவளியை ஆய்வு செய்து சூரியனில் ஏற்படவுள்ள கதிர்வீச்சு வெடிப்புக்கள் பூமியில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கற்க உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடிய இக் கதிர்வீச்சுப் புயல் சூரியனின் மேற்பரப்பில் இருந்து அரை மில்லியன் மைல்கள் நீளமானதாகும்.

இத்தகவலை நாசாவின் சூரிய இயக்க ஆய்வகம் (Solar Dynamics Observatory - SDO) உறுதி செய்துள்ளது.

வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி



வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர இந்த தைபூன் பொலாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்துள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.

Sep 3, 2012

What sets Curiosity apart from other Mars Rovers?

தினமும் 4 கப் டீ சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக அளவில் டீ குடித்தால் உடல்நலத்துக்கு கேடு ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. தற்போது அந்த பழக்கம் நன்மை தரக்கூடியதாகவும் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தினமும் 4 கப் டீ குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராது என கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் டீ குடிப்பவர்கள் சுமார் 12 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் தினமும் குறைந்தது 4 கப் டீ குடிப்பவர்களில் 20 சதவீதம் பேர் நீரிழிவு நோயின்றி இருந்தனர்.எனவே டீ குடிப்பது நல்லது. அதே நேரத்தில் பால் மற்றும் அதிக சர்க்கரை கலந்து தயாரித்து குடிக்கும் டீயினால் கெடுதல் வரவும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டைப் 2 நீரிழிவு நோய் உடல் பருமனால் உருவாகிறது. எனவே உணவு கட்டுப்பாடு அவசியம் என்றும் ஆய்வு நிபுணர் கிறிஸ்டியன் ஹெர்டென் தெரிவித்துள்ளார்.

பெண்களின் ஆயுள் நீடிக்க வழி..?

பொதுவாக நீண்ட காலம் வாழ வேண்டும் என பெண்கள் ஆசைப்படுவார்கள். குறிப்பாக வயதான பெண்கள் ஆயுள் நீடிப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த முதியோர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு சில யோசனைகளை தெரிவித்துள்ளது.
அதாவது உணவில் அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொண்டு ஓரளவு உடற்பயிற்சி செய்தால் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழலாம் என்று கூறுகிறார்கள். இத்தகைய உணவு பழக்கத்தை கைகொண்டால் சுமார் 5 ஆண்டுகள் கூடுதலாக ஆயுள் நீடிக்குமாம். ஆகவே வயதான பெண்கள் இந்த 2 வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் எமிலி நிக்கலெட் கேட்டுக் கொண்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையாது ..!ஆய்வில் புதிய தகவல்.!!


இன்றைய பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் டென்சன் ஆகாதவர்களே இல்லை என்று சொல்லலாம். பணிச்சுமை, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் டென்சன் உருவாகிறது. நாளடைவில் இதுவே மன அழுத்தம் (டிப்ரஷன்) நோயில் தள்ளி விடுகிறது. 
இந்தியாவில் மன அழுத்தம் நோய்க்காக மனநல டாக்டர்களிடம் சென்றால் ரிலாக்ஸ் ஆக இருக்க கற்றுக் கொள்ளுங்கள், வாக்கிங் செல்லுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டது. 

புகை பிடித்தலும்​, இருதயமும் – சில உண்மைகள்



மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது.

தங்கத் திருட்டுக் கும்பல் தாக்கு: வெனிசுவேலா நாட்டு ஆதிவாசிகள் 80 பேர் கொலை


 
தங்கத் திருட்டுக் கும்பல் தாக்கு: வெனிசுவேலா நாட்டு ஆதிவாசிகள் 80 பேர் கொலைதென் அமெரிக்க நாடான வெனிசுவேலா நாட்டின் காட்டுப்பகுதியில் யனோமாமி என்னும் காட்டுவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சட்டவிரோதமாக தங்கத்தை திருடன் கும்பல் ஒன்று ஹெலிகோப்டேரில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் போய்  இறங்கியிருக்கிறது. பின்னர் அவர்களுக்கு இடையூறாக இருந்த ஆதிவாசி மக்களின்  குடிசைகளை எரித்து கொளுத்தியிருக்கின்றனர். அதில் குழந்தைகள் பெண்கள் உள்பட  80 பேர் இறந்துள்ளனர்.
 
சமீபத்தில் ஆதிவாசிகள் பற்றி கணக்கெடுக்க சென்ற அதிகாரிகளுக்கு இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து எந்த தடயங்களும் எங்களுக்கு சிக்க வில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத கும்பலால் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி வரும் அந்த ஆதிவாசி மக்களின் குற்றச்சாட்டை அரசு கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக கார் மீது வெடிகுண்டு நிரப்பிய கார் மோதல்: 3 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக கார் மீது வெடிகுண்டு நிரப்பிய கார் மோதல்: 3 பேர் உடல் சிதறி பலி
-

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆப்டரா சாலையில் ஐ.நா. அகதிகளுக்கான தூதரகமும், அமெரிக்க தூதர் அலுவலகமும் உள்ளன. இன்று காலை அமெரிக்க தூதரக அலுவலக கார் ஒன்று தூதரகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்று அமெரிக்க தூதரக கார் மீது வேகமாக மோதியது.

இதில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வெடித்து சிதறியது. அமெரிக்க தூதரக காரும் பலத்த சேதம் அடைந்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உடல் சிதறி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...