Sep 18, 2012

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து








சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன. அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.


பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இதில் அடங்கும். கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன.

உறை பனியின் உருகும் நிலை அதிகரித்து வருவதால், இமய மலையை நம்பியுள்ள, 20 கோடி மக்கள் பாதிக்கப்படலாம்.காலநிலை மாற்றத்தை சீராக்க, கார்பன்- டை- ஆக்சைடு பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, நிறைய மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காடுகள் அழிப்பை தடுக்கவும், அதிகளவு வாகன பயன்பாட்டை குறைக்கவும், வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில், எதிர்காலத்தில் பெருமளவில் விவசாயம் பாதித்து, மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகலாம்.
இவ்வாறு பேசினார்.

டிசம்பருக்குள் உலகம் அழியும் பீதி கிளப்புகிறார் உமாசங்கர்

ஆத்தூர் : ""இன்னும் மூன்று மாதங்களில் உலகம் அழியும்,'' என, தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கிறிஸ்தவ போதகர்கள் சார்பில், "2012ம் ஆண்டு வரப்போகும் அழிவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்பது குறித்து, கிறிஸ்தவ மத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி அழிவை சந்திக்க உள்ளது. சுனாமி, சூரிய புயல், விண்கற்கள் விழுதல் போன்ற இடர்ப்பாடுகளில், ஏராளமானோர் இறந்து விடுவர். நிலத்தின் ஒரு பகுதி கடலாக மாறி விடும், கடற்கரை நகரங்கள், 15 கி.மீ., வரை அழிவை சந்திக்கும்.அவ்வாறு, ஆண்டவர் வரும் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். கிறிஸ்தவர்கள், வீட்டில் வைத்துள்ள ஜாதகங்களை, தீயிட்டு கொளுத்துங்கள், குப்பையில் வீசியெறியுங்கள். ராகு காலம், எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களைக் கூட எரித்து விடுங்கள். ஜாதகங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு உமாசங்கர் பேசினார்.பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""கிறிஸ்தவர்களிடம் மட்டும், கிறிஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுகிறேன். அரசு பணியை தொய்வு இல்லாமல் செய்கிறேன். பா.ஜ.,வினர், அரசியல் சாசனச் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர். என் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தாலும், கற்களை வீசினாலும் தாங்கிக் கொள்வேன்,'' என்றார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கூறுகையில், ""ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது, சட்ட விரோதமானது. அவர் மீது, விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவரது கிறிஸ்தவ மதப் பிரசாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, புகார் செய்துள்ளோம்,'' என்றார்.


சீனா-ஜப்பான் மோதல் முற்றுகிறது தீவு பகுதியில் 1,000 சீன படகுகள்


-
சீனா, ஜப்பான் நாடுகளின் கடல் பகுதியில் அமைந்துள்ள 2 தீவுகள் உரிமை தொடர்பாக இரு நாடுகள் இடையே பிரச்சினை நிலவுகிறது.

இது தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் சீனாவில் செயல்படும் பிரபல ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி விட்டன.

கடந்த சில நாட்களாக கடைகளையும் அடைத்து விட்டனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஜப்பானுக்கு திரும்பி அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றன.

இதன் விளைவாக 2 நாடுகள் இடையே வர்த்தகம் பெரும் அளவில் பாதிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் பீஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகம் பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில் பிரச்சினைக்குரிய தீவு பகுதியில் சீனாவின் 1,000 மீன்பிடி படகுகள் முற்றுகையிட்டு, இது எங்கள் கடல் பகுதி என்றும், இங்கிருந்து ஜப்பான் கடலோரப்படை வெளியேற வேண்டும் என்றும் ரேடியோ மூலம் அறிவித்தனர். ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

வயது தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு



வயதாகும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில், பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு, பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம் கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந்துள்ளது.

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு



இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற

ஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்களின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு

உடல் எடையை குறைக்கும் கோகோ நிறைந்த சாக்லேட்டுகள்



ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட் வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு

ஹிப்னாடிசம் முறையில் எளிதாகும் அறுவை சிகிச்சை



பெல்ஜியம் நாட்டிலுள்ள கத்தோலிக் டி லூவெய்ன் என்ற பல்கலைகழகத்தின் பேராசிரியர் பேபியன் ரோயெலன்ட்ஸ் என்பவர் மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஹிப்னாடிசம் முறையை பயன்படுத்துவதால் அதிக பலன் கிடைப்பதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வில், மேற்குறிப்பிட்ட நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஹிப்னாடிசம் முறையோடு கூடிய அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது. இதில், சிகிச்சைக்கு உள்ளானவர்கள் மற்ற சாதாரண நோயாளிகளை காட்டிலும் அதிவிரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மேலும் அவர்களுக்கு வலி மிக குறைவாக இருந்ததும் மற்றும் புற்று கட்டிகள் பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதும் இச்சிகிச்சை முறையின் பெரும்பயனாக அமைவதாக ஆய்வு முடிவில் ரோயெலன்ட்ஸ் தெரிவிக்கிறார். இம்முறையினால் கண், காது, மூக்கு, தொண்டை, மூட்டு, வயிறு இறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின் கரு முட்டையை நீக்கி மேற்கொள்ளப்படும் ஐ.வி.எப். சிகிச்சை முறை ஆகியவை மிக எளிதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

குழந்தை இறப்பை தவிர்க்க கர்ப்பிணி பெண்களுக்கு நிபுணர்கள் அறிவுரை

பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து குழந்தை பிறப்பு எளிதாக நிகழ்கிறது. எனினும், சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர். இதற்கு பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல் மற்றும் தொப்புள் கொடியின் நிலை ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் தாய்மார்கள் படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வொன்று தெரிவிக்கிறது. கர்ப்பிணிகள் வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிற அதே வேளையில், இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் ஏற்படுகிறது. இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது. உலகில் இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம்(ஸ்டில்&பெர்த்) காணப்படுகிறது. அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம். இதனை தடுப்பதற்காக தூங்கும் முறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...