Oct 10, 2012

இந்தோனேசியாவின் தீவுகள்.


Picture

                                 
இந்தோனேசியாவின் தீவுகள் போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய தீவாக இது அறியப்படுகிறது. இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே

இந்தியத் தீவுகள்.

Picture


                                  இந்தியத் தீவுகள்
                                  அந்தமான் தீவுகள்என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். போர் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின்

ஆஸ்திரேலியத் தீவுகள்.

Picture


                          ஆஸ்திரேலியத் தீவுகள் நோர்ஃபோக் தீவு (Norfolk Island, என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும். நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக்

இலங்கையின் தீவுகள்.


Picture


                இலங்கையின் தீவுகள் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
1. லைடன் தீவு (வேலணைத்தீவு)
2. புங்குடுதீவு
3. நயினாதீவு
4. காரைநகர்
5. நெடுந்தீவு
6. அனலைதீவு
7. எழுவைதீவு
 8. (மண்டைதீவு)
இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும், ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
பெயர்                                    ஆங்கிலத்தில்               ஒல்லாந்தர் பெயர்        கந்தபுராண பெயர்
வேலணைத்தீவு                Velanaitivu                             Leiden (லைடன்)             சூசை
புங்குடுதீவு                             Punkudutivu                         Middleburgh                        கிரவுஞ்சம்
நயினாதீவு                             Nainativu                                Harlem                                   சம்பு
காரைநகர்                               Karaitivu                                 Amsterdam                          சாகம்
நெடுந்தீவு                               Neduntheevu                        Delft (டெல்ப்ற்)                 புட்கரம்
அனலைதீவு                          Analaitivu                              Rotterdam                            கோமேதகம்
எழுவைதீவு                           Eluvaitivu                               Ilha Deserta                         இலவு

                                       தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை. போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது. யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்". இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
                                        ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள். விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும், வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக, உயர் கல்வி, தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம். தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான், இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை. எனினும், நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம், ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள் (படகுகள், மீன் வலைகள், இழுவை இயந்திரங்கள், விதைகள், விவசாய நுட்பங்கள், மர வேலை கருவிகள்), பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர். இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன.
அவற்றின் விபரம் பின்வருமாறு: லைடன் தீவு (வேலணைத்தீவு)
கரம்பொன் மக்கள் ஒன்றியம் - www.karampon.com
காவலூர் - கனடா மக்கள் ஒன்றியம்
நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா
சுருவில் மக்கள் ஒன்றியம்
புளியங்கூடல் மக்கள் ஒன்றியம்
சரவணையூர் மக்கள் ஒன்றியம்
வேலணை மக்கள் ஒன்றியம் - www.velanai.com
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (பிரித்தானியா) www.pungudutivu.org
சர்வதேச நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம் www.neduntheevu.com
நயினாதீவு கனடிய அபிவிருத்தி சங்கம்
அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா - Analaitivu
கனடா காரை கலாச்சார மன்றம் - www.karainagar.com
இத் தீவுகளில் இருந்து யாழ் குடா நாடு நோக்கியோ, வெளி நாடுகள் நோக்கியோ மக்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களே இத் தீவுகளில் இன்னும் தங்கி உள்ளார்கள் என்றும் கூறலாம். எனினும், புலம் பெயர்ந்தவர்களிடம் ஊர் பற்றிய அக்கறை உள்ளது. அவர்களுடைய உதவியுடன் இத் தீவுகள் பொருளாதார அபிவிருத்தி அடையலாம். மேலும், அவர்களுக்கு இத்தீவுகள் உல்லாச அல்லது சுற்றுலா இடங்களாகவும் பரிமானிக்கலாம்.
                                        லைடன் தீவு (Layden island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு. கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து (Holland) நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது. இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு:
1. சுருவில்
2. நாரந்தனை
3. கரம்பொன்
4. ஊர்காவற்றுறை (காவலூர்)
5. பரித்தியடைப்பு
6. புளியங்கூடல்

7. சரவணை
8. வேலணை

9. அல்லைப்பிட்டி
10. மண்கும்பான்
இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.
லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம் (கவிஞர் சக்தி அ. பால. ஐயா)
வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.
அல்லைப்பிட்டி (Allaipiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஊர்காவற்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.
கரம்பொன் (Karampon) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சரவணை (Saravanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சுருவில் (Suruvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடல்வளமும், நல் மண்வளமும் கொண்டது. இக்கிராமமானது தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு மூவைந்து கிலோமீற்றர் தொலைவிலே உள்ளது. இங்கு ஏறக்குறைய 2500 - 3000 குடிமக்கள் உள்ளனர். வளைந்த கிராமம் என்ற படியால் சுரி + வில் = சுருவில் என வந்தது என்பர். " முன்னொரு காலத்தில் பல செல்வந்த வியாபாரிகளின் தாயகமாக செழிப்புற்று இருந்தமையினால், "குட்டி அமெரிக்கா" என்ற குறிப்பெயரும் கொண்டிருந்தது. சுருவில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் மிகப் பிரபல்லியமானதொன்றாக விளங்கியது. சுருவில் பதியின் அருகாமையில் கடற்கரைப் பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அயற் தீவுகளான் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, காரைதீவு, மண்டைதீவு போன்ற இடங்களுக்கு முற்காலத்தில் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கு இப்பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகமே பெரிதும் உதவியாக இருந்தது. சுருவில் கடல்வளம் நிறைந்ததொன்றாக விளங்கியமையால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி நூற்றுக்கதிகமான மீனவர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் பலர் கப்பல் ஓட்டிகள். இவர்கள் இந்தியா, மாலைதீவு போன்ற இடங்களில் இருந்து உணவு இறக்குமதியிலும், மக்கள் போக்குவரத்துக்கு உதவியாகவும் முற் காலங்களில் செயற்பட்டார்கள். தற்போதைய நிலவரம் தெரியவில்லை. சுருவில் மண்வளம் கமச்செய்கைக்கு (Paddy cultivation) மிகவும் உகந்தது. நெல் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. கிராமத்தை சுற்றிக் கற்பகதருச் (பனைமரச்) சோலைகளும், தென்னஞ்சோலைகளும், மாஞ்சோலைகளும் நிறைந்திருக்கின்றன. தோட்டங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் பயிரப்படுகின்றன. கற்பகத்தருவின் மூலப்பொருட்களான ஓலை, மட்டை, நார், பனம்பழம், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் போன்றவற்றைகொண்டு சிறு கைத்தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கிருந்த மக்களின் மற்றுமொரு முக்கிய பொருளாதார மார்க்கம் வியாபாரம் ஆகும். கொழும்பிலும் பிற இடங்களிலும் கடைகள், உற்பத்தி தாபனங்கள் வைத்து பொருள் ஈட்டினர். எனினும், போர் சூழலுக்கு பின்னர் பல வர்த்தகர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலமை அடுக்கமைவின் கூறுகள் இங்கு உண்டு. குறிப்பாக மீனவ, விவசாய-வியாபார சமூகங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்தாலும், ஒரு இடைவெளி இருக்கின்றது. எனினும், ஒரு அடித்தளமான சமத்துவ அல்லது சமநிலை உணர்வு இங்கு மேலோங்கி இருக்கின்றது எனலாம். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் ஐயனார், அம்மன் ஆகிய குல தெய்வங்களை வழிபடும் இந்துக்கள். இங்கிருக்கும் ஐயப்பன் கோயில், நாக பூசணி அம்மன் கோயில், வைரவ கோயில் ஆகியவை இம் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள், ஐயனார் கோயில் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட, விசாலமான கோயிலாகும். யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துகேயர் காலனித்துவ ஆட்சியின்]] கீழ் கணிசமான மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள அன்னை மேரி ஆலயம் கத்தோலிக்கரும், இந்துக்களும் வழிபடும் ஒரு தலம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனேகர் பரம்பரை உறவினர், சினேகர். ஆகையால், இந்து கிறீஸ்தவ வேற்றுமை அல்லது பிரிவினை இல்லை. அதாவது, மதம் காரணமாக பிரச்சினையோ, அல்லது குமுகாய உணர்வில் பாதிப்போ இல்லை. சுருவிலில் ஒரு ஆரம்ப பாடசாலை, 5 ம் வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் உண்டு.
நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.பரித்தியடைப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
புளியங்கூடல் (Puliyankodal) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
                            வேலணை(Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்". முருக வழிபாடு முதன்மை பெற்றிருந்ததனால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும், "பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றதன்ப" என்றும் இரு பெயர் தோற்ற காரணங்களை சுட்டுகின்றது "இடப்பெயர் ஆய்வு" என்னும் நூல்.

சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -1





நமது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ‘சஞ்சீவி’ மூலிகையைப் பற்றி, செவிவழிச் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த மூலிகை பல அதிசய சக்திகள் கொண்டது என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது பற்றி விவரம் தெரியும்?

அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும். தாய் கழுகு இதை தேடி செல்லும் வரை நாம் காத்திருந்து, அதன் பின்னர் நாம் கூட்டில் இருக்கும் குஞ்சுக் கழுகின் கால்களில் சிறிய இரும்புச் சங்கிலியைக் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து கொள்ள வேண்டும். இரையுடன் திரும்பிய தாய்க் கழுகு, தனது குஞ்சுகள் சங்கிலியால் கட்டப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுவிப்பதற்காக, சஞ்சீவி மூலிகையை தேடிச் செல்லும். சிறிது நேரத்திலேயே அதைக் கொண்டு வந்து தனது குஞ்சுகள் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலி மீது வைக்க அவை இரண்டாக தெறித்து விடுபடும். அதன் பிறகு, மீண்டும் அது இரை தேடி புறப்படும் வரை நாம் காத்திருந்து, பின்னர் மேலே ஏறி கூட்டில் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒரு மூலிகை வேர் இருக்கும். அதை எடுத்து வந்து நெருப்பில் போட்டால் வேகாது எனவும், ஓடும் நீரில் போட்டால் எதிர்த்துச் செல்லும் எனவும், இதை பூட்டிய பூட்டின் மேல் வைக்க அது திறந்து விடும் எனவும் கூறக் கேட்டிருப்போம்.

இம் மகத்துவம் வாய்ந்த சஞ்சீவி மூலிகையின் வேரை நமது காலின் தொடைப் பகுதியில் வைத்து தைத்து விட்டால், நம் உடலுக்கு ஒரு அபூர்வ சக்தி வந்து விடும். பிறகு உடலின் எந்தப் பகுதியிலும் கத்தியால் குத்தினாலும், வெட்டினாலும், அந்தச் சதைப் பகுதி கூடி விடும்: காயமும் உடனே ஆறி விடும் எனவும் பெரியோர்கள் சொல்லியிருப்பர்.

ஆனால், இன்றைய நவீன விஞ்ஞான உலகில் மேற்கண்ட விவரங்களை எல்லாம் நமப முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் நமக்குள் கேள்வி எழலாம். முதலில் இதன் அடிப்படையைப் பற்றி சற்று ஆராய்வோம்.

“இல்லாமல் புகையாது: அள்ளாமல் குறையாது” என்று ஒரு பழமொழி உண்டு. எந்த ஒரு விஷயமும், கருத்தும் உண்மையிலிருந்து தோன்றியவையாகத் தான் இருக்கும். அவை காலப் போக்கில் பல கற்பனைகள் கலந்து பல்வேறு உருவம் பெற்றிருக்கும்.

இக்கருத்தின் படி பார்த்தால் சஞ்சீவி மூலிகை இருப்பது உண்மையா? என்றால் உண்மை தான் என்று சொல்ல சில சான்றுகள் உரைக்கின்றேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, எனது நண்பர்களில் ஒருவராகிய மதுரை வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் அவர்கள் (இவர் தான் ஷங்கர் டைரக்ஷனில் கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படத்திற்காக வர்மக்கலை பயிற்சி அளித்தவர்) ஓலைச் சுவடி ஒன்றில் சஞ்சீவி மூலிகையை பல்வேறு முறைகளில் எடுப்பது பற்றிய விவரம் இருப்பதைக் கண்டறிந்தார். அதன்பிறகு சித்தர்கள் சங்கம் அமைத்து வாழ்ந்து வந்த ‘சதுரகிரி’ மலையில் பல வருடம் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டடு, ஒரு மூலிகையானது, சஞ்சீவியின் செயலில் பாதி உள்ளதாக கண்டறிந்தார். அதை வைத்து பத்திரிகை நிருபர்களுக்கு முன் பூட்டிய புட்டை திறந்து காண்பித்தார். அவர்களும் திரும்ப சோதித்து பார்த்து ஆச்சரியத்துடன் ஒப்புக் கொண்டனர். “ஜோதிப்புல்” என்ற மூலிகை தான் அது. இது பற்றிய செய்தி -20 -வருடங்களுக்கு முன்பு “பாக்யா” வார இதழில் வெளி வந்துள்ளது.

இது பற்றிய விளக்கம் ஒரு தனிப்பதிவாக இதே தளத்தில் 
"அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம்" என்ற தலைப்பில் 
முன்பே வெளியிட்டுள்ளோம் .

எனது ஆய்வில், பல்வேறு சித்தர் நூல்களை ஆராய்ந்ததில் சஞ்சீவி மூலிகையின் அடையாளம், அதை எப்படி சோதித்து அறிவது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டம் மோகனூர் வைத்தியர் பெருமாள் சேர்வை என்பவரிடமிருந்த “கொல்லிமலைக் கலிங்கம்” என்ற ஓலைச் சுவடியில் சஞ்சீவி மூலிகையைப் பற்றிய அபூர்வ தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:

“சதுரகிரி” பர்வதத்திற்கு மேல் மூலையாக குதிரை மலை உண்டு. அதன் மத்தியில் பெருமாள் கோயில் உண்டு. அந்தக் கோவிலின் தென்மேற்கு மூலையாக சின்ன சிகரம் உண்டு. அதற்கு தென் மேற்காக சுனை உண்டு. இதற்கு தெற்காக “சஞ்சீவி” உண்டு.

கருப்பு நிறமாய் இருக்கும். இலை வேப்பிலை போல் இருக்கும். அந்த மரத்தை வெட்டினால் உடனே வளரும். மரப் பட்டையை பொடி செய்து மரணமடைந்தவருக்கு வாசங் காட்ட எழுந்திருப்பான். இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தாலும் பொடியை வாசங் காட்ட எழுந்திருப்பான். இந்த வித்தை கை கண்டது. ஒரு நாளைக்கு ஐந்து வர்ணமாவான் எனச் சுவடியில் உள்ளது. (சித்தர்களின் அருள் பெற்றோருக்கு இம் மூலிகை கிட்டும்)

மருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்












மருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்
தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்...

1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும்

பழமொழிகள் (ஓ)

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி

பழமொழிகள் (ஐ) (ஒ)

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா? 

பழமொழிகள் (ஒ)

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! 

பழமொழிகள் (ஏ)

ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம்.

பழமொழிகள் (எ)

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்

பழமொழிகள் (உ)

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

'' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
[இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...