Nov 1, 2012

தொடுதிரைக் கணினிகள்

சர்ஃபேஸ் டேப்லட் கணினிவிண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான விண்டோஸ் 8ஐ மைக்ரொஸாஃப்ட் இன்று வெளியிடுகிறது.
தவிர முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் இன்று மைக்ரோஸாஃப்ட் வெளியிடுகிறது. இதற்கு சர்ஃபேஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.
நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில்

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு


நீலம் புயல் சீற்றத்தால், சென்னையில் தரை தட்டிய கப்பலை மீட்க முடியுமா என, சிங்கப்பூரில் இருந்து வந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வுக்குப்பின், இரண்டு நாளில் மீட்பு முயற்சிகள் தொடங்கும் என, தெரிகிறது. கப்பலில் தவித்த ஊழியர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அலையில் சிக்கிய ஐந்து ஊழியர்களை தேடும் பணி தொடர்கிறது.

"நீலம்' புயல் சீற்றம் காரணமாக, சென்னைத் துறைமுகத்திற்குள் இருந்த கப்பல்கள் நடுக்கடலுக்கு அனுப்பப்பட்டன. மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, "பிரதீபா காவேரி' என்ற கப்பலும் நடுக்கடல் நோக்கிச்

Oct 31, 2012

சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி

statue_of_liberty_002


சான்டிப் புயலின் கோரத் தாண்டவத்தால் அங்குள்ள சுதந்திர தேவி சிலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
மன்ஹட்டான் நகர மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கர்களின் வரலாற்றுச் சின்னமான சுதந்திர தேவிச் சிலையை சமீபத்தில்தான் சீரமைத்தார்கள்.
அதுவரைக்கும் மூடப்பட்டிருந்த இச்சிலை, பணிகள் முடிவடைந்து கடந்த ஞாயிறே திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது 'சான்டி' புயலின் கோரத் தாண்டவம் காரணமாக சுதந்திர தேவி சிலை மறுபடியும் முடப்பட்டிருக்கிறது.
30 மில்லியம் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப் பட்ட சீரமைப்புப் பணிகள்

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்!

 10 Bn Business How Israel Became

, செப்டம்பர் 24, 2012,

Get the Google App & Chrome and Start Searching. It's Quick & Easy.
டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. 2009ம் ஆண்டில் ரஷ்யாவை விட அதிகமான ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், உளவு செயற்கைக் கோள்கள் தொடர்பான கருவிகள், விமானங்கள்-ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் லேசர் உதவியிலான ஏவுகணைகள்,

ஈரான் போர்க்கப்பல்கள் சூடான் துறைமுகத்தில் நிறுத்தம்: இஸ்ரேலை மிரட்ட திட்டம்


கார்தோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் அதன் நட்பு நாடான சூடானில் நிறுத்தப்பட்டுள்ளது. சூடான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கவும், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கவுமே இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் இரண்டுமுறை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டதற்கு 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்று அவர் கூறிவிட்டார்.
இஸ்ரேலை மிரட்ட போர்க்கப்பல்?
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் நாட்டின் 2 போர் கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ரயில் சுரங்கங்களில் வெள்ளம்: போக்குவரத்து சீராக 10 நாட்களாகும்

நியூயார்க் :அமெரிக்காவை உலுக்கிய, "சாண்டி' புயல் காரணமாக, பலத்த மழை பெய்ததால், 1,000 கி.மீ., தூரம் கொண்ட சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சீராக, 10 நாட்களாகும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி' புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15 மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை, 50 பேர், பலியானர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

மூன்று அணு நிலையங்கள் மூடல் : நியூஜெர்சியில் உள்ள, "ஆயிஸ்டர் க்ரீக்' அணுசக்தி நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நியூஜெர்சியில், டெலாவர் நதிக்கருகே உள்ள, இரண்டு

Oct 30, 2012

சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது



சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது
நியூயார்க், அக். 30-
அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கான கட்டுமான பொருள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் என்டீவர் விண்கலம் மூலம் அனுப்பி வந்தனர். ஆனால் அந்த விண்கலம் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றது.
எனவே, தனியார் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவற்றை சமீபத்தில் அனுப்பி வைத்தனர். ஆளில்லாமல் இயங்கும் அந்த விண்கலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளிக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திட்டமிட்டபடி 18 நாட்கள் கழித்து நேற்று அமெரிக்காவின் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதை நீர்மூழ்கி வீரர்கள் குழு பத்திரமாக மீட்டது.

அப்பிளின் சரிவு ஆரம்பம்?


 
By Kavinthan Shanmugarajah
2012-10-30 14:12:57

 
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
 
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
 
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
 
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி

கரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி நகர்கிறது



காரின் மீது விழுந்து கிடக்கும் மரம்
அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்!

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்! 

News Serviceஅமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது! அமெரிக்காவை தாக்கி வரும் சான்டி புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.
  
சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது. வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை. இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை. அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்! சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன! சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Oct 29, 2012

தீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எச்சரிக்கை


sandy_canada_001சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில், சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...