Jan 23, 2013

பருமன் அதிகம் ஆனால் பலம் இல்லை – பெண்களுக்கு புதிய சிக்கல்!

பருமன் அதிகம் ஆனால் பலம் இல்லை – பெண்களுக்கு புதிய சிக்கல்!

மூதாதையர்களை விட, நவீன கால பெண்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர். குறைவாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்´ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு அவுஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியர் கிராண்ட் டாம்கின்சன் கூறியதாவது...

பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு உடல் வலிமை குறைந்துவிட்டது. சாதாரண உடற்பயிற்சியான உட்காருதல், எழுதல் போன்றவை கூட, 8 முதல் 10 சதவீதம் குறைந்துவிட்டது.

1985ம் ஆண்டு வரை, உடல் வலிமையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருந்ததில்லை, அதற்குப் பின், உடல் எடை கூடியுள்ளதே தவிர, உடல் பலம் கூடவே இல்லை. நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.

குறிப்பாக, பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

லண்டனை சேர்ந்த முட நீக்கியல் நிபுணர் சமி மார்கோ கூறுகையில், பெண்கள் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் ஆனால்,  அதற்கேற்ற பலம் அவர்களிடத்தில் இல்லை என்றார்.

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கென் பாக்ஸ் கூறியதாவது, உடல்பலம் குறைவுதான் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. எலும்பு முறிவு, மூட்டுவலி, முதுதண்டு வலி போன்ற உபாதைகளுக்கு இதுவே மூலகாரணம். தங்களின் உடலை மெலிதாக வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். இதனால்,அதிகமாக சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்

அடுக்குமாடி கட்டடங்களால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆபத்து!

அடுக்குமாடி கட்டடங்களால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆபத்து!




Temple images
பெரும்பாலான கோவில்களுக்கு அருகில், அடுக்குமாடி கட்டடங்கள் அமைக்கப்படுவதால், கோவிலின் கட்டுமானம் சிதைந்து வருகிறது. தற்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கற்கள் விழுந்ததற்கும் அதுவே காரணமாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலம். இக்கோவில், 156 ஏக்கர் பரப்பளவில், சப்த எனப்படும் ஏழு

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்க விஞ்ஞானி கூறும் கருத்துக்கள்..

News Service
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
   கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல்

ஓடுள்ள விலங்குகள் வலியை உணரும் என்பதற்கான தடயங்கள் சிக்கின...

News Service
நண்டு, இரால் போன்ற ஓடுடைய நீர் விலங்குகள் தமது ஓட்டிலேயே வலியை உணருகின்றன என்பதற்கு கூடுதல் தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் சாப்பிடும் வகையை ஒத்த ஒரு கரை நண்டு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன என்றும், மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.வலியை உணரும் தருணங்களில் இரால்களுக்கும் நண்டுகளுக்கும் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.
   பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொடுக்கு
அவை வலியை உணரும் என்ற புரிதலுடன் அவற்றைக் கையாளுகிற போக்கு நம்மிடையே இல்லை என்றும் இவ்வகை விலங்குகளை அனாவசிய வலியிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகளும் இல்லை என்று பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல்வுட் சுட்டிக்காட்டுகிறார். தேவைப்படாத சில நண்டுகள் வலையில் மாட்டிக்கொண்டால், அவற்றின் கால்களையோ, கொடுக்கையோ உடைத்து மீண்டும் அவற்றைக் கடலில் எறிவது போன்ற வழக்கங்கள் மீனவர்களிடையே இருந்துவருவதாக அவர் தெரிவித்தார்.

அமைதியாக இருந்து ஆளைக்கொல்லும் இரத்தமிகு அழுத்த நோய்...

News Service
இரத்தமிகு அழுத்த நோயில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அதன் அறிகுறிகள் அவ்வளவாக வெளியில் தெரியாது. மற்ற நோய்களைப் போல் இந்தப் பிரச்சனைக்கு சிறப்பான கண்டுபிடிக்கும் தன்மையுள்ள அறிகுறிகள் கிடையாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீண்ட நாள்கள்வரை நோயின் தன்மையை அறியாமல் சாதாரணமாக இருப்பார்கள். எனவேதான் இதை அமைதியான உயிர்க்கொல்லி நோய் என்றும் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் இந்த நோயானது ஏதாவது மருத்துவப் பிரிசோதனையின்போதோ அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும்போது நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் போதோதான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.
   இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி, படபடப்பு, நெற்றிப்பொட்டு,

Jan 22, 2013

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?

 



Temple images
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா?


 



Temple images
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. பாம்பு கணபதியின் இடுப்பு கச்சையாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது. சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு.  பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகிறது, இருந்தால் ஆசனமாகிறது, படுத்தால் பாயாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங்களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரசமரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தி மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். பாம்பு வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர்.
பாம்புகள் பற்றிய தகவல்கள்: பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட,

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் கணினியை Auto Restart செய்ய முடியுமா?

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் கணினியை Auto Restart செய்ய முடியுமா?

News Service சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
  
1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும்.
2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும்.
3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.
4. இனி Settings Save செய்து விடவும்.
5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.
இதற்கு My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties >> Advanced System Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது System Properties என்ற பகுதி ஓபன் ஆகும், அதில் Advanced பகுதியில் Startup and Recovery என்பதற்கு கீழே உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்லலாம்.
கவனிக்க, குறிப்பிட்ட OS க்கு Password வைத்து இருந்தால் அந்த பகுதிக்கு வந்து விடும். இதனால் Team Viewer போன்ற மென்பொருள் மூலம் Access செய்ய இயலாது. Remote Access செய்ய நினைப்பவர்கள் Password வைக்காமல் இருப்பது நல்லது.
அவ்வளவு தான் இனி Power போய்விட்டு வந்தாலும் உங்கள் கணினி On செய்யப்பட்டே இருக்கும்.

சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தை தரும் அன்னாசி ஜுஸ்!

சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தை தரும் அன்னாசி ஜுஸ்!

News Service அன்னாசிப்பழம் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களுள் ஒன்று. அத்தகைய அன்னாசி பழம் சாப்பிடுவதற்கு கடுமையாக இருந்தால். அதனை ஜுஸ் செய்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் ப்ரோமேளின் உள்ளது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் சி உள்ளது. இந்த ஜூஸ் குடித்தால் பசியும் எடுக்காது. இதை நாம் தயாரிக்கும் போது சர்க்கரை அதிகம் போட வேண்டிய அவசியமில்லை. இந்த பானம் ரசாயன பொருள் எதுவும் இல்லாத சத்தான பானம். இந்த அன்னாசி ஜூஸை செய்வது மிகவும் சுலபமானது.
  
தேவையான பொருள்கள்:
அன்னாசிப் பழம் - 1
சர்க்கரை - 2 டீஸ்பூன் (10 கிராம்)
செய்முறை:
* அன்னாசி பழத்தின் இலைகள் மற்றும் தோலை நீக்கி சுத்தம் செய்து

கூந்தலை இலகுவாக பராமரிப்பதற்கான சில வழிகள்..

News Service கூந்தலுக்கு சூடான எண்ணெய் மசாஜ், வல்லாரை, மருதாணி, செம்பருத்தி பூ, ஹென்னா மற்றும் த்ரிப்லா மாஸ்க்களைப் போட்டு கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்கலாம். கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால் இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர்.
அதற்கு எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான்.
  
இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த

சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமா? இவற்றை சாப்பிடுங்கள்..

சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமா? இவற்றை சாப்பிடுங்கள்..

News Service அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...