Apr 28, 2013


ஒற்றுமைக்கு..........காகம்.
அமைதிக்கு..............புற

உழைப்புக்கு............எறு
ம்பு
தன்மானத்திற்கு.....கவரிமான

சுறுசுறுப்புக்கு.........த
ேனீ
தந்திரத்திற்கு..........நரி
பேச்சுக்கு.................கிளி
பாட்டுக்கு...............குயில்
ஆடலுக்கு...............மயில்

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...


பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது

ஹிட்லரிடம் பணிபுரிந்த பெண் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்


ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் 1934 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். இவர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் இவரை கொல்ல பல முறை திட்டம் தீட்டினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரிடம் பணிபுரிந்த மார்கட் வோலக் என்ற பெண்மணி 50 வருடங்களாக வெளி உலகுக்கு சொல்லாமல் வைத்திருந்த தனது அனுபவங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
95 வயதாகும், அந்தப்பெண் தனக்கு 25 வயது இருக்கும் போது ஹிட்லரிடம் இரண்டரை வருடம் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நரியின் குகை (வுல்ப்ஸ் லேர்) என்று பெயரிடப்பட்ட ராணுவ தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த இடம் தற்போது போலந்து நாட்டில் உள்ளது. அங்கு மார்கட் வோலக் ஹிட்லரிடம் பணிபுரிந்தார்.
அந்த அனுபவம் குறித்து மார்கட் கூறியதாவது:-
ஹிட்லர் ஒரு சைவ உணவு பிரியர். நான் அவரிடம் பணிபுரிந்த காலத்தில் அவர் அசைவம் சாப்பிட்டதில்லை. இங்கிலாந்து அரசு தனக்கு விஷம் வைத்து கொன்று விடும் என்று ஹிட்லர் பயந்தார். அதனால் அவர் சாப்பிடும் உணவுகளில் விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 15 பெண் பணியாளர்களை வைத்திருந்தார்.
அந்த உணவை ஹிட்லர் சாப்பிடும் முன் சாப்பிட்டு விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே அவர்களின் வேலை. அதில் நானும் ஒருத்தி. உணவுகளில் விஷம் கலந்திருக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருக்கும். உணவுகள் மிக சுவையாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மரண பயம் காரணமாக நாங்கள் நிம்மதியாக சாப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது இதுதான் நமது கடைசி உணவாக இருக்கும் என்று பயந்து நடுங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 1917-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை புனித நீரா?





காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடும
ையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு

Apr 27, 2013

தொப்பையைக் குறைக்கும் ஸ்கிப்பிங்கின் இரகசியங்கள்!



News Service இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் 10 நிமிஷம் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு. முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக்

உலகையே அசைத்தவரின் மறுபக்கம்


News Serviceவிண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர். விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587இல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவி யால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலிய வற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.
  
படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி

ன்றாடம் உண்ணும் உணவுகளுக்கான அளவுகோல்

News Serviceநாம் உண்ணும் உணவு சரியானதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவுகோல் உள்ளது. அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டு போகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.
   அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக் கொள்வில்லை என்பது பொருள். அதன்

முன்னர் கருதியதை விட 1000 டிகிரி அதிகமாகக் காணப்படும் புவி மைய வெப்பம்!




News Service பூவியின் உள்ளகமான (core) என்று அழைக்கப் படும் அதி ஆழமான பகுதியில் எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை இன்னமும் 1000 டிகிரி அதிகம் அதாவது 6000 டிகிரி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதில் ஆச்சரியாமன இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த உள்ளக வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச் சமனானது என்பதாகும். எக்ஸ் ரே (X-ray) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில் வெப்பமாக்கி அது எவ்வாறு உருகி லாவா ஆகின்றது எனப் பரிசோதிக்கப் பட்டது.
  
ஏனெனில் பூமியின் மையப் பகுதியில் சந்திரனின் விட்டத்துக்குச் சமனான கோளப் பகுதி திண்ம இரும்புப் பந்து போல் உள்ளது. இதனைச் சுற்றி மிக இயங்கு தன்மை மிக்க திரவ இரும்பு மற்றும் நிக்கலின் கலவையினால் காணப்படுகின்றது. 1990 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பரிசோதனைகளின் போது இந்த இரும்பு உருகும் வெப்பநிலை 5000 டிகிரி என முடிவெடுக்கப் பட்டது.
எனினும் சமீபத்தில் ஐரோப்பாவின் சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு கூடத்தில் அதே பரிசோதனை இன்னும் அதிக திறனுடைய X-ray இனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது. இதன் போது இது திருத்தமாக 6000 டிகிரி என்பது ஊர்ஜிதமானது. தற்போது இந்தப் பரிசோதனை முடிவு புவிப் பௌதிகவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், புவியியக்கவியலாளர்கள் ஆகியோருக்கு மிக உபயோகமாகப் பயன்படவுள்ளது என்பதுடன் அவர்களின் கணணி மாதிரிகளிலும் இது திருத்திப் பதிவிடப்படவுள்ளது.

இன்று பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்! பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது,அதை பார்க்க முடியும். இன்று, 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில்,சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும். தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு, ஏப்.4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.வரும், 28ம் தேதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும். வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும். சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் தேதி, நடைபெற உள்ளது. சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

Apr 25, 2013


இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.

110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள் 

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.

#என்று தணியும் இந்த 'தீ' விபத்துகளின் தாகம்.
இன்னும் எத்தனை உயிர்களை 'தீ'க்கு கொடுக்கப்போகிறோம். அலட்சியம், லாப வெறி, ஊழல் எல்லாம் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமையை பறிக்கின்றது.
110கோடி மக்கள் இருப்பதாலோ என்னமோ மனித உயிர்கள் மலிவாகப்போய்விட்டன இங்கே, கும்பகோணம் தீவிபத்து, ஸ்ரீரங்கம் தீவிபத்து என தொடர்ந்து தீவிபத்துகள் என்ற பெயரில் நடப்பவைகள் எல்லாம் அலட்சிய கொலைகளே, இன்று அந்த அலட்சிய கொலைகள் வரிசையில் கோவை வணிக வளாக தீவிபத்து.

கோவையில் இன்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கோவை-அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் அருகே 4 மாடி கொண்ட சேரன் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் பிடித்த தீயில் பலர் படுகாயம் அடைந்தனர், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர்.

மேலை நாடுகளிலும் முன்னேறிய நாடுகளிலும் இப்படியான தீவிபத்துகள் நிகழ்ந்தாலும் கூட உயிர்பலி என்பது மிக மிகக்குறைவே, ஏனெனில் கட்டிடத்தை சுற்றிலும் ஃபயர் எஞ்சின் அக்சஸ் ஏரியா என கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் ஃபயர் எஞ்சின் செல்லக்கூடிய அளவு இடம், கட்டிடத்தினுள் தீயை அணைக்க கூடிய கருவிகள், அவைகள் வேலை செய்கிறதா என்று அடிக்கடி செக்கிங்க, மேலும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ஃபயர் டிரில் என பல விசயங்கள் இருக்கும், கட்டிடத்தினுள் கூட வணிக வளாகங்களில்ஃபயர் அக்சஸ் ஏரியாவில் கடை போட்டிருந்தாலோ பொருட்களை அடுக்கி வைத்திருந்தாலோ வணிக வளாகத்தையே சீல் வைத்துவிடுவார்கள்

ஆனால் தீயணைப்பு வண்டிகள் நிற்கவும் கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கமான கட்டிடங்கள், தீ என்று வாளியில் எழுதி வாளியில் ஒன்றுமே இல்லாமல் மாட்டி வைத்து இருப்பது, ஃபயர் டிரில் என எதுவுமே செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு அடி இடத்தையும் வாடகைக்கு விட்டு லாப வெறியில் இருப்பதுவும் தீப்பிடித்தால் தப்பிக்க ஏதுவான எந்த வழிகளும் இல்லாத கட்டிடங்களுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிப்பதும் உயிர்வாழ வேண்டிய அடிப்படை உரிமையை பறிக்கின்றன இந்த லாபவெறியும், லஞ்சமும்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குகிறோம்.

சித்திர குப்தனுக்கு பதவி ஒருநாள் யமதர்ம ராஜனுக்கு மனகவலை அதிகமாகிக்கொண்டே போனது. தன் மனகவலையை சிவபெருமானிடம் சொன்னார். “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.

“உன் கேள்வியை ஜீவராசிகளை படைக்கும் பிரம்மனிடமே கேள். அவர் இதற்கு தீர்வு சொல்வார்.” என்றார் சிவபெருமான்.
யமதர்மராஜன், பிரம்மனிடம் சென்று தன்னுடைய கவலையை சொன்னார். அதற்கு பிரம்மதேவர், “அட இதுதானா உன் கவலை.? சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.
அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் – துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவிலும் நினைக்காமல், இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து, “இது புண்ணிய ஆத்மா” என்று சித்திர குப்தன், அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால், அடுத்த பிறவி இல்லை, அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.

சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளால் அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து, சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி, அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான-தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான-தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல், எந்த பிறவியும் வளமாகும். வாழ்வே இனிதாகும்.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாள்: 25.04.2013

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...