Apr 29, 2013

கொலை வெறியுடன் துரத்தும் கொலஸ்ட்ரோல் - ஒரு பார்வை!


News Service
இப்போதெல்லாம் 'காலில் ஆணி குத்திடுச்சு' என மருத்துவரிடம் போனால்கூட, 'ஷுகரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க' என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!' என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.
  
கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்!

Written By ratnam raja on Monday, April 29, 2013 | 7:49 AM


இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான ‘சீனாவில் இன்ப உலா ‘ என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு

தினமும் சாப்பிடலாம் உலர்ந்த திராட்சை




உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்...

உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.

கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்


கின்னஸ் சாதனைக்கு முயன்றவர் அந்தரத்தில் உயிரை விட்டார்!
கின்னஸ் சாதனை படைத்த, ஒருவர், மலையிலிருந்து, இன்னொரு மலைக்கு, கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது, திடீரென மரணம் அடைந்தார். இதை பார்த்து, செய்வதறியாது நின்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மிலான் பாலியைச் சேர்ந்தவர் சைலேந்திரநாத், 45. போலீஸ் டிரைவராக பணிபுரியும் இவர்,சாகசம் செய்வதில் வல்லவர். டார்ஜிலிங்கில் ரயிலை, தனிநபராக தலைமுடியால் இழுத்து உலக சாதனை புத்தகமான, "கின்னஸ்´சில் இடம் பிடித்தவர். தன் சாகச பயணத்தின் அடுத்த கட்டமாக, டார்ஜிலிங் மாவட்டத்தில், டீஸ்ரா ஆற்றில், இரு மலைகளை கம்பியில் தலைமுடியில் தொங்கியபடி கடக்கும் சாகச பயணத்தில், நேற்று பிற்பகல் ஈடுபட்டார். 

ஒரு மலையிலிருந்து, மற்றொரு மலைக்கு கம்பியில் தொங்கியபடி அவர் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர், சாகசம் செய்வதாக நினைத்த, பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர்.

ஆனால், அந்தரத்திலேயே அவர் உயர் பிரிந்தது. பின்னர், தான் அங்கிருந்தவர்களுக்கு உண்மை தெரிந்தது.மீட்புக்குழுவினர், வந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்,சிலிகுரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Apr 28, 2013

இத்தாலி பிரதமர் அலுவலம் அருகே துப்பாக்கி சூடு: 2 பேர் படுகாயம்



இத்தாலி பிரதமர் அலுவலம் அருகே துப்பாக்கி சூடு: 2 பேர் படுகாயம்
ரோம், ஏப். 28-

பொருளாதரச்சரிவு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் இத்தாலியில் முன்னாள் அதிபர் ஜியார்ஜியோ நெபோலிடானோவே மீண்டும் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த ’என்ரிகோ லெட்டாஸ்’ என்பவரை புதிய பிரதமராக அறிவித்து இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அதிபர் மாளிகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு புதிய பிரதமரின் வருகையை எதிர்நோக்கி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும், புதிய பிரதமர் என்ரிகோ லெட்டாஸ் தனது மந்திரிகள் பரிவாரத்துடன் அலுவலகத்திற்கு வருவார் என எதிர்பார்த்து அவரது ஆதரவாளர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் அங்கிருந்த காவலர்களை நோக்கி சுட்டான். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த போலீசார் அவனை மடக்கிபிடித்தனர். 

இத்தாலியில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பு

இத்தாலியில் 2 மாத அரசியல் இழுபறி நிலைக்குப் பின் புதிய கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது.
அங்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் நடைபெற்றது. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கியுள்ள இத்தாலியில் அரசியல் சிக்கலும் ஏற்பட்டது ஐரோப்பிய யூனியனில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்ரிகோ லெட்டாவின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் இடையே கூட்டணி

சனி பார்வையில் கிரகங்கள்


சனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ஒரே நீதி, அது சமநீதி என்ற கோட்பாடு கொண்டவர். 

அதனால் பயம் கலந்த பக்தியோடு பார்க்கப்படுகிறார். இவர் பார்க்கும் இடங்கள் விருதிக்காது என்கிறது சாஸ்திரம். 

இவர் பார்வையில் உள்ள கிரகங்கள் பல தொல்லைகளை தரும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்.

நீலமாய் இருப்பார், கருப்பாய் மருவார். இயந்திரமாய் உழலுவார். உழைப்பை அதிகமாக்குவார். 

அரசியலுக்கு அடித்தளம், மருத்துவத்திற்கு பக்கப்பலம், தொழில் நுட்பத்திற்கு உதவிகரம்

உயர் இரத்த அழுத்த விளைவு மீள முடியாத பக்கவாதம்

nஹீhற்றா நோய்களின் மிக முக்கியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நோய் உயர் இரத்த அழுத்தம் என்பதை அறிந்துகொண்டோம். உயர் இரத்த அழுத்தத்தை ‘ஒரு மெளனமான கொலையாளி’ என்று கூறுமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அதன் இயல்பு.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது. இது ஆளையே ஒரு நொடியில் முடித்துவிடும். மாரடைப்பில் சிறிய அளவு தாக்கம் ஏற்படும் போது அதனை ‘மைல்ட் அட்டாக்’ என்று கூறுவார்கள் ‘மைல்ட் அட்டாக்குக்கு ஆளான ஒருவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் இரத்த நாளத்தின் அடைப்பை சரி செய்து விடுவார்கள்.
இப்போது அவர் தன்னுடைய உணவுப் பழக்க வழக்கங்களை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டவர்கள் வழமை போன்று தன் வேலைகளை செய்ய முடியும்.
ஆனால் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் ஷிtrokலீ இனால் அதாவது பக்கவாதம்,

விஸ்கியின் மருத்துவ குணங்கள்

Whiskyஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.
ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!
நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில்

பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!



பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!
நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....

மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...