Nov 11, 2013

பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.


பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.
[Monday, 2013-11-11
News Service பிலிப்பைன்ஸ் புரட்டி போட்ட ஹயான் புயல் வியட்நாமில் இன்று கரையை கடந்தது. பிலிப்பைன்சை தாக்கிய ஹயான் புயலில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அங்கு 315 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியில் 44 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிக்கொப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் அரசுக்கு அமெரிக்கா, ஜெர்மனி பொன்ற நாடுகள் உதவ வந்துள்ளன. இந்தநிலையில், ஹயான் புயல் வியட்நாம் நாட்டின் மத்திய கடற்பகுதியான ஹைவாங்கில் இன்று அதிகாலை கரையை கடந்தது.
  
வலு இழந்த நிலையில் சீனாவை நோக்கி இது நகர்கிறது, முன் எச்சரிக்கையாக கடலோர

பூரான் கடிதால் என்ன செய்வது ?

பூரான் கடிதால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
பூரான் கடிதால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின்

Nov 10, 2013

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் ஹையான் சூறாவளி:6 லட்சம் மக்கள் வெளியேற்றம்
ஹனாய்,நவ.11-

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதியில் ஹையான் என்ற கடும் சூறாவளி தாக்கியது.

மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளிக்கு லெய்ட் மாகாணத்தின் டாக்லோபான் நகரின் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. 2,22,000 மக்களை கொண்ட இந்நகரில் 100-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே இறந்து கிடந்தனர்.

மேலும் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால் உயிருக்காக பலர் போராடிக்

வெங்காய வைத்தியம்

வெங்காய வைத்தியம்

* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ¡ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்ட¡கும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் - 86.6%
புரதம் - 1.2%
கொழுப்புச்சத்து - 0.1%
நார்ச்சத்து - 0.6%
தாதுச்சத்து - 0.4%
கார்போஹைட்ரேட்டுகள் - 11.7%
வெங்காய வைத்தியம்
* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ்

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ் போன்ற கோப்பினை உருவாக்குவோமா?

இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
 

இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக 

1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

2. இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் பகுதியில் C:\WINDOWS\system32\shutdown.exe -r -t 00 என்பதனை இட்டு Next அலுத்துக.

3. பின் தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் இடத்தில் குறிப்பிட்ட கோப்புக்கு நீங்கள் விரும்பும் பெயரைஇட்டு Finish அலுத்துக.

 4. இனி நீங்கள் இட்ட பெயரில் Desktop இல் ஒரு Shortcut உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள். பின் அதனை Right Click செய்து Properties ஊடாக குறிப்பிட்ட கோப்புக்கு கவர்சிகரமான ஒரு Icon ஐ இடுக.

 அவ்வளவுதான்.

இனி அதனை யாரும் Double Click செய்தால் கணணி Restart ஆகும்.

#நன்றிபோன்ற கோப்பினை உருவாக்குவோமா?
கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ்

இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.


இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக

1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

2. இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் பகுதியில் C:\WINDOWS\system32\shutdown.exe -r -t 00 என்பதனை இட்டு Next அலுத்துக.

3. பின் தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் இடத்தில் குறிப்பிட்ட கோப்புக்கு நீங்கள் விரும்பும் பெயரைஇட்டு Finish அலுத்துக.

4. இனி நீங்கள் இட்ட பெயரில் Desktop இல் ஒரு Shortcut உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள். பின் அதனை Right Click செய்து Properties ஊடாக குறிப்பிட்ட கோப்புக்கு கவர்சிகரமான ஒரு Icon ஐ இடுக.

அவ்வளவுதான்.

இனி அதனை யாரும் Double Click செய்தால் கணணி Restart ஆகும்.

#நன்றி

ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்


ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10
ஜப்பானில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில்கள் நிறுத்தம்
ஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் புல்லட் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று காலை நில நடுக்கம ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோ உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
டோக்கியோவில் இருந்து ஜப்பானின் வடக்கு பகுதிக்கு புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நில நடுக்கம காரணமாக அந்த ரெயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் 2 சர்வதேச விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கின

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலி
மணிலா, நவ. 10–
பிலிப்பைன்ஸ் நாட்டில் 'ஹையான்' புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அதில் சமர், லிதே தீவுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 325 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
அதனால் பலத்த மழை கொட்டியது. கடலில் சுமார் 15 அடி முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. அதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
'ஹையான்' புயலின் கோர தாண்டவத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிதே தீவு கடும் பாதிப்புக்குள்ளானது. லிதே மாகாணத்தின் தலைநகர் தக்லோபான் நகரம் ஆக்ரோஷமான கடல் அலைகளால் கடும் சேதத்துக்கு ஆளானது.
இதனால் கடற்கரை ஓரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது தவிர வெள்ளப் பெருக்கில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் ஏராளமான வர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுவரை சுமார் 600 உடல்கள் மீட்கப்பட்டதால் 1000 பேர் பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. தற்போது தோண்ட தோண்ட பிணங்கள் வருவதால் சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவலை லிதே மாகாண கவர்னர் டொம்னிக்

Nov 9, 2013

காசியின் மறுமுகம் 2

http://www.youtube.com/v/wl4O2dg3txQ?version=3&autohide=1&autohide=1&showinfo=1&feature=share&autoplay=1&attribution_tag=QaIq4kDuv0BXaph_G0bkTQ

காசியின் மறுமுகம் - 1

http://www.youtube.com/v/Qf3NLel3Tl4?version=3&autohide=1&showinfo=1&attribution_tag=gT2ReTnSrk84JqkEVZ4nmQ&autoplay=1&autohide=1&feature=share

Nov 8, 2013

அபாய அறிகுறிகள்



அபாய அறிகுறிகள்



சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உண்டு. மற்ற நோய்களுக்கு அறிகுறிகள் வெளியே தெரியும். அவற்றை வைத்து குறிப்பிட்ட நோய் வ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆனால், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரியாது. இதனால், தங்களுக்கு நோய் இருப்பதையே பலரால் அறிந்துகொள்ள முடிவதில்லை.

நோயானது முற்றி உள் உறுப்புகளைப் பாதிக்கும் போதுதான் இதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அந்த நிலையில் சிகிச்சை எடுத்துகெபபண்டாலும் அதனால் பெரிய பலன்ள் கிடைப்பதில்லை. எனவே, ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. எந்தெந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என்தைப் பார்ப்போம்.
அதிகப்படியான தாகமும், சிறுநீர்ப் பெருக்கும்
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது சிறுநீரகத்தால் அனைத்து சர்க்கரையையும் வடிகட்டி முடிவதில்லை-. ரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரை தன்னுடன் நீர்ச்சத்தையும் கொண்டு செல்லும். இதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு அதிப்படியான தாகம் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறுநீர்ப் பெருக்கும் ஏற்படுகிறது. உடல் திசுக்களிலிருந்து சர்க்கரையால் நீர இழுத்துக் கொள்ளப்படுவதால்தான் அபரிதமான தாகம் ஏற்படுகிறது.

உடல் அசதியும், சோர்வும்:
உடலின் முக்கிய எரிபொருளாக விளங்குவது சர்க்கரை, ஆனால், அவை செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றப்படாத நிலையை சர்க்கரை நோய் உருவாகி விடுகிறது. செல்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போவதால் எப்போதும் களைப்ப்£கவும், சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்க நேரிடுகிறது.

குறை எடையும், மிகை எடையும்:
குளுக்கோஸ் இழப்பை ஈடுசெய்வதற்காக உடல் தொடர்ந்து போராடுவதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். சிலருக்கு இது எதிர்மாறாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டாலும் எடை குறையும். இந்தநிலை, டைப்&1 சர்க்கரை நோயின் போது பரவலாகக் காணப்படும்.

காயம் ஆறாத நிலை:
ரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருந்தால் இயல்பாக காயத்தை ஆற்றும் உடலின் தன்மையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இதனால், காயங்கள் எளிதில் ஆறாது. தவிர, திசுக்கள் மிகவும் மென்மையாக மாறிவிடுவதால் நோய்த் தொற்றும் அதிகரிக்கும். உடலில் இயல்பாகவே உள்ள குணப்படுத்தும் திறனை சர்க்கரை நோய் குறைத்துவிடுகிறது.நோய்த் தொற்றை எதிர்க்கும் சக்தியையும் தடைசெய்து விடுகிறது. இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப்பை, பிறப்புறுப்புப் பகுதிகளில் அவ்வப்போது நோய்த்தொற்று ஏற்படுவது சர்வ சாதாரணம். தோல் பகுதியிலும் கிருமிகள் எளிதில் தாக்குதல் நடத்தும். ஆண் & பெண் இருவருக்குமே பிறப்புறுப்புப் பகுதியில் கொப்புளங்கள் தோன்றும். சருமம் வறண்டு நமைச்சலுடன் இருக்கும்.

ஈறு மற்றும் பற்களில் ஏற்படும் பாதிப்பு:
ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை, வாயில் உள்ள ஈறுகளை வலுவிழக்கச் செய்து நோய் எதிர்ப்புத் திறனையும் குறைத்துவிடுகிறது. இதனால் ஈறுகளில் மட்டுமின்றி தாடை எலும்புகளிலும் நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு, மற்றும் சீழ் பிடித்தல், பற்கள் ஆடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.நாள்பட்ட சர்க்கரை நோயால் நரம்புகள் வலுவிழந்து போகும். இது எண்ணற்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிகமாகக் காணப்படும் அறிகுறிகளாக, கை கால்கள் மரத்துப்போவதையும், அந்தப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதையும் சொல்லலாம். இதனால் கால்களிலும், பாதங்களிலும், கைகளிலும் எரிவது போன்ற உணர்வு இருக்கும்.
உணவு செரிமானத்தைத் துரிதப்படுத்தும் நரம்புகள் சேதமடைவதால் எப்போதும் குமட்டல் உணர்வு, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை இருக்கும்.

கண் பிரச்னைகள்:
ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை, கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ்களின் ஹைட்ரேஷன்களைத் தாக்கி சேதப்படுத்திவிடுகின்றன. இதனால் பார்வைக் குவியம் தடைபடுகிறது. சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையைச் சரிப்படுத்திவிடலாம்.நாள்பட்ட சர்க்கரை நோய் இருந்தால் கண்களில் உள்ள நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நரம்புகளில் தோன்றும் ரத்த ஒழுக்கினால் எந்தஅறிகுறியும் தெரியாது என்றாலும், கண்களில் கருப்பு நிறப்புள்ளிகளும், சில சமயம் பார்வை இழப்பு ஏற்படும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் கிக்கலான பிரச்னைகள்
சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளா விட்டால் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைகின்றன. இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆணிவேர். ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், சரியான ரத்த ஓட்டம் உடல் உறுப்புளுக்குக் கிடைக்காமல் ஒவ்வோர் உறுப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. குறிப்பாக, சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலழிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு ரத்த நாள பாதிப்புகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.ரத்த நாளங்கள் பாதிப்படைவது ஒருபுறமிருக்க, ரத்தக் குழய்கள் சுருங்கிவிடும் பிரச்னையும் இந்த நோயால் உண்டாகிறது. பொதுவாக, சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில், இன்சுலின் சுரப்பு இருந்தாலும்கூட அது முழுமையாக வேலை செய்யாது. இதனால், கல்லீரலில் கொழுப்புச் சத்து பிரிக்கப்படும் செயல்பாட்டில் சிறிது சிறிதாகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, கெட்ட கொழுப்புகள் அப்படியே ரத்தத்தில் படிய ஆரம்பித்துவிடும்.

இந்தக் கொழுப்புகள், பற்களின் மீது படியும் மஞ்சள் நிறக் கறைகளைப் போல், ரத்தக் குழாய்களின் சுவரிலும் படிந்து, குழாய்களின் உள் சுற்றளவைக் குறைத்துவிடும். நாளடைவில் அந்த வழியே ரத்தப் போக்குவரத்து சரியாக நடக்காத அளவுக்கு ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும்.இவ்வாறு ரத்தக் குழாய்கள் சுருங்குவதால், அந்தக் குறுகிய பாதையின் வழியே ரத்தம் பாயும் போது ரத்த அழுத்தம் அதிகமாகும், இதயப் பிரச்னைகள் உருவாவதால் அடிக்கடி நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கும். சில சமயம் திடீரென மாரடைப்பும் வரலாம்.

காயம் ஏன் ஆறுவதில்லை?
பொதுவாக, இதயத்துக்கு அருகில் உள்ள உறுப்புகளில் காயம் பட்டால், அது கொஞ்சம் விரைவாக ஆறிவிடுவது உண்டு. ஆனால், இதயத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கால் பகுதியில் காயம் பட்டால் ஆறுவதற்குக் காலதாமதமாகும்.இதற்கு என்ன காரணம் என்றால், அதிக சர்க்கரையால் ரத்த நாளங்கள் சுருங்கிவிடுவதால், காலுக்கு சரியான ரத்த ஓட்டம் இருக்காது. இதயம் சுருங்கி விரியும் செயல்பாட்டினால் வெளியேறும் ரத்தம், நீண்ட தொலைவில் உள்ள கால்களுக்குப் பயணித்து அந்தப் பகுதியை முழுமையாக அடையாது.தவிர, காயம் பட்ட இடத்தில் அதிகமான சர்க்கரை இருக்கும். ஆனால், ரத்தத்தில் காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். குறிப்பாக, வெள்ளை அணுக்கள் சரிவர செயல்படாத நிலை உண்டாகிவிடும். இதனால்தான் இத்தகைய பிரச்னைகள் வருகின்றன.

காயம் ஆறாத பட்சத்தில் அதைச் சுற்றி சிவப்புப் புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். கிருமிகள் தொடர்ந்து அதன் வழியாகத் தொற்றுவதால் காயம் அழுகவும் ஆரம்பிக்கும். இதனால்தான் நோயாளிகளுக்குக் காலில் அடிபட்டால் விரைவில் ஆறுவதில்லை.இப்படிப்பட்ட பிரச்னைகள் வரக்கூடாது என்பதால்தான், சர்க்கரை நோயாளிகள் நகத்தைக் கூட ஒட்ட வெட்டக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். நகத்தை வெட்டப்போய், கொஞ்சம் சதையை வெட்டிக்கொண்டால்கூட அது ஆறாமல் புரையோடிப் போய்விடும். இறுதியில் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும்.

கால்களுக்கு ஏற்படும் பாதிப்பு:
காலின் நுனிப்பகுதியில் எரிவது போன்ற உணர்ச்சி, சுருக் சுருக் எனக் குத்தும் உணர்வு, உணர்ச்சியின்றி மரத்துப் போதல், தரையில் நடந்தாலும் பஞ்சின் மீது நடப்பது போன்ற உணர்வு போன்றவை இருக்கும். இந்த நிலைக்கு வந்துவிட்ட நோயாளிகளால், கால் இடறி கீழே விழுந்தாலோ அல்லது எதிலாவது இடித்துக் கொண்டாலோ கூட தாங்கள் காயப்படுவதை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.எனவே, நடக்கும்போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும். காலில் நகங்கள் வளர்ந்தால் மேலோட்டமாக வெட்டி எடுக்க வேண்டும். அதேசமயம், காலில் தசைகள் வர்ந்தால் அவற்றை நீங்களாக வெட்டியெடுக்காமல், மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
காலில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, கொசு, கரப்பான், எலி போன்றவை கடிக்க இடம் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இறுக்கமான, கால்களைக் கடிக்கும் காலணிகள் அவிதைத் தவிர்த்துவிடுங்கள். ரத்த நாளங்களைச் சுருங்கவைக்கும் புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றைத் தவிருங்கள்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, கூடுதலான குளுக்கோஸ் பொருளானது சக்தியாக மாற்றப்படாமல் 'சார்பிடால்’ என்ற வேதிப் பொருளாக மாறும். இது கால் நரம்புகளில் அதிகமாக இருக்குமானால் காலின் உணர்ச்சி குறையத் தொடங்கும். இரவில் படுக்கும்போது பாதத்தில் எரிச்சல், ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும். தவிர, தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.

கால்களில் உணர்ச்சி மாற்றங்கள் அவ்வப்போது வரும் நிலையிருந்தால் அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயால் சிறுநீரகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்
சர்க்கரை நோய் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் சுத்தரிக்கப்படும்போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவு புரதச் சத்து வெளியேறும். இதனால், உடலின் சமச்சீர் நிலை குறையும். இதை ஆரம்ப நிலையிலேயே மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை மூலமாகக் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.சிறுநீரில் புரதச் சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை ரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறி விடுவதால் உடல் பருத்தும், கை கால்கள் வீங்கியும் காணப்படும்.
கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட நபர், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, சிறுநீரகத்துக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது?
சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சர்க்கரை நோயின் காரணமாக கூடுதல் பணியைச் செய்யவேண்டியிருப்பதால் நாளடைவில் சிறுநீரகம் தளர்வடைந்து சரியாக சுத்திகரிப்புப் பணியைச் செய்ய இயலாது. தவிர, ரத்தத்தில் யூரியாவில் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகத்தில் உள்ள சிறுநீர் வடிக்கட்டிகள் அதைச் சரியாகச் சுத்திகரிக்காமல் விட்டுவிடுகின்றன. இதனால் கழிவுப் பொருள்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இந்த நிலையில்தான் நிறைய பேருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கிறது.

40 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயாலும், 20 சதவீதம் பேருக்கு மிகை ரத்த அழுத்தம் காரணமாகவும் நிரந்தரமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது.
ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்படாமல் இருந்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது தெரியும். தொடர்ந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதற்கு டயாலிசிஸ் செய்யவேண்டி இருக்கும்.இதனால்தான், சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்ததுமே, சிறுநீர்ப் பரிசோதனை செய்து 'ஆல்புமின் யூரியா’ என்ற புரதப் பொருள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
சிறுநீரில் ஆல்புமின் யூரியாவின் அளவு முப்பது மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும் பெறவேண்டும்.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரை:
கர்ப்பக் காலத்தில் பொதுவாக ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். தாயின் உடலில் ரத்த அளவும் அதிகரிக்கும். இந்த அளவை ஈடுசெய்வதற்காக அதிகமான இன்சுலினை கணையம் சுரக்க வேண்டியிருக்கும்.இந்தச் செயல்பாட்டில் குறைபாடு தோன்றி கணையம் போதுமான இன்சுனை சுரக்காவிட்டால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இவ்வாறுதான் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் தோன்றுகிறது. இதைப் பரிசோதனை செய்யாவிட்டால் தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாது. குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். கர்ப்பக் காலத்தில் சுமார் பதினேழு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.கருத்தரித்த காலத்தில் சர்க்கரை நோய் இருந்து குழந்தை பிறக்க நேரிட்டால் குறைப்பிரசவம், அதிக எடையுடன் குழந்தை பிறத்தல், பயிற்றிலோ அல்லது பிறந்த உடனோ குழந்தை இறந்துவிடுதல், பிறவியிலேயே ஊனமாகப் பிறத்தல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரைப் பரிசோதனை:
ஒவ்வொரு மாதமும் பெண்ணின் கருவளர்வதால் தாய்க்கு அதிக ஊட்டம் தேவைப்படுகிறது. ரத்த அளவும் அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கிறது-. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை என குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.குறிப்பாக, கர்ப்பம் தரித்த பதினாறாவது வாரம் (நான்காவது மாதம்), இருபத்து நான்காவது வாரம் (ஆறாவது மாதம்), முப்பத்திரண்டாவது வாரம் (எட்டாவது மாதம்) ஆகிய காலங்களில் கண்டிப்பாக ரத்தச் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் ஊசி மருந்து போடக் கூடாது என கூறப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இன்சுலின் ஊசி குழந்தைக்கு எந்தவித சோதத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், மாத்திரை எடுத்துக் கொள்வதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.கர்ப்பிணிப் பெண்களுக்கென எல்லா மருத்துவமனைகளிலும் உணவுத் திட்டம் இருக்கும். திட்டமிட்ட உணவு முறையால் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கலாம். இனிப்புப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடுவதைப்போல், உணவைப் பிரித்துக்கொண்டு சாப்பிட்டுப் பழக வேண்டும்.ஒரு குழந்தையைச் சுமக்கும்போது தாய்க்குச் சர்க்கரை நோய் இருந்தால், அடுத்த குழந்தையைச் சுமக்கும்போதும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.முதல் குழந்தையைச் சுமக்கும்போது சர்க்கரை இல்லாமல் இரண்டாவது குழந்தையைச் சுமக்கும்போது கூட சர்க்கரைப் பிரச்னை உண்டாகலாம். சில பெண்கள், பிரசவத்துக்குப் பிறகு உடல் நலன் மீது அக்கறை காட்டுவதில்லை. இதனால் உடற்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சர்க்கரை நோயுன் வந்துவிடுகிறது. ஆகவே, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் பிரச்னைகள் பற்றி விளக்கமாகப் பேசியாகிவிட்டது. இந்த நோய்க்கான காரணங்களையும், பரிசோதனை முறைகளையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...