Nov 18, 2013

நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்


இயற்கை வைத்தியம் என்று சொன்னால், அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது. அதிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், விரைவில் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதென்ன நிமோனியா என்று கேட்கலாம். நிமோனியா என்றால் நுரையீரலில் ஏற்படும் புண்ணாகும். இந்த புண்ணானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த நிமோனியா இருந்தால், கடுமையான காய்ச்சலுடன், தலை வலி, நெஞ்சு வலி, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம், தலை மற்றும் தொண்டை ஜில்லென்று இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்று வலி போன்றவை கூட ஏற்படும். இவற்றை சரியாக குணப்படுத்தாவிட்டால், வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டால், நோயில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இப்போது இந்த நிமோனியாவை குணப்படுத்துவதற்கான சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

Nov 17, 2013

தென் கொரியாவில் பயங்கரம் : அபார்ட்மென்ட் மீது ஹெலிகாப்டர் மோதி 2 விமானி சாவு



சியோல்: தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம், ஊழியர்களை அழைத்து செல்ல ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. கங்னாம் மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் ஐடி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 38 மாடிகளை கொண்ட சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றும் உள்ளது. நேற்று ஊழியர்களை அழைக்க ஹெலிகாப்டர் சென்றது. மார்க்கெட் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக அதன் இறக்கைகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது உரசியதில் கட்டிடங்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பயங்கர சத்தம் கேட்டு வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் இறக்கைகள் சேதம் அடைந்து ஹெலிகாப்டர் அப்படியே விழுந்து நொறுங்கியது.
\
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து மீட்பு படை அதிகாரி சா யங் கூறுகையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானி பார்க் இன் க்யூ (57) என்பவரும், அவரது 36 வயது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அதிர்ஷ்டவசமாக அபார்ட்மென்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

ஏலக்காய்

ஏலக்யில் இவ்ளோ இருக்கா?

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுத
ஏலக்காய்
. ல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!


பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும்

Nov 16, 2013

கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!


''டம்பு அனலாக் கொதிக்குது... தொண்டையில எச்சில்கூட விழுங்க முடியலை. அதுக்கு ஏதாவது மாத்திரை கொடுங்க'' - இன்று மருந்துக்கடையில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள் இவை. டாக்டரைப் பார்க்க டோக்கன் வாங்கி, மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டும். கன்சல்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் நூறோ, இருநூறோ மருத்துவருக்கு அழ வேண்டும். அவர் நான்கு - ஐந்து நாட்களுக்கு எழுதித் தரும் மருந்தை, மொத்தமாக வாங்கவேண்டும் என்பதால், பலரும் மருத்துவரை அணுகுவதற்குப் பதில் நேராகப் போய் நிற்கும் இடம் மருந்துக் கடை. நன்கு படித்தவர்களோ, இன்டர்நெட்டில் இந்த

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சில சிறப்பான வழிகள்



உற்சாகமில்லாதது போல உணர்கிறீர்களா? வழக்கமான பாதையிலிருந்து விலகியது போல உணர்கிறீர்களா? சருமப் பிரச்சனைகள், தலைவலி, உடல் வலிகள் அல்லது செரிமானக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? அப்படியெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்று பொருள். மேலும் இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம்.
இதற்கு ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் சீன மருத்துவ முறை உள்பட உலகமெங்கும் பல

குளிப்பதனப் பெட்டிகளில் தவிற்கப்பட வேண்டிய பொருட்கள்

குளிப்பதனப் பெட்டிகளில் தவிற்கப்பட வேண்டிய பொருட்கள்

எல்லா வீடுகளிலுமே பரவலாக குளிர்பதனப் பெட்டிகளை பயன்படுத்தி நாம் சமைக்க பயன்படும் மற்றும் சமைத்த பொருட்களை வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல…..

மேலும் தகவலை முழுமையாக படிக்க :
http://indru.todayindia.info/avoid-items-to-bridger-boxes/
எல்லா வீடுகளிலுமே பரவலாக குளிர்பதனப் பெட்டிகளை பயன்படுத்தி நாம் சமைக்க பயன்படும் மற்றும் சமைத்த பொருட்களை வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அந்தளவிற்கு தவிற்கபடவேண்டிய பொருட்களுக்கும் உள்ளன. இதனை யாரும் பரவலாக உணருவதில்லை.
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில்

போட்டோஷாப்பில் அருமையான Border Effect..!

போட்டோஷாப்பில் அருமையான Border Effect..!


வணக்கம் நண்பர்களே..!

போட்டோஷாப்பில் படங்களுக்கு பல வகைகளில் பார்டர் அமைக்கலாம். எத்தனையோ முறைகள் உண்டு. 

இந்த பாடத்தில் எளிமையான படங்களுக்கு பார்டர் எஃபக்ட் கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம். 

முதலில் தேவையான படத்தை Photoshop CS3 மென்பொருளில் திறந்துகொள்ளுங்கள். 

ரிலாக்ஸ் ப்ளீஸ்


நீங்கள் விரும்பாத அல்லது பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?

இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது

இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு administrator கணக்கினூடாக உள் நுழைந்து கொள்ளுங்கள் பின் உங்கள் My Computer இல் உள்ள C டிரைவினுள் சென்று
1. Windows போல்டரை திறந்து அதனுள் இருக்கும் System 32 என்ற போல்டரை திறவுங்கள்
2. பின் அதனுள் உள்ள drivers என்ற போல்டரை திறந்து கொள்ளுங்கள்.
3. இறுதியாக அதனுள் உள்ள etcஎன்ற பெயரில் அமைந்த போல்டரை திறவுங்கள்.
4. அங்குள்ள hosts என்ற பைலை இரட்டைக் கிளிக் செய்து திறவுங்கள்
5. அப்போது Open With என்ற விண்டோ கிடைக்கும். அதில் Netpad ஐத் தெரிவு செய்து Ok பட்டனை அழுத்துங்கள்

6. இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள இந்த hosts பைல் தான் உங்கள் கணனிக்கான இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் ஆளுகை செய்கிறது இதில் சில மாற்றங்கள் செய்து விட்டால் நான் மேற்சொன்ன மாதிரி இணையப் பக்கங்களை தடுத்து விடலாம்

அந்த பைலின் இறுதி வரி 127.0.0.1 localhost என்று இருக்கும். இந்த வரி முடிகின்ற இடத்தில் Curser ஐ வைத்து Enter கீயை அழுத்தி அதாவது அடுத்த வரிக்கு கீழ் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்
உதாரணமாக நீங்கள் யூ டியூப் (youtube) தளத்தை தடை செய்ய நினைத்தால் 127.0.0.1 இதன் பிறகு ஒரு இடைவெளி விட்டு www.youtube.com. என்று தட்டச்சு செய்ய வேண்டும்

அதாவது 127.0.0.1 www.youtube.com இவ்வாறு அமையும்.

பின் இதனோடு சேர்த்து facebook தளத்தை Block செய்ய நினைத்தால் அதன் கீழ் 127.0.0.1 www.facebook.com இவ்வாறு அமையும்.

127.0.0.1 localhost
127.0.0.1 www.youtube.com
127.0.0.1 www.facebook.com

இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி save செய்துவிட்டு வெளியேறுங்கள். இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணைய தளங்களின் Widgets கூட வேலை செய்யாது. முயற்சித்து பாருங்கள்..


தகவல் - ஐ.டி கார்னர்.


 ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz.நீங்கள் விரும்பாத அல்லது பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?

இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது

இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு administrator கணக்கினூடாக உள் நுழைந்து கொள்ளுங்கள் பின் உங்கள் My Computer இல் உள்ள C டிரைவினுள் சென்று

1. Windows போல்டரை திறந்து அதனுள் இருக்கும் System 32 என்ற போல்டரை திறவுங்கள்

Nov 15, 2013

இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது

Nov 14, 2013

உலக நீரிழிவு நோய் தினம்!

இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்’ நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,
''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை செய்தார்.
வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!

உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்’ என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி... இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில் இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம். மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.
துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.
உணவு... உஷார்!
தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
குறைக்க வேண்டியவை: தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக் கொள்ளலாம்.
எடுக்க வேண்டியவை: ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு, எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச் சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.
சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள் ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்... இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம் சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...