Oct 27, 2012

சுகயீன சம்பளம் பெறும் 3000 பேர் அதை இழக்கும் நிலையில்


October 27, 2012

டென்மார்க்கில் உழைப்பாளிகளாக இருப்போர் பல்லாயிரக்கணக்கானவர் தமது உடலை வருத்தி உழைப்பதால் வருடந்தோறும் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இவர்களுக்கான சுகயீனக்கால சம்பளம் வழங்கும் காலம் வெறும் 52 வாரங்கள் மட்டுமே, இக்காலப் பகுதியை முடித்தவர்களில் சுமார் 3000 இருந்து 3500 பேர் மறுபடியும் வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
சுகயீன லீவு பெறுவோருக்கு சம்பளம் வழங்குவதற்காக பில்லியன் கணக்கில்
பணத்தை இறைப்பதால் இந்தக் காலப்பகுதியை மேலும் நீட்டிப்பு செய்ய முடியாது என்று அரசு பிடிவாதமாக இருப்பதல் பலருடைய அடுத்தமாத சம்பளம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவருடைய சுகயீனத்தை 52 வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர்களை சுகயீனத்துடன் வேலைக்கு அனுப்புவதும் என்படி…?
வெறும் இரும்புச் சட்டங்களால் இயலாத மனிதர்களை எப்படி நெருக்குவது..?
அரசின் முடிவு தவறானது என்று பலர் கருத்துரைத்துள்ளனர் அவர்களில் ஒப்போ பல்கலைக்கழக பேராசிரியர் கெனிங் யொகான்சனும் அடக்கம்.
டவ் பெங்க எடுப்போர் அதை இழப்பதைப் போல சுய் டவ்பெங்க எடுப்போர் நிலையும் சிக்கலான இடத்திற்குள் நுழைந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...