Oct 20, 2012

நித்தியானந்தா நீக்கப்பட்டது இறைவனின் செயல்! - மதுரை ஆதீனம்
[Saturday, 2012-10-20
News Service மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை நீக்கியது குறித்து வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியது:கடந்த ஏப்ரலில் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தோம். அவரை தற்போது அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்.
  
சைவ மெய்யன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், தமிழக அரசு, நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு இணங்கவும் அவரை பதவியில் இருந்து
நீக்கம் செய்துள்ளோம். இது இறைவனின் செயலே. நீக்கப்பட்டது குறித்து, நித்யானந்தாவிடம் தெரிவிக்க, அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. நித்யானந்தா எனது சீடராக இருந்துள்ளார். ஆகவே, என்னை மிரட்டமாட்டார்.
அவராக பதவியை ராஜிநாமா செய்ய இருந்தார். ஆனால், வழக்கு நிலுவையில் இருப்பதால் ராஜிநாமா செய்ய வேண்டாம் என அவரது வழக்குரைஞர்கள் ஆலோசனை கூறியதால், அந்த முடிவை எடுக்கவில்லை. நேரம் வரும்போது, தமிழக முதல்வரை சந்திப்பேன். நித்யானந்தாவின் நீக்கம் இறைவனின் சித்தபடி நடந்துள்ளதால், இது நிரந்தரமானது. வேறுவழியில்லாத நிலையில் அவரை இளைய ஆதீனமாக நியமித்தோம். இப்போதைய சூழ்நிலை காரணமாக அவரை நீக்கியுள்ளோம். ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல திறந்திருக்கும். அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...