Nov 28, 2012

ஜப்பானில் பனிப்புயல்: 40 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின



ஜப்பானில் கடும் பனி புயல் வீசியதால் மின்கம்பிகள் பலத்த சேதமடைந்ததுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கின.பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள ஹொகைடா தொழில்நகரில் முரோரன் பகுதியில் மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. சாலை முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...