Dec 8, 2012

ஆச்சரியம் தரும் அழகு

* பண்டிகைக் காலத்தில் பளிச்சென தெரிய, அடர்த்தியான `மேக்-அப்’ போட்டு விடக்கூடாது. இயல்பாக `லைட்டாக’ போடப்படும் அலங்காரம் தான் நேர்த்தியாக இருக்கும். பவுண்ட்டேஷன் லைட்டாக போடுங்கள். பவுண்ட்டேஷன் போடும் போது காதுகளையும், கழுத்தையும் மறந்து விடாமல் அவைகளையும் மேக்-அப் மூலம் சரிசெய்யுங்கள்.
* லிப்ஸ்டிக் கொஞ்சமாக போடுங்கள். பெரிய உதடுகளாக இருந்தால், உதடுகளின் உள்புறத் தில் மேல் நோக்கி `லிப் லைனர்’ மூலம் வரை யுங்கள். லைனரின் வெளிப்பகுதி கறுப்பாகத் தெரிந்தால் பவுண்டேஷனோ, கண்சீலரோ பூசுங்கள்.
* கண்களில் காஜல் ஸ்டிக் மூலம் வரையுங் கள். ஸ்டிக்கில் கண்மை படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஐ லைனர் போட விரும்பு கிறவர்கள் மேல் கண் இமையில் மிக மெலிதாக வரைந்துகொள்ளவேண்டும்.
* பண்டிகை காலங்களில் பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடிக்கொள்கிறார்கள். புடவை கட்டி இந்த பூக்களை வைத்துக்கொள்ளும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டால் நன்றாக இருக்கும். குளிக்கும்போது ஷாம்பு போட்டு, கண்டிஷனரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது கூந்தல் சில்க்கியாக, தனித்தனியாகத் தெரியும்.
* முகத்தில் புள்ளி, படை போன்று தெரியும் பெண்கள் பண்டிகைகால அழகுக்காக சில நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். முகத்தில் புள்ளிகள், படைகளை போக்க சில வகை அழகு சிகிச்சைகளை அவர்கள் செய்துகொள்ளவேண்டும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் மேக்-அப்பை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தமான `பேஸ் வாஷை’ தேர்ந்தெடுக்கவேண்டும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலைமாவுடன், பாலாடையைக் கலந்து முகத்தில் பூசவேண்டும். பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தயிரை பஞ்சில் முக்கி முகத்தில் பூசி கழுவவேண்டும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...