Jun 22, 2012

அருகம்புல் கஷாயம்---சமையல் குறிப்புகள்



தேவையான பொருட்கள்...
 
அருகம்புல் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
 மஞ்சள், இஞ்சி - சிறிதளவு
 
செய்முறை....
 
• அருகம்புல்லை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
 
• மேலே சொன்ன பொருட்களை எல்லாம் நன்கு இடித்து மண்சட்டியில் போட்டு அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
 
• தண்ணீர் நன்கு வற்றி ஒரு பங்காக வற்ற வைத்து பருகவும். இந்த கஷாயத்தை சூடாகவும் பருகலாம், ஆற வைத்தும் பருகலாம்.
 
பலன்:

இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். ஒருசில உணவுகளால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சில கெடுதல்களும் நேரும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் கஷாயம் பருகினால் அந்த கெடுதல்கள் உடலில் தங்காது. ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் நோய்கள் வருவதையும் இந்த கஷாயம் தடுக்கும். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...