May 1, 2013

வேலணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேலணை
Gislanka locator.svg
Red pog.svg
வேலணை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.685° N 79.908° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

பொருளடக்கம்

பெயர் வரலாறு

வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது[1]. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.[1] [2]. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்நாட்டு இளவரசன் வந்து தரையிறங்கி இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார்.[3]

புவியியல் அமைவிடம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைக் கிராமத்தின் அமைவிடம்
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்மானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம் ஆகும்.

வானிலையும் காலநிலையும்

வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலையுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியில் இருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும்.

வரலாற்று குறிப்புக்கள்

வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்தக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தன.
மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று என்று கருதப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்து பழமையான பத்திரங்களில் இருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன[2].

சமூகப்பிரிவுகள்

அரசியல்

அரசியல் தலைவர்கள்

பொருளாதாரம்

வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்தும் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தில் பெரும் பங்குவகிக்கின்றது.

மக்கள் வாழ்க்கை முறை

மக்கள் தொகை

கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள்

வேலணை வங்களாவடி முருகன் கோயில்
  • வங்களாவடி முருகன் கோவில்
  • சிற்பனை முருகன் ஆலயம்
  • வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோயில்
  • வேலணை துறையூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
  • ஆலயம்புலம் கந்தபுராண மரம்
  • தோபுரத்தடி ஞானவைரவர் கோவில்
  • செம்மணத்தி நாச்சியார் ஆலயம்
  • அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
  • தெம்பக்குளம் நால்வர் மடம்
  • தனித்திரு அன்னம்
  • வேலணை மேற்கு பெரியபுலம் மாககணபதிப் பிள்ளையார் ஆலயம்
  • வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
  • பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில்
  • வேலணை துறையூலட இலந்தை ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்
  • மயிலைப்புலம் ஐயனார் ஆலயம்
  • செட்டிப்புலம் காளவாய்த்துரை ஐயனார் ஆலயம்
  • சாட்டி சித்தாத்திரை மாதா கோவில்
  • வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம்

பாடசாலைகள்

துணை நூல்கள்

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமேகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். டொரண்டோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

குறிப்புகள்

  1. 1.0 1.1 இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு வெளியீட்டாண்டு-1989
  2. 2.0 2.1 மாணிக்கவாசகர், ச, வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் வெளியீட்டாண்டு-2006, வெளியீட்டாளர்-வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை
  3. மீ.ப.சோமு, வெண்ணிலவுப் பெண்ணரசி பதிப்பு:சென்னை,பாரி நிலையம், 1967

வெளி இணைப்புகள்

  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்
  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்
  • www.velanai.com - வேலணை மக்கள் ஒன்றியம்
  • www.velanaieast.com - வேலனை பெருங்குளம் முத்துகுமாரி அம்மன் ஆலயம் வேலனை
  • www.velanaicentralcollege.com -வேலணை மத்திய மகா வித்தியாலயம்
  • www.velanaimahakanapathi.com -வேலணை மகாகணபதிப்பிள்ளையார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...