Aug 31, 2012

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.9 பதிவு

மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கேபு, லித்தே மற்றும் புக்கிட்னான் ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், பெலாவு, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சாலமன் தீவு, ரஷ்யா, நவ்ரு உள்ளிட்ட பகுதிகளிலும் இருக்கும் என தெரிகிறது.

Aug 30, 2012

சகலரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்- இப்பவே நோட் பண்ணுங்க!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி

Aug 29, 2012

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி

அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்


நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்


அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ

கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்




உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப்​பு



ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலாரி பார்ட் ஸ்மித் கூறுகையில், ரோபோக்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோவானது எதிர்காலத்தில் கடலடி ஆராய்ச்சிகள் பலவற்றிலும் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.6100 கோடியில் ரெடியாகிறது விண்வெளி டாக்சி: நாசா


நாசா: விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் ‘ஸ்பேஸ் டாக்சி’ தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு நாசா ஆய்வு நிறுவனம் ரூ.6,100 கோடி வழங்கியிருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ 35 ஆண்டுகளாக விண்வெளிக்கு விண்கலங்களை இயக்கி வருகிறது. என்டர்பிரைஸ், கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டேவர் ஆகிய விண்கலங்கள் இயக்கப்பட்டு வந்தன. விண்வெளிக்கு செல்லும்போது ராக்கெட் போல இயக்கப்படும். விமானம் போல

அமெரிக்காவை மையம் கொண்டுள்ள "ஐசக்' புயல்

ஹூஸ்டன்: அமெரிக்காவை மையம் கொண்டுள்ள, ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் , ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, 130 கி.மீ.,வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, கத்ரினா புயல் தாக்கியதில், நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில், 18 ஆயிரம் பேர் பலியாயினர். கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். லூசியானாவின் கவர்னரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடும் சூறாவளியால், மின் இணைப்புகள், துண்டிக்கப்பட்டுள்ளன; இதனால், லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரஷியாவின் கடற்பரப்பின் அடியில் காணப்படும் அபூர்வ ஜெல்லி மீனினம்



நம் உடலைப் பற்றிய உண்மைகள்

Photo: நம் உடலைப் பற்றிய உண்மைகள்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
 
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
 
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
 
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
 
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
 
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
 
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
 
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
 
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
 
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
 
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
 
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
 
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
 
நமது மூளை 80% நீரால் ஆனது.
 
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
 
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
 
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
 
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
 
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
 
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்
 
Thanks Engr.Sulthan


குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...