Aug 29, 2012

அமெரிக்காவை மையம் கொண்டுள்ள "ஐசக்' புயல்

ஹூஸ்டன்: அமெரிக்காவை மையம் கொண்டுள்ள, ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் , ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, 130 கி.மீ.,வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, கத்ரினா புயல் தாக்கியதில், நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில், 18 ஆயிரம் பேர் பலியாயினர். கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். லூசியானாவின் கவர்னரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடும் சூறாவளியால், மின் இணைப்புகள், துண்டிக்கப்பட்டுள்ளன; இதனால், லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...