Sep 2, 2012

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?
இருதயத்தில் ஒட்டை என்பது, பிறவியில் இருந்து ஏற்படும் வியாதி. இது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இருக்கலாம். இது தவிர எந்த இடத்தில் ஓட்டை, மேலிரண்டு அல்லது கீழிரண்டு பாகங்களுக்கிடையே இருந்தால் ஆபரேசன் மூலமோ அல்லது ஞிணிக்ஷிமிசிணி சிலிளிஷிஹிஸிணி  முறையிலோ எளிதில் சரி செய்யலாம். ஆனால் வேறு முக்கிய இடங்களில் இருந்தாலோ அல்லது ஓட்டையுடன் வேறு கோளாறுகள் இருந்தாலோ, கடினமான ஆபரேசன் தேவைப்படும். இந்த ஓட்டையால், நுரையீரலில் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால் நோயாளி ஆபரேசன் செய்யும், கட்டத்தை தாண்டிவிட்டார் என்று அர்த்தம். எனவே, நோயாளிக்கு எந்த இடத்தில், எந்தளவு ஓட்டை உள்ளது என்பதை பொறுத்தே, சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

ஆரோக்கியமான இருதயம்! ஆரோக்கியமான வீடு!


கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்றால் என்ன?
நமது உடலில், சவ்வு போல் உள்ள ஒரு படலம் கொழுப்புச் சத்து ஆகும்.
அதிக கொழுப்புச் சத்து இருதயத்துக்குக் கேடு. ஏன்?
நம் உடலுக்குத் தேவையான சராசரி 1500 மில்லிகிராம் கொழுப்பை, நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்கிறது. சுமார், 200 - 500 மில்லிகிராம் கொழுப்பு, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைப்பதால், உடலில் கொழுப்புச் சத்தின் அளவு கூடுகிறது. நாளடைவில் இந்தக் கூடுதல் கொழுப்பு, நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் படிந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.
உங்களுடைய உடலில் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்று சோதித்தது உண்டா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா?

நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள்.
அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன்.
'ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன்.

இருதய நோயாளியின் வாழ்நாள் நீடிக்க வழி வகுக்கும் நவீன மருத்துவம்

இன்று சர்வதேச நோயாளர் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization) பிரகடனப்படு த்தியுள்ளது.
ஏலவே இன்றைய காலகட்டத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் நடைபெற்று வருகின்ற இருதய நோய் தொடர்பான கிளினிக்கிற்கு (Clinic) செல்கின்ற நோயாளர் பற்றியும், இருதயத்தின் (Heart) இயல்பான இயக்கம், அது பழுதடைவதற்கான காரணம், இதனால் உடலுக்கு என்ன நேரிடுகின்றது, இதற்குரிய மருத்துவம் யாது? இருதயக் கோளாறுகளை அறிய உதவும் சோதனைகள், இருதய அறுவை சிகிச்சையின் (Operation) போது உபயோகிக்கப்படுகின்ற திசுக்கள் என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. இவ்வுலகில் ஒருவர் எவ்வளவு செல்வச் செழிப்புடன் குபேரனாக வாழ்ந்தாலும் நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறுவாராயின் களிப்புடன் வாழ இயலாது என்பது நிதர்சனமாகும்.

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க


இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. 
இந்த இரத்த அழுத்த நோய்  எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.  இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.  இந்த இரத்த

இருதய நோயின் அறிகுறிகள்


உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது இரத்த ஓட்டம். இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இரத்தத்தை சுத்திகரிப்பதில் இருதயம் முக்கியப் பங்காற்றுகிறது.
சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருதயத்தின் இரத்த ஓட்டமானது, அதன் தமனி மற்றும் இரத்தநாளங்களின் தன்மையைப் பொருத்து சீராக அமையும்.
வயதானவர்களுக்கு இருதயம் தடிப்பாகவும் கால்ஷியம் படிவம் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுவது இயல்பு.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.

பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்.


 

சமீப ஆண்டுகளாக இருதய நோய் தாக்குதலால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படின் ஆண்களைவிட (46%) பெண்களுக்குத் தான் அதிகமாக (52%) ஏற்படுகின்றது என்று அமெரிக்க இருதய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக ஆண்களுக்கு இருதய நோய் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது என்றும், பெண்களுக்கு வயது முதிர்ந்த பருவத்தில் தான் ஏற்படுகின்றது என்ற கருத்து நிலவினாலும், அமெரிக்கரின் தற்போதுள்ள கணக்குப்படி, பெண்களுக்கும் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்ற காரணத்தால் இந்நோய் தாக்கத்தைத்தடுத்து பெண்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளனர்.

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு!!! பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும். ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது. இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு

பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.

இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை


நான் கடந்த 10.11.2011அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன்.  இடது  தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது.  உடல் முழுக்க வேர்த்த்து.  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம்.  அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார்.  நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம்.  காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம்.  (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours).  அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார்.  நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும். 

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்
 மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர்,

இருதய ரத்தக்குழாய் நோய் ஓர் அறிமுகம்!



இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று நம்மில் பலர் அறிந்திருப்போம்,
ஆனால் இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள், கரோனரி ஆர்டெரி டிஸீஸ் என்றும், மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன், இஸ்கீமியா என்றெல்லாம் இருதய நோய்களை குறிப்பிடுவார்கள். இவை எல்லாம் ஒன்றுதானா? அல்லது இதில் எது அபாயகரமானது போன்ற நுணுக்கமான விவரங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இருதய மற்றும் ரத்தக் குழாய்கள் தொடர்பாக எண்ணிலடங்கா மருத்துவ பெயர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றில் அடிப்படையான சில பதங்களுக்கு விளக்கம் கிடைத்தாலே போதுமானது அல்லவா? மருத்துவரை நீங்கள் அணுகும்போது கீழ் வரும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இருதய ரத்தக்குழாய் நோய்
கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்ற இருதய ரத்தக் குழாய் நோய் என்பது மிகவும் பரந்து பட்ட ஒரு பதம். இதன் பெயர் ஒரு குறிப்பிட்ட நோய் நிலைமையை குறிப்பிடுவதாக இருந்தாலும் சில பல நோய்களின் தொகுப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...