Nov 7, 2012

விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்


[ செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012,
புதிய முறையில் இயங்கி எதிர்பாராத வசதிகளை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விண்டோஸ் 8.குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக்கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் போன்றவற்றை விடுத்து மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.
Antivirus
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆன்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது.
Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கணனியை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
Battery Back up, Speed Boot up
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெர்சனல் கணனிகள் மிக வேகமாக Boot ஆகும்படி

ரோம்னி உருக்கம் ஒபாமாவை வாழ்த்துகிறேன்



பாஸ்டன் : அமெரிக்காவை வழி நடத்துவதில் ஒபாமா வெற்றி பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தேர்தலில் தோற்ற மிட் ரோம்னி உருக்கமாக பேசினார்.
தேர்தல் தோல்வியை ஏற்று கொண்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பாஸ்டன் நகரில் தனது ஆதரவாளர்களிடையே பேசியதாவது:

அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசி, அவருக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பிரசாரத்தில் தேவையான

மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி



மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி
நகரி, நவ.7-

இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி

மீண்டும் அதிபரானார் ஒபாமா : மக்களுக்கு நன்றி தெரிவித்தார்


அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை தோற்கடித்து, பராக் ஒபாமா 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், அமெரிக்க அதிபராகத் தேர்வாக தேவையான 270 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், ஒபாமா 303 வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஒபாமா, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 201 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
மிட் ரோம்னிக்கும், பராக் ஒபாமாவுக்கும் இடையே கடினமான போட்டி நிலவி வந்த நிலையில், ரோம்னியை விட சுமார் 100 வாக்குகளை அதிகம் பெற்று ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்துள்ள நாட்டு மக்களுக்கு இணையதளம் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையான தன்னை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்ததற்கு நன்றி. இன்னும் 4 ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

Nov 6, 2012

விரைவில் சீன அதிபராகும் ஜி ஜின்பாங்.. என்ன நடக்கும்?



 China S Mystery Princeling Xi Jiping Takes Top Spot பெய்ஜிங்: சீனாவின் புதிய அதிபராக பொறுப்பேற்கக் கூடிய துணை அதிபர் ஜி ஜின்பாங் எப்படியான கொள்கைகளைக் கொண்டவர் என்பது பற்றிய தகவல்களை அப்படி ஒரு பரம ரகசியமாக காத்து வருகிறது சீனா கம்யூனிஸ்ட் கட்சி!
சீனாவின் தற்போதைய அதிபர் ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய நிலையில் 59 வயதான ஜி ஜின்பாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராக்கும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்?
nasa_6 சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
புளோரிடா:பூமிக்கு மேலே சுற்றிவரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்.,)தொலைநோக்கி உதவியில்லாமல், வெறும் கண்ணால் பார்க்க, “நாசா’ ஏற்பாடு செய்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகள் ஒன்றிணைந்து, பூமிக்கு மேல், 410 கி. மீ.,உயரத்தில்,
வாஷிங்டன்: அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின்,

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு துவங்கியது

வாக்களிப்பு ஆரம்பித்துள்ளதுஅமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக அதிகமான பிரச்சார செலவுகளுடன் நடக்கின்ற அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு ஆரம்பித்துள்ளது.
மாதக்கணக்கில் பிரச்சாரங்கள் நடந்திருந்த நிலையில், இருவேட்பாளர்களுக்கும் இடையே ஆதரவில் சற்றுதான் வித்தியாசம் என்று கருத்துக் கணிப்புகள் காட்ட போட்டி மிகக் கடுமையாகவுள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பெரும்பாலும் இதற்கு முன்பு இல்லாத ஒரு நடைமுறையாக முக்கிய மாகாணங்களான ஒஹையோ மற்றும் பென்சில்வேனியாவில் வாக்காளர்கள் மத்தியில் தோன்றினார்.
அதிபர் ஒபாமா இயோவா மாகாணத்தில் நேற்று திங்களன்று நடந்த தேர்தல்

ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்


ஆஸ்திரேலியாவின் உயரிய விருது பெற்றார் சச்சின் டெண்டுல்கர்புதுடெல்லி, நவ. 6-


உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.


இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.

Nov 4, 2012

இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா



இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா
சனிக்கிழமை, 03 நவம்பர் 2012
சீனா சமீபகாலமாக தனது இராணுவத்தில் அதிநவீன தொழில் நுட்பங்களை புகுத்தி வருகிறது.ஏற்கனவே ஜெ-20 என்ற ரக ஜெட் போர் விமானத்தை ஏராளமாக தயாரித்து வைத்துள்ளது சீனா.
தற்போது ஜெ-31 என்ற புதிய நவீன போர் விமானத்தை தயாரித்து உள்ளது. இதன் வெள்ளோட்டம் வடகிழக்கு பகுதி மாகாணமான லியான்னிங் பகுதியில் நடந்ததாக ஆசிய பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் சீனா இராணுவ பலத்தில் உயரிடத்தை பெற்றிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையே இல்லாமல் 3 வருடம் வாழ்ந்து வந்த அதிசய சிறுவன் திடீர் மரணம்


[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
அமெரிக்காவில் கொலரடோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளை இல்லாமல் பிறந்த சிறுவன் நேற்று உயிரிழந்தான்.கொலரடோவைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையின் பெயர் நிகோலஸ் கோக்.
இவனுக்கு தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகள் பிறந்த ஒரு சில நொடிகளிலேயே மரணித்துவிடும். ஆனால், அந்த விதியை உடைத்து நிகோலஸ் கோக் வாழ்ந்து வந்தான்.
எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக ஏராளமான மாத்திரைகளை உணவை விட அதிகமாக சாப்பிட்டு வந்தான்.
இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவனது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...