Feb 16, 2013

63 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்!





  • 28
     
bullet trainஇந்தியாவில் பெரும் பொருட்செலவில் முக்கியமான ரயில் பாதைகளில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இந்த திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு தந்து தேவையான பரிந்துரைகளை அளிக்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் முக்கிய பாதைகளாக 7 தடங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டது. பட்டியலிடப்பட்ட தடங்களில் டெல்லி-ஆக்ரா-பாட்னா, ஹௌரா – ஹால்டியா, சென்னை-பெங்களூர்-திருவனந்தபுரம், மும்பை

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்

எரிகற்களால் தாக்கப்பட்ட ரஷ்யா - 1100 பேர் காயமுற்ற சம்பவம் நடந்தது எப்படி?- புதிய தகவல்கள்!
[Saturday, 2013-02-16
News Service ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 285 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
  
அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!

தப்பியது பூமி - இராட்சத விண்கல் சுமாத்ரா அருகே கடந்து சென்றது!
[Saturday, 2013-02-16
News Service கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். இதுகுறித்து சர்வதேச விஞ்ஞானிகள் கூறியதாவது: பெரிய மலை போன்ற 150 அடி அளவுள்ள விண்கல் சுமத்ரா தீவு அருகே நேற்று இரவு 27,357 கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது. இது சில செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் கடந்தது. எனினும் இந்த விண்கல் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

Feb 15, 2013

BlackBerry இன் கலக்கல் ஆரம்பம்! அப்பிள் யுகத்துக்கு முடிவு கட்டுமா..?





  • 51
     

blackberry10பிரிட்டன், கனடாவில் கலக்கி வரும் BlackBerry Z10 ஸ்மார்ட்போன், இந்த வகையறாவின் போன்களில் தொழில்நுட்ப மேம்பாட்ட அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக இதனை பயன்படுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் ஐ-போன், ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான செல்போன்கள் பிளாக்பெரிக்கு பெரும் சோதனைகளை கொடுத்து வந்தது. ஆனாலும் பிளாக்பெரியின் மெசஞ்சர் சேவைகளை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்றே கருதப்படுகிறது. அதுவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டமுடன் பிளாக்பெரி ஸ்மார் போன் போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.
Z10 பிளாஅக் பெரியின் முக்கிய அம்சங்கள் இதோ:
வன்பொருள் (ஹார்டுவேர்):
1. 4.2 இன்ச் டிஸ்பிளே
2. 1280 க்ஷ் 768 ரிசொல்யூஷன்
3. இன்ச்சிற்கு 365 பிக்சல்கள் கோண்ட திரை அடர்த்தி.
4. டியூயல் கோர், 1.5GHழ் புராசசர், 2ஜிபி RAM
5. 8 மெகா பிக்சல் கேமரா (பின்புறம்), 2 மெகா பிக்சல் முன்புற கேமரா
6. 16ஜிபி ஸ்டோரேஜ், ப்ளூஉடூத், வைஃபை, ஜிபிஎஸ், என் எஃப் சி உள்ளிட்ட இணைப்புத் தெரிவுகள்.
கீ போர்டு:
Z10 விசைப்பலகை (கீ போர்டு) மிகவும் எளிதானது, சாஃப்டானது. முந்தைய போன்களில் இல்லாத அளவிற்கு வார்த்தை கணிப்புகள் வசதி உள்ளது. துல்லியம், எடிட் செய்யவேண்டிய தேவையில்லை.
பிளாக்பெரி ஹப்:
Z10-இல் பிளாக்பெரி ஹப் என்பது மெசேஜிங் மையமாகும். இங்கு தொடர்புப் படுத்துவதற்கான விவரங்கள், உரைகள், உடனடி மெசேஜ்கள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவை மெசேஜிங் செண்டரின் மையமாகும்.
பிளாக்பெரி பிரவுசர்
Z10-இல் பிரவுசர் மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிதான கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட எச்.டி.எம்.எல். இணையதளங்களை எந்த வித தடையும் இல்லாமல் காண வசதி செய்யப்பட்டுள்ளது. மல்டிபிள் பேஜஸ், மற்றும் தனிப்பயன் பிரவுசிங் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியங்களில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


earthquake_15மாஸ்கோ : ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியமான சாகாவில் ரஷ்ய நேரப்படி இன்று மாலை 5.15 மணியளவில் மிக வலிமையான 6.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்துக்குள் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஸ்த்&நேரா கிராமம் வரை எதிரொலித்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட சேதங்கள் குறித்தோ, உயிர்ப்பலிகள் குறித்தோ இதுவரை தகவல் எதுவும் பெறப்படவில்லை என்று அப்பிராந்திய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் எரிகல் தாக்கி 1,000 பேர் காயம்

மாஸ்கோ : ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கி ஆயிரம் பேர் காயமடைந்தனர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று காலை இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி நெருப்பு பந்துகள் பறந்து வந்தன. 200 கிமீ சுற்றளவுக்கு இது தெளிவாக

Feb 14, 2013

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

News Service எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய

அற்புத மூலிகை "ஆலிவ்" பற்றி அறிந்திராத தகவல்கள்!


அற்புத மூலிகை "ஆலிவ்" பற்றி அறிந்திராத தகவல்கள்!

News Service நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!

News Service செவ்வாய்க்கிரகத்தின் தரை மேற்பரப்பில் தங்கி அதனை ஆய்வு செய்து வரும் ரோபோட்டிக் விண்வண்டியான கியூரியோசிட்டி சமீபத்தில் முதன் முறையாக ஒரு பாறையைத் துளைத்து அதில் இருந்த் வெளியேறும் தூசிகளை சேகரித்து பரிசோதனை செய்துள்ளது. இது தனது ரோபோட்டிக் கையின் முனையில் உள்ள டிரில்லர் மூலம் செவ்வாயிலுள்ள நடுத்தரப் பாறையொன்றில் 1.6cm விட்டமும் 6.4cm ஆழமும் உள்ள துளையினை ஏற்படுத்தி தூசுத் துகள்களை சேமித்தது. இந்தப் பரிசோதனை குறித்து ஜோன் க்ருன்ஸ்ஃபெல்ட் எனும் கியூரியோசிட்டி செயற்திட்ட உறுப்பினர் ஒருவர் கருத்துரைக்கையில், 'இதுவரை விண்வெளியில் உள்ள வேற்றுக் கிரகமொன்றில் இறங்கி சுயமாகப் பரிசோதனை செய்து வரும் ரோபோக்களிலே மிகுந்த தரமுடையதும் உயர் தொழிநுட்ப வசதிகள் உடையதுமான விண்வண்டியான கியூரியோசிட்டி

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு.

News Service விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
  
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்கும் கற்றாளை...


உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்கும் கற்றாளை...

News Service கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் 'ஆலோக்டின்பி' எனும் பல

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...