May 1, 2013

வேலணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேலணை
Gislanka locator.svg
Red pog.svg
வேலணை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.685° N 79.908° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

பொருளடக்கம்

பெயர் வரலாறு

வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது[1]. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.[1] [2]. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்நாட்டு இளவரசன் வந்து தரையிறங்கி இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார்.[3]

புவியியல் அமைவிடம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைக் கிராமத்தின் அமைவிடம்
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்மானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம் ஆகும்.

வானிலையும் காலநிலையும்

வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலையுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியில் இருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும்.

வரலாற்று குறிப்புக்கள்

வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்தக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தன.
மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று என்று கருதப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்து பழமையான பத்திரங்களில் இருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன[2].

சமூகப்பிரிவுகள்

அரசியல்

அரசியல் தலைவர்கள்

பொருளாதாரம்

வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்தும் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தில் பெரும் பங்குவகிக்கின்றது.

மக்கள் வாழ்க்கை முறை

மக்கள் தொகை

கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள்

வேலணை வங்களாவடி முருகன் கோயில்
  • வங்களாவடி முருகன் கோவில்
  • சிற்பனை முருகன் ஆலயம்
  • வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோயில்
  • வேலணை துறையூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
  • ஆலயம்புலம் கந்தபுராண மரம்
  • தோபுரத்தடி ஞானவைரவர் கோவில்
  • செம்மணத்தி நாச்சியார் ஆலயம்
  • அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
  • தெம்பக்குளம் நால்வர் மடம்
  • தனித்திரு அன்னம்
  • வேலணை மேற்கு பெரியபுலம் மாககணபதிப் பிள்ளையார் ஆலயம்
  • வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
  • பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில்
  • வேலணை துறையூலட இலந்தை ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்
  • மயிலைப்புலம் ஐயனார் ஆலயம்
  • செட்டிப்புலம் காளவாய்த்துரை ஐயனார் ஆலயம்
  • சாட்டி சித்தாத்திரை மாதா கோவில்
  • வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம்

பாடசாலைகள்

துணை நூல்கள்

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமேகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். டொரண்டோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

குறிப்புகள்

  1. 1.0 1.1 இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு வெளியீட்டாண்டு-1989
  2. 2.0 2.1 மாணிக்கவாசகர், ச, வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் வெளியீட்டாண்டு-2006, வெளியீட்டாளர்-வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை
  3. மீ.ப.சோமு, வெண்ணிலவுப் பெண்ணரசி பதிப்பு:சென்னை,பாரி நிலையம், 1967

வெளி இணைப்புகள்

  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்
  • www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்
  • www.velanai.com - வேலணை மக்கள் ஒன்றியம்
  • www.velanaieast.com - வேலனை பெருங்குளம் முத்துகுமாரி அம்மன் ஆலயம் வேலனை
  • www.velanaicentralcollege.com -வேலணை மத்திய மகா வித்தியாலயம்
  • www.velanaimahakanapathi.com -வேலணை மகாகணபதிப்பிள்ளையார்

50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரத்தில் அடைந்து ரஷ்யா சாதனை


விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அடைவதற்கு இதற்கு முன்னர் வரை 50 மணி நேரம் தேவைப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையை 30 முறை சுற்றி வந்த பின்னரே விண்வெளி நிலையத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
ஆனால், ரஷ்யாவில் உள்ள பைக்கனோர் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து சமீபத்தில் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 3 வீரர்கள், ஆறே மணி நேரத்தில் தங்களின் இலக்கை அடைந்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த பவேல் வினோக்ரடோவ், அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி ஆகிய மூவரும் பூமியை 30 முறை சுற்றுவதற்கு பதிலாக 4 முறை மட்டுமே சுற்றிவிட்டு வளி மண்டலத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து சுமார் ஆயிரம் மைல் மட்டும் பயணித்து 6 மணி நேரத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாகச பயணம் தொடர்பாக கருத்து கூறிய ரஷ்யாவின் தலை சிறந்த விண்வெளி வீரர் பவேல் வினோக் ரடோவ், ‘விண்வெளிக்கு செல்பவர்கள், பூமியில் இருந்து புறப்பட்ட 4-வது மணி நேரத்தில் உடல் பளுவை இழப்பது, சில உடல்நல உபாதைகளுக்கு உள்ளாவது போன்ற சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அதன்பிறகு தொடர்ந்து 45 மணி நேரம் பயணம் செய்யும் வீரர்களில் சிலர் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
தற்போதைய புதிய சாதனையால் 6 மணி நேரத்தில் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இறங்கி, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும். பூமியில் இருந்து ஐஸ் கிரீமை கூட கொண்டுச் சென்று உருகும் முன்னர் விண்வெளி நிலையத்தில் அமர்ந்து சாப்பிடலாம்’ என்றார்.

அமெரிக்காவில் பூசணிக்காயொன்றில் இராட்சத வினோத உருவச் சிலைகள்



அமெரிக்காவில் பூசணிக்காயொன்றில் இராட்சத வினோத உருவச் சிலைகள் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இக்காட்சியைக் கண்டவர்கள் தமது வியப்பையும், குதூகலத்தையும் வெளிப்படுத்துகின்றனர் என அதனை அமைத்த சிற்பவியலாளர் தெரிவிக்கிறார்.
இவ்வருடம் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய அளவிலான பூசணிகக்காயில் இவ்வாறான இராட்சத உருவம் அமைத்தனர். அமெரிக்காவின் தாவரப் பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் இராட்சத உருவங்கள் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் கவர்ச்சியானதென பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க சிற்பியான விலா பிரே என்பவரால் இவ்வாறான புதிய உருவமைப்பு பூசனிக்காயில் செய்யப்பட்டது பாராட்டக் கூடியதென தெரிவிக்கப்படுகிறது. இவ் வினோத உருவங்களை சிற்பவியலாளர் செய்வதற்கு 1683 கிலோ நிறையான இராட்சத பூசனிக்காயை பயன்படுத்தியிருக்கிறார்.
pumpkin_001
pumpkin_002
pumpkin_003

நாவிற்கு சுவையூட்டும் அருநெல்லிக்காய்

சிறுநெல்லி சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காய் நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது.
அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

கண் குறைப்பாட்டை நீக்க உதவும் சீப்ரா மீன்கள்


சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண் விழித்திரையில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த மீனில் இருந்து பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப்படும் விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.
நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள் (Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும்.
மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில் அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.
இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட் அல்லிசன் கூறுகையில், நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones) மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன.
இதுவரை கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும் தன்மையுடையன எனவும் தெரிவித்தார்.
மனிதனின் கண்ணுக்கு மிகவும் உபயோகமான ஒரு மருந்து முதல் தடவையாக ஒரு விலங்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதன் அடுத்த கட்டமாக இந்த சீப்ரா மீனில் பழுதான ஒளிக்கூம்புகளைத் திருத்தும் குறிப்பிட்ட ஜீனை (Gene) அடையாளம் காண்பதே எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

இமாச்சலப்பிரதேசம் உள் ளிட்ட வட மாநிலங்களில் இன்று பகல் 12.30 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அப்போது கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நில நடுக்கம் 10 வினாடி முதல் 15 வினாடிகள் வரை நீடித்தது. பாகிஸ்தானிலும் வாகா எல்லைப் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

நில அதிர்வின் தன்மை ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி இருந்தது. சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் இடெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

மே தினம் உருவான வரலாறு..


...

அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல் 1835இல் பிலடெல்பியாவிலும் பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன் வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி,

சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள்

The Best New Samsung Android Phones

வணக்கம் நண்பர்களே..! மொபைல் உலகில் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் மிகச்சிறந்த புதிய ஆண்ட்ராய்ட் போன்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்ததில், விலையில், தரத்தில் சிறப்பு பெற்றவை. சாம்சங் நிறுவனத்தின் போன்களின் பெயர்கள், அந்த போன்களின் படங்கள், அவற்றில் உள்ள மிக முக்கியமான உள்ளடக்க உறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

Samsung Galaxy Mega 6.3 Android mobile Phone


  • 6.5 inch hd touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.7 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8MP Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Mega 5.6 Android mobile Phone


Samsung Galaxy Mega 5.6 android mobile
  • 5.8 inch HD touch screen (6 இஞ்ச் ஹெச்.டி தொடுதிரை)
  • 1.4 GHz Processor (1.7 GHz பிராசசர்)
  • 1.5 GB Ram (1.5 GB Ram)
  • 8/16 GB Internal Memory (8/16 உள் நினைவகம்)
  • 8 Mega Pixel Camera (8 எம்பி கேமரா)
  • Android 4.2.2 OS (புதிய ஆண்ட்ராய்ட் 4.2.2 இயங்குதளம்)
  • Bluetooth, WiFi (ப்ளூ டூத், வைபை)

Samsung Galaxy Fame S6810 Android mobile Phone

கூகிள் ட்ரான்லிட்ரேசனைப் பயன்படுத்தி தமிழில் எழுத

How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும். 

தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம். 

how to type tamil in gamil
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டஃடைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூளையில் பற்சக்கரம் போன்ற படத்தை கிளிக் செய்யவும். இது செட்டிங்ஸ் ஐகான் எனப்படும்.

  • அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும். 
  • இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும். 
  • இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும். 
  • அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும். 
இனி நீங்கள் உங்களுடைய Gmail-ன் முகப்புப் பக்கத்தில் மேல் வலது மூலையில் செட்டிங்ஸ் ஐகானிற்கு பக்கத்தில் இவ்வாறு கூகிள் லாங்குவேஜ் இன்புட் டூல் -ஐ காணலாம். 

அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.

Apr 30, 2013

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று 127வது சர்வதேச தொழிலாளர் தினம்!

!


May 1, 2013

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும் 127வது சர்வதேச மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும்

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்



Posted: 30 Apr 2013
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...