Feb 26, 2014

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கிருஷ்ணகிரி, பிப்.27-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடைப்பெற்றது.

விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான அஸ்லம்ரஹ்மான் ஷெரீப், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மாதன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வேல்மணி, காங்கிரஸ் நகர பொருளாளர் குருந்தப்பன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 806 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது
நைஜீரியா, பிப்.27-

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "எலிவிஸ், அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு அடைத்து உள்ளார்" என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்


இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா


இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா

நியூயார்க், பிப். 26–
பூமியின் நிலம், காற்று, விண்வெளி போன்றவை குறித்து ‘நாசா’ மையம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக செயற்கை கோள்களை பறக்க விட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.
அதன் மூலம் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பூமி குறித்து 34 புதிய ஆய்வு திட்டங்களை நடத்த நாசா முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் பூமியில் உள்ள தண்ணீர் மற்றும் காற்று வீச்சின் வேகம் கணக்கிடப்படும். அதற்காக இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து நாசா ஏவுகணை செலுத்துகிறது. இந்த திட்டம் 7 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இந்த தகவலை நாசா தெரிவித்துள்ளது

நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு கிடைத்த தங்கப் புதையல்

நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு கிடைத்த தங்கப் புதையல்
நியூ யார்க், பிப். 26-

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதியர் நாயுடன் வாக்கிங் சென்றபோது கிடைத்த தங்க நாணய புதயலை கண்டு திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.

5, 10 மற்றும் 20 அமெரிக்க டாலர் நாணயங்களாக 1427 தங்க நாணயங்கள் இவர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1847 மற்றும் 1894-ம் ஆண்டுகளுக்கிடையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.

நாணய தயாரிப்பு கூடத்தில் இருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே தங்கசாலையில் இருந்து கடத்திவந்த சிலர் இவற்றை பிற்கால தேவைக்காக பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நாணயங்களின் தற்கால முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தான். ஆனால், இவற்றில் சில நாணயங்கள் மிகவும் அரிதானவை என்பதால் இவை ஒவ்வொன்றும் 10 லட்சம் டாலர்கள் வரை விலை போகும் வாய்ப்பும் உள்ளது என பழங்கால நாணயங்களை வாங்கி விற்கும் சிலர் தெரிவித்தனர்.

எனினும், வாக்கிங் போகும் போது ஒரு மரத்தின் கீழே இருந்த மண்ணை நாய் தோண்டிய போது இந்த தங்கப் புதையல் கிடைத்திருப்பதால், இதை நாயால் கிடைத்த அதிர்ஷ்டம் எனவே கருத வேண்டியுள்ளது.

Feb 24, 2014

சென்னை பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடுக்கிடும் புதிய தகவல்கள்


சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவருடைய மகள் உமாமகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் தங்கி கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற உமாமகேஸ்வரி, அதன்பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை பாலசுப்பிரமணி கடந்த 15-ந் தேதி மகளை காணவில்லை என கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கடந்த 22-ந் தேதி சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் உமாமகேஸ்வரி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த உடை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து போலீசார் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உமாமகேஸ்வரியின் கழுத்து, அடிவயிறு பகுதியில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார்

சில தகவல் துளிகள்




தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. 

வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை.

6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.

தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. 

இது தன் சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்புக், அவர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்ட தாகவும், இவர்களின் நிதி நிலை குறித்த தகவல்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் தெரிவித்தது. 

எவ்வளவு திறமையான சாப்ட்வேர் வல்லுநர் களைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், 100 சதவிதம் பிழை இல்லாத அப்ளிக்கேஷன் களை அமைக்க இயலாது என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா: ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள ராட்சத மாம்பழம் திருட்டு



mangoங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள்.
ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது.
சுமார் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக காணாமல் போனதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். இது பற்றிய தகவல் அறிந்த சுற்றுலா துறை அதிகாரிகள் விரைந்தோடி வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
நள்ளிரவு 2 மணியளவில் ராட்சத கிரேனுடன் அப்பகுதிக்கு வந்த சிலர் அந்த மாங்காய் சிற்பத்தை பீடத்துடன் பெயர்த்து எடுத்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. ’இவ்வளவு பெரிய ராட்சத மாம்பழத்தை திருடி சென்றவர்கள் அதை அவ்வளவு சுலபமாக மறைத்து வைக்க முடியாது. விரைவில் அந்த சமூக விரோதிகள் பிடிபட்டு விடுவார்கள். மாம்பழத்தையும் மீட்டு பழைய இடத்திலேயே நிறுத்தி வைப்போம்’ என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன.


இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க...


பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…

இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

Feb 22, 2014

சிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை

 


சிவனொளி பாத (Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் நல்ல தண்ணி நகரிலிருந்து இரத்தினபுரியில் உள்ள பெல்மதுல்ல ரஜமஹா விகாரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் பௌர்ணமி தினத்தில் மீண்டும் யாத்திரை காலம் ஆரம்பிக்கும். நிரத்தரமாக வெளிச்சம் தரக் கூடிய மின்குமிழ்கள் மலையின் உச்சியில் வெளிச்ச வீடு போல பொருத்தப்பட உள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இவ் வருடம் பெப்ரவரியில் குறிப்பிட்ட ஒருநாளில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் தர்சிக்கச் சென்றிருக்கின்றார்கள்.

Thanks :- goldensrilanka.com
திருமணமாகிய போது கணவர் வேலை புரிந்த இடம் பதுளை மாவட்டம். ரயிலில் செல்லும்போதே ஹட்டனுக்கு அப்பால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நின்ற மலைச் சிகரம் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்தபோதே செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

சேர்ந்து செல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இவ்வளவு தூரம் ஏறமுடியாது என்றார்கள் சிலர். எனது ஆசையும் நிறைவுறாது தொடர்ந்தது. பல வருடங்களின் பின்புதான் ஒரு சித்திரை வருடப் பிறப்பு செல்வதற்கான நேரம் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைக்கு இப் பயணத்தில் எங்கள் சகோதரர் குடும்பத்தாரையும் நாத்தனார் குடும்பத்தாரையும் கூட அழைத்துச் சென்றோம்.

ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை




முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!!!ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.
முருங்கையின் நன்மைகள் :
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...