Mar 31, 2014

தேன் வேட்டையர்கள்

தேன் வேட்டையர்கள்
மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன்.
அன்றாட வாழ்வில் உணவுகளுடன் சேர்த்து தேன்களை ருசிக்கும் மனிதன் இந்த தித்திப்பான தேன் எவ்வாறு நம்மை வந்து சேர்ந்தடைகின்றன என்ற கதையை அவசியம் தெரிந்துகொள்ளதான் வேண்டும்.
தேன் வகைகளில் சுத்தமான தேன் என்று பல்வேறு கடைகளிலும், பல்வேறு இடங்களிலும் கூவி கூவி விற்றாலும் உண்மையான தேன் என்றால் அது மலைத்தேன் தான்.
அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கலப்படமற்ற தேனாக இந்த குரூங்
திசை மாறி தேடப்படும் மலேசிய விமானம்!

இந்தியப்
 பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மாற்றப்பட்டுள்ளது.மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் திகதி அதிகாலை நடுவானில் மாயமானது.
அந்த விமானத்தின் நிலைமை என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

நீரிழிவு நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள்

நீரிழிவு நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் என்பது அவர்களது தவறான உணவு பழக்கவழக்கங்களால் தற்போது அதிகரித்து வருகிறது. பாதி சமைக்கப்பட்ட உணவு பொருள்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் மல்டிநேசனல் கம்பெனிகளால் ஊக்குவிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி, அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்துகிறது. இதில் தற்பொழுது குறைந்த வயதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான உடல் எடை நீரிழிவு

பச்சைக் கீரைகள்

பச்சைக் கீரைகள் ஊட்டசத்துக்களின் உற்பத்தி மையங்கள் என்று கருதப்படும் கீரைகளில் பைட்டோநியூட்ரிஷன் சத்துக்களும், வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் உள்ளதால் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சி இவற்றை சாப்பிடுவதால் ஊக்கம் அடைவதை யாராலும் மறுக்க முடியாது. USDA-வின் பரிந்துரைகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 கோப்பையாவது பச்சைக் கீரைகளை சாப்பிடவேண்டும்
முட்டைகள் புரதச்சத்து மிகுந்த உணவாக நன்கு அறியப்பட்டிருக்கும் முட்டையில், மூளையின் செயல்பாடுகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சத்துக்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல், முக்கியமான வைட்டமின்களை அளிக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்களை வரவழைக்காத வகையில் கொழுப்பின் அளவுகளைகட்டுப்படுத்தவும் முட்டை உதவுகிறது. 
வேர் காய்கறிகள் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் அடங்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த வகையில் வருகின்றன. இவை பழங்காலங்களில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதர்கள் சேகரித்து வைக்கும் உணவுப் பொருட்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

 வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பழங்கள் மரங்களில் காய்த்துக் கிடக்கும் கனிகளும், காய்களும் தான் நாடோடி வேட்டையனாக திரிந்து கொண்டிருந்த பழங்கால மனினின் மற்றுமொரு முக்கிய உணவாக இருந்தது. இந்த காய்கள் மற்றும் கனிகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றிற்கு குறையொன்றும் இருக்காது. மிகவும் அதிகமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து விடும் பலவீனத்தை இவை தடுக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளதால் எண்ணற்ற பிரச்சனைகளில் நாம் சிக்குவதையும் அவை தவிர்க்க உதவுகின்றன. நிறைய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் உதவுவதால், நமது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படுகிறது.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து

கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.
பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.
முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்

 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் மட்டுமே மனத்தெளிவை பெற்று, நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தை தடுத்து, நோய்களில் இருந்து எளிதில் குணமடையும் சக்தியை பெற்று, அதிக ஆற்றல் திறனுடன் விளங்க முடியும். நல்ல உணவுமுறையால், உடலுக்கு நல்ல ஆற்றலும், உடம்பில் உள்ள நீண்ட கால நோய்களை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு கிடைக்கும். வயதான காலத்தில் நல்ல உணவு முறையால், நல்ல மனநிலையையும், உணர்வுகளில் நிலைப்பாட்டையும் பெற முடியும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து தேவைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.வயதான பிறகு கலோரிகளை எரிக்கும் திறன் நமது உடலுக்கு குறைந்து விடும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். தவறான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் சிகரெட் பிடித்தல் போன்ற சில காரணங்களாலேயே பொதுவாக

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்

 கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது

Mar 30, 2014

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...