Apr 6, 2014

அகத்திக் கீரை

"அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும்.

அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவா¢ன் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அன்றியும் இதன் பூவானது வளைந்து கோணலாக, வக்கா¢த்து, அ¡¢வாள் போல் காணப்படுவதினால்

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி

கா¢சலாங்கண்ணி என்னும் இந்தக் கீரை பாரத நாடெங்கும் பரந்து காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி வரை இது தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு வகைக் கீரையாகும்.

இமயமலைச் சா¢வுகளில் இந்தக் கீரை காணப்படுவதை பயி¡¢யல் அறிஞர்கள் கண்டிருக்கின்றனர். இந்தக் கீரையைக் கா¢சலாங்கண்ணி, கா¢சனாங்கண்ணி, கையார்ந்த கீரை, கா¢ப்பான், கா¢யசாலை, கா¢ச்சான், கா¢சாலை, கைவீசி, கா¢க்கை, கா¢க்கண்டு, கா¢ச்சால், பொற்றிழைக் கா¢ப்பான், பொற்பாவை, பொற்றிலைப் பாவை, பொற்கொடி, மஞ்சள் பாவை என்னும் வேறு பெயர்களில் தமிழ் மூலிகை நூல்கள் விவா¢க்கின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலை படுகடாம் கையாந்த கரை என்னும் இக்கீரையைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகிறது.

பற்களின் பாதுகாப்பு

பற்களின் பாதுகாப்பு

- Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,

பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் உணவுகளை குண்டூசியால் குத்தி எடுக்கலாமா?

குண்டூசி, ஊசி போன்றவைகளால் குத்தி எடுக்கக் கூடாது. ஒரு நூல் கொண்டு இரண்டு பற்களுக்கிடையில் கொடுத்து எடுக்கலாம். குண்டூசி, குச்சி, ஊசி போன்றவற்றால் பல் இடுக்குகளைக் குத்தும்போது ஈறுகள் பாதிக்கப் படுவதோடு, நிறைய சந்துகள் உண்டாகி, கிருமித் தொற்றும் அதன் காரணமாக நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகா¢க்கின்றன.


பற்களில் ஏன் கூச்சம் வருகிறது? எனக்கு இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்கூச்சம் வருமா? மற்ற எந்த வகைகளில் பற்கூச்சம் வருகிறது?

பற்களை அறிந்தோ அல்லது அறியாமலோ கடிப்பதை பல் வெருவுதல் (Bruxism) என்கிறோம். பல் வெருவுதலால் பற்சிப்பி தேய்ந்து பல்லில் கூச்சம்

கறிவேப்பிலை :

கறிவேப்பிலை :

இமயம் முதல் குமா¢ வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக் கிடப்பது கருவேப்பிலையாகும். இக்கருவேப்பிலை இந்தியாவில் ஏராளமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராகக்கூடிய ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது; எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே குறிப்பிடுகின்றோம்.

கருவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது.

இதனைக் கறிவேப்பிலை, கருவேப்பிலை, கறிய என்றும் குறிப்பிடுவார்கள். கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறிவேப்பிலை வேப்பம் இலையைப் போல் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது கறுப்பாக

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

பெயா¢ல் தான் இனிப்பே தவிர சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளும் அனுபவங்களும் கசப்பானவையாகத்தான் உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி இந்தியர்களைச் சர்க்கரை நோய் அதிகம் தாக்குகிறது என்று அறியவந்துள்ளோம்.

இந்தியாவில் ஏறத்தாழ 3 கோடி முதல் 3 1/2 கோடி மக்கள் இதய நோயால் அவதிப்படுவதாகவும், வருங்காலத்தில் மேலும் 3 1/2 கோடி மக்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், நகரங்களில் வசிப்போர்; கிராமங்களில் வசிப்போரை விட அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளாகும். உலக சுகாதார அமைப்பும் 2025 வாக்கில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 5 முதல் 5 1/2 கோடியாக இருக்கலாம் என்று கூறுகிறது. ஆகவே, இந்தியர்களாகிய நமக்கு, இந்நோய் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகமாகவே தேவைப்படுகிறது அல்லவா.

சர்க்கரை நோயின் வகைகளையும் அறிகுறிகளையும் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம். சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 என்று இருவகை உள்ளன.

டைப் 1 வகையில் காணப்படும் அறிகுறிகள் :

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, அதிகம் சாப்பிட்டாலும் எடை குறைதல், எப்போதும் களைப்பும் சோர்வும் தலைச்சுற்றல் சில நேரங்களில் நினைவு இழத்தல்.

இந்த வகை சர்க்கரை நோய் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குவதால் மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 2 அல்லது 3 தங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அன்னையர் உடனே காலம் கடத்தாமல் மருத்துவா¢டம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர் உடனே குழந்தைக்கு இன்சுலின் செலுத்துவார். இதைச் செய்யத் தவறினால் குழந்தை கோமா என்ற நிலைக்குத் தள்ளப்படலாம்.

அதன் பிறகு சிகிச்சை முறைகள் கடுமையாகலாம். ஆகவே, இன்சுலின் ஊசி ஒன்றுதான் டைப் 1 சர்க்கரை நோய்க்குத் தீர்வு.

டைப் 2 வகையில் காணப்படும் அறிகுறிகள் : இவ்வகை சர்க்கரை நோய்க்கு டைப் 1 அறிகுறிகளே மிதமாக இருக்கும். அறிகுறிகள் மிதமாக இருப்பதாலேயே இதனை அலட்சியமாக விட்டு விடக்கூடிய போக்கும் மக்களிடையே காணப்படுகிறது. மேலும் ஆறாத ரணங்கள், ஆறாத தோல் தொற்று அந்தரங்க உறுப்புகளில் காளான் தொற்று பாதங்களில் உணர்ச்சியற்ற தன்மை, எ¡¢ச்சல் உணர்ச்சி ஆகியனவும் டைப் 2 டையாபடீசின் அறிகுறிகளாகும்.

மேலும் அதிக உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பெற்றோர்க்கு சர்க்கரை நோய் இருத்தல் போன்ற காரணங்களும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகா¢க்கச் செய்யக்கூடும்.

ஏறத்தாழ 80% மக்கள் இந்நோயினை ஆரம்ப நிலையில் அறிவதில்லை. வேறு ஏதாவது ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறும்போதோ அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும்பொழுதோதான், சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதயம், கண்கள், கிட்னி போன்ற முக்கிய பகுதிகளைத் தாக்கி, அமைதியாக அழித்து விடும் இந்தச் சர்க்கரை நோய் என்பதனை உணர்ந்து, 35 வயதைக் கடந்தவர்கள், வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பா¢சோதனை செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோயை வெறும் அறிகுறிகளை வைத்துக்கண்டறிவது கடினம். சில சமயங்களில் அ¡¢ப்பாலோ, சிறுநீர் கழிக்கையில் வலியோ, எ¡¢ச்சலோ இருப்பதாலோ, இந்த வகையான சர்க்கரை நோய் என்று கண்டறியலாம். ஆகவேதான் கர்ப்பிணிகளுக்கு 3 மாதங்களுக்கொருமுறை குழந்தை பிறக்கும் வரை சர்க்கரை நோய்க்கான பா¢சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ள பெண்கள்; திட்டமிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திய பின்னரே கருவுறுதல் வேண்டும். இதனால் குறையுள்ள குழந்தை பிறப்பது தடுக்கப்படும். கர்ப்பிணிகள் தங்கள் சர்க்கரையின் அளவை, அடிக்கடி பா¢சோதித்து, கட்டுக்குள் கொண்டுவராவிடில் 4 கிலோ கிராம் நிறையுள்ள பொ¢ய குழந்தைககள் பிறப்பதற்கும் அக்குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படவும் வழிவகுத்தவர்களாவோம். சர்க்கரை நோய் ஒரு குறைபாடே தவிர கிருமிகளால் ஏற்படும் ஒரு வியாதி அல்ல. ஒரு தடவை இரத்தத்தில் அதிக சர்க்கரை காணப்பட்டால் உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி, மருந்து இவற்றால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எப்போதும் போல் இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் வாழவும் முடியும்.


கொத்துமல்லிக் கீரை

கொத்துமல்லிக் கீரை

நாம் உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் கீரைகளில் கொத்துமல்லிக்கீரை மிக முக்கியமானது. இது கறிவகைகளிலும் உணவிலும் பச்சையாகவே சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

கொத்துமல்லியானது நெடுங்காலமாகவே பயி¡¢டப்பட்டு வரும் கீரைகளில் ஒன்றாகும். இந்திய நாட்டின் வேதகாலத்திற்கு முன்பே இக்கீரை பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தொ¢ய வருகிறது. கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்திய கல்லறைகளில் கொத்துமல்லி காணப்படுகிறது. இதிலிருந்து மனித இனத்தோடு இக்கீரையின் தொன்று தொட்ட தொடர்பு நன்கு புலப்படும்.

கொத்துமல்லி மத்தியதரைக்கடல் பகுதிகளைச் சார்ந்த ஒரு பயிராகும். இந்தியாவிலும், ரஷ்யாவிலும், மத்திய ஐரோப்பிலும், ஆசியா மைனா¢லும், ஆப்பி¡¢க்கா நாடுகளிலும் இது மிகுதியாகக் காணப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் தான் இது மிகுதியாகப் பயி¡¢டப்படுகிறது. உலக நாடுகளுக்கிடையே ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது இந்தியாவில்தான்

முளைக்கீரை

முளைக்கீரை

முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயி¡¢டப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவம், மருத்துவச் சிறப்புக்காகவு பயி¡¢டப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயி¡¢டப்பட்ட நிலங்களிலும், தா¢சு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.

முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத தண்டுக்கீரை எனவும் கூறப்படுவாகக் குறிக்கிறார்கள். ஏனெனில் இவ்விரண்டு கீரைகளினுடைய பயி¡¢யல் பெயர்கள் "அமரந்தஸ்" "காஞ்செடிகஸ்" (Amarantus Gangeticus) என்றிருப்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும். ஆனால் இவ்விரு கீரைகளும் வேறு வேறானவை.

முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை.

இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்

இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகா¢க்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீ¡¢ல் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொ¡¢யலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5 பூண்டு.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5
பூண்டு.

1. மூலிகையின் பெயர் -: பூண்டு.
2. வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3. தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4. தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5. பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

6. .வளரியல்பு -: வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

வெள்ளைப் பூண்டு 30 மருத்துவ குணமும் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பக்குவமுறையும்

 

         வெள்ளைப் பூண்டு 30 மருத்துவ குணமும்         
               சமையலில் சேர்த்துக் கொள்ளும்
                                பக்குவமுறையும்





நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது    என்பது  எவ்வளவு பேருக்குத் தெரியும் 

நான் பூண்டு மருத்துவத்தை பற்றி சொல்ல வில்லை அதை சொன்னால்   
கட்டுரை விரிவாக போய்விடும் (வேற எத சொல்ற  என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது ) 
பூண்டைதினமும் சாப்பிட்டால் எது எதை விட்டு பாதுகாக்கும் 
என்று மட்டும் தான் சொன்னேன் 

( புண்டு மருத்துவம் மற்றும் பூண்டின் வித விதமான சமையல் அடுத்த பதிவில் )


1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது,

2)இரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)மாரடைப்பு மற்றும் இதய  நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

பூண்டு..!




நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...